India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா சுதந்திரம் அடைந்து முதல் 22 ஆண்டுகள், ரூபாய் நோட்டுகளில் தஞ்சை பெரிய கோயில், புலிகள், மான் உள்ளிட்ட கலாச்சார அடையாளங்களே அச்சிடப்பட்டன. காந்தியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 1969ல் தான் முதன்முதலில் அவரது புகைப்படம் அச்சிடப்பட்டது. அதையடுத்து, 1996ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ₹500 ரூபாய் நோட்டுக்களில் அச்சிடப்பட்டு, அந்த நடைமுறை தற்போது வரை நீடிக்கிறது.
உடல் சூட்டை தணிப்பதோடு ராஜ உறுப்பான சிறுநீரகங்களை DETOX செய்யும் ஆற்றல் கொத்தமல்லிக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதில் உள்ள ஃபிளாவனாய்டுஸ் & கரோட்டினாய்டுஸ் கூறுகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றை போக்கி சீர்படுத்துகிறது. எனவே, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் கொத்தமல்லி இலைகள், இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து, 15 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, ஆறியப் பின் அதை குடிநீராக குடிக்கலாம்.
’விஜய் 69’ படத்தில் நடிகர் நரேன் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், பிரியாமணி ஆகியோர் இணைந்துள்ளதாக ஏற்கெனவே அறிவித்து இருந்த நிலையில், தற்போது நரேன் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அடுத்தது யாராக இருக்கும்?
‘BJP Free Recharge Yojana’ என்ற பெயரில் PM மோடி 3 மாதங்களுக்கு இலவச செல்போன் ரீசார்ஜ் சேவை வழங்குவதாக செய்தி ஒன்று வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. அந்த சலுகையை பெற, லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும் என, அதனுடன் லிங்க் ஒன்றும் உள்ளது. ஆனால், இது முற்றிலும் போலியானது என மத்திய அரசின் ‘PIB Fact Check’ தளம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த லிங்க்கை கிளிக் செய்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
சங்குப்பூவில் தயாரிக்கப்படும் குடிநீர், நீரிழிவு நோயாளர்களின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக Complementary & Alternative Medicine எனும் ஆய்விதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. டானின்ஸ், ரெசின், கரோட்டினாய்ட்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இலைச்சாறோடு, இஞ்சிச்சாறு சம அளவெடுத்து, அரைக்கரண்டி அளவு உண்டு வந்தால், நுரையீரல் பாதை சார்ந்த நோய்களின் தீவிரம் குறையும் எனக் கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், வழக்கறிஞர் ஒருவரை கடுமையாக கண்டித்துள்ளார். எவ்வளவு தைரியம் இருந்தால் தனது உத்தரவை கோர்ட் மாஸ்டரிடம் எப்படி சரிபார்க்கலாம் எனவும், நாளை தனது வீட்டிற்கு வந்து என்ன செய்கிறேன் என விசாரிப்பீர்களா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வழக்கறிஞர்கள் புத்தியை இழந்துவிட்டார்களா எனவும் அவர் காட்டமாக கூறியுள்ளார்.
சாவர்க்கர் பிராமணராக பிறந்தாலும், Beef உள்ளிட்ட அசைவ உணவுகளை சாப்பிட்டார் என கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மூத்த நிர்வாகி அசோக், காங்கிரசார் இந்துக்களை மட்டும் தாக்கிப்பேசுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், MH துணை முதல்வர் பட்நாவிஸ், சாவர்க்கரை காங். தொடர்ந்து அவமதித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் நீதிக்கும் நேர்மைக்கும் மிகுந்த முக்கியத்துவம் தருவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மன அடக்கம், புலனடக்க ஒழுக்கம், வீரம், விவேகம் உடைய நீங்கள் எந்தப் பாகுபாடும் பார்க்காமல், யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ, அவருக்கு ஆதரவளிப்பீர்கள் என்று நந்தி வாக்கியம் உங்களைப் பற்றிக் கூறுகிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாக, நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில் வடிவேலு வழக்கு தொடர்ந்திருந்தார். ₹5 கோடி மானநஷ்டஈடு கேட்டு தொடர்ந்த வழக்கில், சிங்கமுத்து இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், வடிவேலுவின் வெற்றிக்கு தானே காரணம் என்றும், தன்னை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் 27ம் தேதி விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் EVKS இளங்கோவன் கேள்வி எழுப்பியபோது, அனைவரின் வீட்டு பிள்ளையாக இருக்கும் விஜய் கட்சி ஆரம்பித்திருக்க வேண்டாம் என்றார். மேலும், நீட் எதிர்ப்பு உள்ளிட்டவற்றை பேசும் விஜய், அதே கொள்கை கொண்ட திமுக, காங்கிரஸில் சேர்ந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.