India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமருக்கு உண்மையிலேயே விளையாட்டு வீரர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், உரையாடலை பதிவு செய்யாமல் அழைக்கலாம் என வினேஷ் போகத் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஒலிம்பிக் தகுதி நீக்கத்திற்கு பிறகு பிரதமர் மோடியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், ஆனால் தான் பேச மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உரையாடலை பதிவு செய்வதாக அதிகாரிகள் நிபந்தனை விதித்ததாகவும் கூறினார்.
டெல்லியில் பிரைவேட் ஹாஸ்பிடலில் பணியில் இருந்த டாக்டர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயத்துடன் வந்த 2 இளைஞர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பின் டாக்டரை சந்திக்க வேண்டும் என கேட்டு, அவரது அறைக்குச் சென்று சுட்டுக்கொன்று விட்டு தப்பிச்சென்றுள்ளனர். தொடர்ந்து, CCTV காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
‘G.O.A.T’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். நீளம் கருதி வெட்டப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், VFX பணிகள் நிறைவடையாததால் தியேட்டர் வெர்ஷன் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா குறித்து தான் கூறிய <<14252659>>கருத்தை வாபஸ்<<>> பெறுவதாக தெலங்கானா அமைச்சர் <<14254655>>கொண்டா சுரேகா<<>> தெரிவித்தார். தனது கருத்தின் நோக்கம், ஒரு தலைவர் பெண்களை இழிவுபடுத்துவதைக் கேள்வி கேட்பதே தவிர, உணர்வுகளைப் புண்படுத்துவது அல்ல என்று விளக்கமளித்தார். மேலும், தன்னம்பிக்கையுடன் சமந்தா வளர்ந்த விதம் தனக்கு ஒரு உதாரணம் எனவும், தனது கருத்துகளை நிபந்தனையின்றி வாபஸ் பெறுவதாகவும் கூறியுள்ளார்.
➤உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் குளோபல் செஸ் லீக் தொடர் இன்று லண்டனில் தொடங்குகிறது. ➤ஆஸி. அணிக்கு எதிரான U19 டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. ➤ China Smash 2024 டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் மனுஷ் – மானவ் இணை முன்னேறியது. ➤உலக ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் பதக்கப்பட்டியலில் இந்தியா (14) முதலிடத்தில் உள்ளது.
➤ஈரான் நடத்திய வான்வழி தாக்குதலில், இஸ்ரேலின் மொசாட் தலைமை அலுவலகம் அருகே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. ➤மெக்சிகோ நாட்டின முதல் பெண் அதிபராக ஷீன்பாம் பதவியேற்றார். ➤பாகிஸ்தானின் ஹார்னாயில் பலூச்சி தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். ➤NATO அமைப்பின் புதிய பொது செயலாளராக நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் மார்க் ரூட் பதவியேற்றுக் கொண்டார்.
ஒருவரின் ஜாதகத்தில் குரு உக்கிர கிரகமாக இருந்தாலோ, கோசார ரீதியாக கெட்டவரானாலோ குரு தோஷம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதை போக்க வியாழக்கிழமை விரதம் இருந்து ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலின் தீர்த்த குளத்தில் நீராடி, பிருகஸ்பதிக்கு விரதமிருந்து, மஞ்சள் நிற வஸ்திரம் & வெண் முல்லை சாற்றி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து, 24 தீபங்களை ஏற்றி, குரு காயத்ரி பாடி வழிபட்டால் குரு தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. பீப்பாய் 71 டாலரில் இருந்து 5% அதிகரித்து 75 டாலராக உள்ளது. உலகில் மூன்றில் ஒரு பங்கு நாடுகளுக்கு தற்போது ஈரானில் இருந்து எண்ணெய் வழங்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப Petrol, Diesel விலையை இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. இதனால், Petrol விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பைபர், ஏர் பைபர் ஆகியவை கட்டண அடிப்படையில் பார்த்தால், ஏறக்குறைய ஒரே மாதிரியான பிளான்களை கொண்டுள்ளன. ஆனால், பைபர் கனெக்ஷனை பொறுத்தவரையில், அன்லிமிடேட் டேட்டா கிடைக்கும். அதுவே, ஏர் பைபரில் மாதம் 1,000 ஜிபி என்ற லிமிட் வைக்கப்படுகிறது. அதிக நெட் தேவை இருப்பவர்கள் பைபர் கனெக்ஷனும், பைபர் கனெக்ஷன் பெறமுடியாதவர்கள் ஏர் பைபர் கனெக்ஷனும் எடுக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் சாரதிய நவராத்திரி இன்று தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் நாளில் வீட்டில் கலசம் நிறுவப்படுகிறது. நல்ல நேரத்தில் நிறுவப்படும் இந்த கலசத்திற்கு 9 நாள்களுக்கு வழிபாடு நடத்தப்படும். இதனால், மனமகிழ்ச்சி அடையும் துர்கா தேவி, நமது வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். கொலு வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி கொலுவை அமைக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.