India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய் இன்று ஒரேநாளில் தனது முதல் அரசியல் மாநாட்டுக்கான பூஜையையும், கடைசிப் படத்திற்கான பூஜையையும் நடத்தியுள்ளார். H.வினோத் கூட்டணியில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘தளபதி 69’ படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்க, விக்கிரவாண்டியில் நடக்க உள்ள <<14268495>>தவெக<<>> மாநாட்டிற்கான பூஜையும் நடந்தது. இதனால், ஒரேநாளில் அவர் தொடக்க உரையும், முடிவுரையும் எழுதியதாக நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர்.
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகம் செய்யவுள்ளது. இவற்றின் சோதனை ஓட்டம் இந்தாண்டு இறுதியில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ₹2,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது டெல்லியின் ஜிந்த் – சோனிபட் இடையேயான வழித்தடத்தில் 89 கி.மீ. தூரம் வரை இயக்கப்பட உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் ஜீரோ கார்பன் உமிழ்வு இலக்கை அடைய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
தக்காளி விலை ஒரே வாரத்தில் டபுள் ஆனதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ₹35 வரை விற்பனையானது. ஆனால், இன்று ஒரு கிலோ ₹65 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விலையில் கடந்த வாரம் ₹50க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ₹80 – ₹90 வரை விற்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர நலவாழ்வு மையங்களில் தேவையான மருந்துகளை இருப்பு வைக்கவும், மழைநீர் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளது. மேலும், டெங்கு பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க , கொசு ஒழிப்பு பணிகளை இணைந்து செயல்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
வாணலியில் எள், தோல் நீக்கிய வேர்க்கடலை, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து, சலித்து எடுக்கவும். பாத்திரத்தில் சிவப்பு சோள மாவுடன் (300g) சிறிது நீர் & உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, அடை போல சுடவும். இவை ஆறியதும் மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டைகளாகப் பிடித்தால் சுவையான சிவப்பு சோளம் சிமிலி உருண்டை ரெடி.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில் மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டுமென வங்கிகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியம் வழங்குவது தாமதமாவதால் நிதிச்சுமையும், மனக்கவலையும் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து ஆராய்ந்த நிதி அமைச்சகம், மார்ச் தவிர்த்து மற்ற மாதங்களில் ஓய்வூதியத்தை அந்தந்த மாதங்களிலேயே விடுத்து, மின்னணு அறிக்கை அளிக்க அறிவுறுத்தியுள்ளது.
திருப்பதி லட்டு விவகாரத்தை விசாரிக்க புதிய விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. அதன் உத்தரவில், விசாரணையை CBI இயக்குநர் கண்காணிப்பில், CBI அதிகாரிகள் (2), மாநில காவல்துறை அதிகாரிகள் (2), உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் (2) அடங்கிய 7 பேர் கொண்ட குழு லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்யுமெனக் கூறப்பட்டுள்ளது.
இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்குமென நடிகரும், தெலங்கானா துணை முதல்வருமான பவன் கல்யாண் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “லியோ, விக்ரம் படங்களில் அவரது ஃபிலிம் மேக்கிங் ஸ்டைல் நன்றாக இருக்கிறது. தமிழ்த்திரையுலக நடிகர்களில் யோகி பாபுவை பிடிக்கும்” எனக் கூறியுள்ளார். இந்த பாராட்டுக்கு இயக்குநர் லோகேஷ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து எக்ஸில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் இயக்கமாக இருந்த நாம், உரிமைகளை வெல்லப்போகும் அரசியல் இயக்கமாக மாறிவிட்டதாக விஜய் பெருமிதம் தெரிவித்தார். பெயருக்கு அரசியலுக்கு வந்த கட்சி தவெக அல்ல, வீறுகொண்டு எழுந்து வெற்றி காணப்போகும் கட்சி என்று கூறினார். அரசியலில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட விவேகம் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், யதார்த்தமாக இருப்பதைவிட எச்சரிக்கையுடன் களமாடுவது அவசியம் எனவும் அறிவுறுத்தினார்.
குறைந்தது 2 ஆண்டுகள் முன்பு வாங்கிய சொத்துகளை விற்கும்போது, நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) கட்ட வேண்டும். அதற்கு இரு வாய்ப்புகள் உள்ளன. அதாவது, விற்பனை விலைக்கும் வாங்கிய விலைக்கும் இடையே உள்ள லாபத்துக்கு Indexation இல்லாமல், 12.5% வரி கட்டலாம் (அ) Indexation சலுகையைக் கணக்கிட்டு 20% வரி கட்டலாம். எது உங்களுக்கு ஏதுவாக இருக்கிறது எனக் கணக்கிட்டு, ஆடிட்டரிடம் ஆலோசித்து முடிவு செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.