India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பக்தர்களை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியது. இதிலிருந்து மீள்வதற்குள்ளாக, திருப்பதி கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்தின் வளையம் இன்று திடீரென உடைந்தது. பிரம்மோற்சவத்திற்கு கயிறு கட்டும் பணியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. திருப்பதியில் இப்படி அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ரயில் பயணம் அனைவருக்குமே பிடித்தமானது தான். ஆனால், எவ்வளவு பணம் கொடுத்தாலும் சுவையான, தரமான உணவுகள் ரயில்களில் ‘மிஸ்’ஸாகவே செய்கின்றன. ஆனால், அமிர்தசரஸ் முதல் நான்டெட் வரை 2000 கி.மீ. செல்லும் Sachkhand Express ரயிலில் பயணிகள் அனைவருக்கும் 3 வேளையும் இலவசமாக சுடச்சுட உணவு வழங்கப்படுகிறது. ஃப்ரீ என்பதால் ஏனோதானோ என்றில்லாமல் நட்சத்திர ஓட்டல் தரத்தில் சுவையும், தரமும் இருப்பதுதான் இதில் ஹைலைட்.
Soursop Fruit எனும் முள் சீதாப்பழத்தை ‘நேச்சுரல் கீமோ’ என மருத்துவர்கள் அழைக்கின்றனர். கேன்சர் செல்களை அழிக்கும் கீமோதெரபியை போல, இந்த பழம் செயல்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பழம் நம்மூரில் கிடைப்பது அரிது. கோவையில் உள்ள உருமாண்டாம்பாளையம் கிராமத்தில் இந்த முள் சீதாப்பழத்தையும், இலையையும் ஒரு குடும்பத்தினர் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
கடந்த 4 மாதங்களுக்கு மேல் தமிழ்நாடு கல்வித் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று காங்., மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். நிதி ஒதுக்காததால் சர்வ சிக்ஷா திட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் 20,000 பேருக்கு ஊதியம் வழங்கவில்லை என சுட்டிக் காட்டிய அவர், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து வஞ்சிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பிறரிடமிருந்து மாறுபட்ட சிந்தனை கொண்டிருப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இரக்க சுபாவம், தெளிந்த சிந்தனை கொண்ட நீங்கள் நெருக்கடியான சூழ்நிலையிலும் நியாயத்தை மட்டுமே பேசுவீர்கள். சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் என்று நந்தி வாக்கியம் உங்களைப் பற்றிக் கூறுகிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
ஹாஸ்பிட்டலில் இருந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினி, மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் இருக்கும்போது, நான் சீக்கிரம் உடல் நலம்பெற வேண்டும் என வாழ்த்திய அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களுக்கும், நான் நலம்பெற பிராத்தனைகள் செய்த ‘என்னை வாழவைக்கும்’ தெய்வங்களான தமிழக ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. நீண்டகாலம் வழங்கப்படாமல் இருந்த நிதி, தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதால் பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி கூறியிருந்தார். இந்நிலையில், இத்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63,246 கோடி வழங்கியதாக தகவல் பரவி வந்தன. இதனை மறுத்துள்ள தமிழக அரசின் Fact Check குழு, மத்திய அரசின் பங்கு 7,425 கோடி மட்டுமே எனத் தெரிவித்துள்ளது.
பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியை சந்தித்துள்ளார். 17ஆவது பாரா ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற அவருக்கு கோலி வாழ்த்து கூறியுள்ளார் . இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாரியப்பன் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் 1.85 மீ., உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
H.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. அதில் நடிகர்கள் விஜய், பாபி தியோல், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, இயக்குநர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நாளை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், மற்ற நடிகர்கள் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
முன்னாள் MLA ஓ.ஆர்.ராமச்சந்திரன் (68) இன்று காலமானார். காங்கிரஸில் இருந்தபோது 3 முறை (1991, 1996, 2001) கம்பம் தொகுதியின் எம்எல்ஏவாக பதவி வகித்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்தார். பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர், கம்பத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், இன்று மதியம் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.