India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் மதச் சுதந்திரம் மோசமடைந்து வருவதாகவும், இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமெரிக்க ஆணையம் (USCIRF) குற்றஞ்சாட்டியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, USCIRF அரசியல் நோக்கம் கொண்ட ஒருசார்பு அமைப்பு என விமர்சித்துள்ளது. மேலும், உலகநாடுகள் மத்தியில் இந்தியாவைப் பற்றி தவறாக சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி இது எனவும் குறை கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. *மதுரை-அருள், *செங்கல்பட்டு -ஜி.சிவசங்கர், *குமரி- ராமலட்சுமி, *சேலம்-தேவி மீனாள்,*வேலூர்-ரோகிணிதேவி, *விருதுநகர்- ஜெயசிங், *கரூர்-லோகநாயகி, *தேனி- முத்துசித்ரா, *திருச்சி-குமாரவேல், *கள்ளக்குறிச்சி-பவானி, *கீழ்ப்பாக்கம்-லியோ டேவிட், *புதுக்கோட்டை- கலைவாணி, *ஈரோடு-ரவிக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் வேலையை விட்டுவிட்டு தவெக மாநாட்டுக்கு வர வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் பேசியது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி, விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவரின் வீட்டை முற்றுகையிடுவோம் என எச்சரித்துள்ளது. மேலும், பதவி சுகத்துக்காக இளைஞர்களின் வாழ்க்கையை சீர்குலைக்க நினைக்கும் தவெக மாநாட்டுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
மகளிர் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை 16 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த BAN அணி 20 ஓவர்கள் முடிவில் 119/7 ரன்கள் எடுத்தது. BAN அணியில் சோபனா மோஸ்டரி அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய SCO அணி 20 ஓவரில் 103/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
தொலைக்காட்சி நேரலையில் தனது நடிப்பை பாராட்டிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு, நடிகர் யோகி பாபு X தளத்தில் நன்றி தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த பவன், திரையில் உங்கள் படைப்புகள் தனித்துவமான கவர்ச்சியை அளிக்கின்றன என புகழ்ந்துள்ளார். மேலும், ‘மண்டேலா’ படத்தில் உங்கள் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது, உங்கள் நடிப்பில் வெளியாக உள்ள படங்கள் வெற்றியடைய வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக சிறைகளில் சாதிய பாகுபாடுகளை அகற்ற வேண்டும் என்ற SC-யின் தீர்ப்பை, TNGovt உடனே நடைமுறைப்படுத்த விசிக MP ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இத்தீர்ப்பின் அடிப்படையில் சிறை கையேடு விதிகள் 242, 273 ஆகியவற்றை நீக்கிவிட்டு, புதிய சிறைக் கையேடு ஒன்றை உடனடியாக தயாரிக்க வேண்டும்; சிறைகளில் கடைபிடிக்கப்படும் நேரடியான, மறைமுகமான சாதிய பாகுபாடுகளுக்கு முடிவுகட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாகசைதன்யா – சமந்தா விவாகரத்திற்கு, தெலங்கானா முன்னாள் அமைச்சர் KTR-தான் காரணம் என சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் சுரேகா பேசியிருந்தார். இது தனது குடும்ப உறுப்பினர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இருப்பதாக, அவர் மீது கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கை நாகார்ஜுனா தொடர்ந்துள்ளார். சுரேகா மன்னிப்பு கோரிய நிலையில், இவ்விவகாரத்தை சட்ட ரீதியாகச் சந்திக்க நாகர்ஜுனா களமிறங்கியுள்ளார்.
Mahindra Thar Roxx காருக்கான முன்பதிவு தொடங்கிய 1 மணி நேரத்திற்குள்ளாகவே, 1.76 லட்சம் பேர் புக்கிங் செய்தனர். ஒவ்வொரு நிமிடத்திற்கும் சராசரியாக 2,937 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ₹13 லட்சத்தில் தொடங்கி ₹22.49 லட்சம் வரை இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ஸ்கார்பியோ படைத்த ரெக்கார்டை Thar Roxx முறியடித்துள்ளது. Scorpio N காரை, 30 நிமிடத்தில் 1 லட்சம் பேர் புக்கிங் செய்திருந்தனர்.
தமிழக சிறைகளில் சாதிய பாகுபாடுகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாளையங்கோட்டை சிறையில் BC, MBC, SC என சிறைவாசிகள் சாதி அடிப்படையில் தனித்தனியாக அடைக்கப்பட்டிருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், SC, ST, சீர் மரபினருக்கு துப்புரவுப் பணி, உயர் சாதியினருக்கு சமையல் பணி ஒதுக்குவது சட்ட விரோதமானது எனக் கூறிய நீதிபதிகள், புதிய கையேடு தயாரிக்கவும் உத்தரவிட்டனர்.
IOB வங்கியின் குறிப்பிட்ட சில கிளைகளில் ரோபோக்களை அறிமுகம் செய்ய உள்ளதாக, அந்த வங்கியின் CEO அஜய்குமார் தெரிவித்துள்ளார். அந்தந்த ஊர்களின் வட்டார மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் பேசும் வகையில் ரோபோக்களை வடிவமைக்க ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். முதற்கட்டமாக வங்கிக்கணக்கு தொடங்குவது போன்ற சில பணிகள் ரோபோக்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.