India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹிமாச்சல் பிரதேசத்தில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வீடுகளில் உள்ள டாய்லெட்களின் எண்ணிக்கையை பொறுத்து வரி விதிக்க, அம்மாநில காங். அரசு முடிவெடுத்துள்ளது. ஒரு டாய்லெட்டுக்கு ₹25 வீதம் வசூலிக்க, அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் குடிநீர் இணைப்பு பெற்ற வீடுகளுக்கு மாதந்தோறும் ₹100 வசூலிக்கப்பட உள்ளது. நிதி நெருக்கடியால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாகவும், முக்கிய பொருளாதார மையமாகவும் திகழ்வதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பாராட்டியுள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர், ஜப்பானின் டோக்கியோவில் ஒவ்வொரு இடத்தில் இருந்தும் நடந்து செல்லும் தூரத்தில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுவது போல், சென்னை மெட்ரோவிலும் அதே அமைப்பு பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
*மேஷம் – செல்வம் பெருகும் *ரிஷபம் – புதிய நட்பு கிடைக்கும் *மிதுனம் – சுபம் உண்டாகும் *கடகம் – வீண் பயம் வேண்டாம் *சிம்மம் – சிறப்பு பரிசு கிடைக்கும் *கன்னி – வெற்றி உண்டாகும் *துலாம் – ஏமாற்றம் அடைவீர் *விருச்சிகம் – உடலுக்கு ஓய்வு தேவை *தனுசு – நலம் உண்டாகும் *மகரம் – அமைதியாக இருப்பது நல்லது *கும்பம் – நிம்மதியில்லாத நாளாக அமையும் *மீனம் – ஆக்கத்துடன் செயல்படுங்கள்.
பிரபல மலையாள நடிகர் கீரிக்காடன் ஜோஸ் (72) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் 80 மற்றும் 90 களில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் ரஜினியின் தர்மதுரை, கர்ணா, ஏழுமலை, சந்திரமுகி, ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு நிறைவேறியிருப்பதாகவும், மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரதமரை சந்தித்த முதல்வர், மெட்ரோ ரயில் பணிகளுக்கு நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
சனாதன தர்மத்தை காக்க தேசிய அளவில் வலுவான சட்டத்தை இயற்ற வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சட்டத்தை நாடு முழுவதும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், இதை கண்காணிக்க தேசிய மற்றும் மாநில அளவில் சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம் அமைக்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இதற்காக ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 11,72,240 ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாள்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்பட உள்ளது. இதற்காக 2,029 கோடி ரூபாயை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் ரயில்வேயில் பணியாற்றும் ரயில்வே டிராக் பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு ஊழியர்களும் பயன்பெறுவர்.
BIG BOSS 8ஆவது சீசனை தொகுத்து வழங்க இருக்கும் நடிகர் விஜய்சேதுபதிக்கு ₹15 கோடி முதல் ₹18 கோடி வரை சம்பளம் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் அவர் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும். அதன்படி, 15 வாரங்கள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு, அவர் 15 நாள்கள் ஷூட்டிங் வரவேண்டும். அந்த 15 நாள்களுக்கான சம்பளம் தான் மேலே கூறியது.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய 4 முக்கிய முன்விரோதங்களே காரணம் என குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்கள் திட்டமிட்டு “ரெக்கி ஆப்ரேஷன்” என்ற பெயரில் இந்த கொலை திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆற்காடு சுரேஷின் மனைவியின் சபதத்தால் ஓராண்டுக்குள் கொலை செய்ய குற்றவாளிகள் வேகம் காட்டியதாகவும், கொலைக்கு மொத்தமாக ₹10 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 4,982 பக்க குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். அதில், அரசியல், சமூக ரீதியாக ஆள் பலத்தோடு வளர்ந்து வந்ததால், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. முதல் குற்றவாளியான நாகேந்திரன், அனைவரையும் கொலை சதி திட்டத்திற்கு ஒருங்கிணைத்துள்ளார். ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.