India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பட்டியல் சாதியினருக்குள் பின் தங்கியுள்ளோருக்கு மாநில அரசு உள் ஒதுக்கீடு அளிப்பதில் தவறு இல்லை என SC மீண்டும் உறுதி செய்துள்ளது. அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி விசிக உள்ளிட்ட கட்சிகள் மனுத் தாக்கல் செய்தன. இதை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை என தெளிவுப்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசார் அதிரடியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30 மாவோயிஸ்ட் கொல்லப்பட்டுள்ளனர். நாராயண்பூர்-தந்தேவாடா மாவட்டங்களுக்கு இடையேயான எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை, பஸ்தார் பகுதியில் நடந்த தனித்தனி மோதலில் 171 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
GOAT படத்தில் de-aging முறையில் விஜய்யை 19 வயது இளைஞனாக மாற்றினர். ஒருவரை உண்மையிலேயே இளமையாக மாற்றமுடியுமா? ‘முடியும்’ என்று கூறி ₹35 கோடி மோசடி செய்துள்ளனர் கான்பூரை சேர்ந்த ராஜீவ்குமார்- ரேஷ்மா தம்பதி. 60 வயது முதியவரை 25வயது இளைஞராக மாற்றும் இயந்திரத்தை இஸ்ரேலில் இருந்து தருவித்ததாக, போலி சிகிச்சை அளித்துள்ளனர். இதற்கு ₹60,000- ₹90,000 கட்டணம். மோசடி அம்பலமாக, தம்பதி வெளிநாட்டுக்கு எஸ்கேப்.
மகளிர் T20 WCல் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா. முதலில் பேட்டிங் செய்த WI 20 ஓவர்கள் முடிவில் 118/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய SA அணி 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. SA அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான லாரா (59*), தஸிம் (57*) இருவருமே அரை சதம் அடித்தனர்.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு TNGovt தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்டப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள்கள், water பாக்கெட், 100 மைக்ரனுக்கு குறைவான பிளாஸ்டிக் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றம். இதுகுறித்த புகார்களை http.tnpcb.gov.in.contact-phpஇல் தெரிவிக்கலாம்.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் காலியாக உள்ள 81 ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்டோபர் 5) கடைசி நாளாகும். டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆப்ரேட்டர் (லேப்) பணியிடங்களுக்கு B.Sc.(chemistry) பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேவையான தகுதியுடன் 28 வயதிற்கு உட்பட்டவர்கள் <
மின் கட்டணம் குறித்த சிறு, குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். சிறு, குறு தொழில்களுக்கு மின் கட்டண விகித உயர்வு தாங்க முடியாத சுமையாக மாறியுள்ளது. எனவே, எவ்வித காலதாமதமின்றி நிலைக் கட்டணத்தை உடனே குறைக்க வேண்டும். உச்சபட்ச பயன்பாட்டு நேரத்திற்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடருக்கான இந்திய அணியில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார். அவரது ஃபார்ம் மீது பவுலிங் கோச் மோர்னே மோர்கல் அதிருப்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக பயிற்சியின்போது, அவர் வீசிய ஒவ்வொரு பந்திற்கு பிறகு மோர்னே அவரிடம் சென்று ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. IND-BAN இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் அக்.6இல் தொடங்குகிறது.
முகத்துக்கு அழகு சேர்க்கும் புருவங்கள் பராமரிப்பு மிக அவசியமானது. மிக மெல்லியதாக உள்ள புருவங்களை அழகாக தெரிய வைக்க பலர் அதன் அடர்த்தியை அதிகரிக்க மெனக்கெடுகின்றனர். எளிய இயற்கை வழி இதோ: உறங்கப்போகும் முன் சுத்தமான பருத்தி துணியைப் பயன்படுத்தி புருவங்களில் சிறிதளவு (லேசாக டபுள் பாயில் செய்து) ஆமணக்கு எண்ணெய் தடவி வந்தால், அதில் உள்ள ரிசினோலிக் அமிலம் புருவத்தை அடர்த்தியாக வளரச் செய்யும்.
இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசநாயக்கேவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசினார். அப்போது, இலங்கையின் பொருளாதார சீரமைப்புக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் என அவர் உறுதியளித்தார். பின்னர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருடனும் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். அதிபர் அனுர குமார திசநாயக்கே, சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.