news

News October 3, 2024

இதுதான் உலகிலேயே கொடிய சனாதனம்: சீமான்

image

கருணாநிதியின் பேரன், ஸ்டாலின் மகன் என்பதை தவிர்த்து உதயநிதிக்கு, துணை முதல்வராக என்ன தகுதி இருக்கிறதென சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பிறப்பினாலேயே துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு கொடுத்திருப்பது தான் உலகிலேயே கொடிய சனாதனம் என விமர்சித்த அவர், தமிழக அமைச்சரவையில் நிகழ்ந்தது உண்மையான மாற்றமாக ஏற்கமுடியாது என்றார். மேலும், இது 2026 தேர்தலுக்காக நடத்தப்பட்ட நாடகம் எனக் கூறியுள்ளார்.

News October 3, 2024

‘வேட்டையன்’ படத்திற்கு தடை விதிக்க மறுப்பு

image

‘வேட்டையன்’ படத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்க கோரி பழனிவேல் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், படத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தனர். மேலும், தமிழக அரசு, சென்சார் போர்டு மற்றும் லைகா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

News October 3, 2024

பதின்வயதினரை பாதிக்கும் மைக்ரேன் தலைவலி!

image

பதின்ம வயதினரிடையே நாள்பட்ட ஒற்றைத் தலைவலி (Chronic Migraine) அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு மன அழுத்தம், சோர்வு, தூக்கமின்மை காரணமாக இருக்கலாமெனக் கூறப்படுகிறது. பல மணிநேரங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கும் இந்த வலியால் அசௌகரியம் ஏற்படும். குமட்டல், வாந்தி, ஒளி, ஒலி உணர்திறன் மாறுபாடுகளை ஏற்படுத்தும் என்பதால் அறிகுறிகள் இருப்பதாக உணர்ந்தாலே மருத்துவரை அணுகுங்கள்.

News October 3, 2024

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமின்

image

மாற்றுத் திறனாளிகளை அவமதித்ததாக கைதான மகாவிஷ்ணுவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது. தனது முழு பேச்சை கேட்காமல் பொய் வழக்கு பதியப்பட்டதாக அவரது தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், கைதாகி ஒரு மாதம் கழித்து அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

News October 3, 2024

போன் பேட்டரியை பராமரிப்பது எப்படி?

image

மொபைல் போனில் 20%க்கு குறைவாகவோ அல்லது 80%க்கு அதிகமாகவோ இருக்கும்போது பேட்டரியை சார்ஜில் போடக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். அவ்வாறு சார்ஜ் செய்தால் பேட்டரி நீண்ட காலம் உழைக்காது என்கிறார்கள். லித்தியம், அயர்ன் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்யும்போது அவை சூடாகும் வாய்ப்புகள் அதிகமாகும். அதேநேரம், பேட்டரியில் பூஜ்ஜிய சார்ஜ் இருக்கும் வரை போனை பயன்படுத்தினால் அதன் திறனை குறைத்துவிடும்.

News October 3, 2024

Recipe: வரகு அரிசி சிமிலி உருண்டை

image

வாணலியில் எள், தோல் நீக்கிய வேர்க்கடலை, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து, சலித்து எடுக்கவும். பாத்திரத்தில் வரகு அரிசி மாவுடன் (300 g) சிறிது நீர் & உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, அடை போல சுடவும். இவை ஆறியதும் மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டைகளாகப் பிடித்தால் சுவையான வரகு அரிசி சிமிலி உருண்டை ரெடி.

News October 3, 2024

சிறந்த பங்கு சந்தை: 2ஆம் இடம் பிடித்த இந்தியா

image

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், உலகளவில் சிறந்த பங்குச் சந்தைகள் பட்டியலில், இந்தியா 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. Top 5 சந்தைகள் பட்டியலில், ஹாங்காங், சிங்கப்பூர் முறையே 1 & 3வது இடத்தைப் பிடித்துள்ளன. இந்திய பங்குச் சந்தையில், Mutual fund சார்ந்த திட்டங்களில் ₹1.80 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அந்நிய முதலீட்டாளர்கள் ₹92,400 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி குவித்துள்ளனர்.

News October 3, 2024

ஈஷா யோகா மையத்தில் விசாரணைக்கு தடை

image

ஈஷா யோகா மையத்தில் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியதை எதிர்த்து ஈஷா சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதன் விசாரணையில், ராணுவத்தையோ, காவல்துறையையோ இதுபோன்ற ஸ்தாபனத்தில் அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் கண்டித்தனர். மேலும், ஈஷா மையத்தில் உள்ள நபர்களிடம் நீதித்துறை அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தலாம் எனவும் அறிவுறுத்தினர்.

News October 3, 2024

Finance Tips: எது சிறப்பான முதலீடாக இருக்கும்?

image

சிறப்பான முதலீடு என்பது வயது, வசதி, வாய்ப்பு, இலக்கு, காலம் ஆகியவற்றைப் பொறுத்து, நபருக்கு நபர் மாறுபடக்கூடும். பொதுவாக அஞ்சலகத் திட்டங்கள் என்பவை நிலையான, உறுதியான, மற்றவற்றைவிட ஓரளவுக்கு கூடுதலான வட்டி தரக்கூடிய சேமிப்பு முறை எனலாம். இந்தியாவைப் பொறுத்தவரை அரசே India Post Payments Bank மூலம் பல்வேறு முதலீடு & சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதால் அதில் நம்பிக்கையுடன் பண த்தை சேமிக்கலாம்.

News October 3, 2024

ஒரே நாளில் ₹6 லட்சம் கோடி வைப் அவுட்

image

இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு ஒரே நாளில் ₹6 லட்சம் கோடி சரிந்து ₹469 லட்சம் கோடியாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 300 புள்ளிகள் சரிந்து 25,490 புள்ளிகளுடனும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 990 புள்ளிகள் சரிந்து 83,275 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம், அதிக வர்த்தக மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் சந்தை சரிந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!