India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி தவெக மாநாடுதான், விஜய்யின் அரசியல் பயணத்தை தீர்மானிக்கப் போகிறது. மாநாட்டிற்கு வரும் ரசிகர்கள் செய்யும் சிறு தவறும், ஒட்டுமொத்த கட்சிக்கே ஒரு லேபிளை கொடுத்துவிடும். ஏற்கனவே தவெகவினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே நடக்கும் பனிப்போர், மாநாட்டில் மோதலாகவும் வெடிக்கக்கூடும். அப்படி ஏதும் நடந்து விடாதா என ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கு இது புரிய வேண்டுமே.
இரவில் நீண்டநேரமாக செல்போன் திரையை பார்த்துக் கொண்டே இருப்பதால் இன்று பலரும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகின்றனர். இவ்வாறு இரவு நேரத்தில் சரியான தூக்கம் இல்லாததால் கீழ்கண்ட பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 1. நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு பலவீனமடையும். 2. ஆயுட்காலம் குறையும். 3. மன அழுத்தம் அதிகமாகி, உடல் மெலியும். 4. இதயம் சார்ந்த பல பிரச்னைகள் வரும்.
பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள புதிய படம் ‘பிளாக்’. SR பிரபு தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் CS இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஓராண்டு இடைவெளிக்குப் பின் ஜீவாவின் படம் வெளியாக உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்., அரசு, ஆட்சிக்கு வந்த 300 நாட்களில் ₹72,500 கோடியை கடனாக வாங்கியுள்ளது. அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு ₹241 கோடி. செப்டம்பரில் மட்டும் ₹5,500 கோடி கடனாக பெறப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதத்தில் ₹7,400 கோடியை கடனாக திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த இலவச வாக்குறுதிகளை நிறைவேற்ற கடன் மேல் கடன் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு போடப்படும் DPT Diphtheria-pertussis-tetanus எனும் தடுப்பூசி கடந்த இரண்டு மாதங்களாக தட்டுப்பாட்டில் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து இபிஎஸ், அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிரோடு விளையாடுவதை திமுக அரசு நிறுத்த வேண்டும். உடனடியாக இத்தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
NIA உள்ளிட்ட அமைப்புகளில் காலியாக உள்ள காவலர் பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் இந்த போட்டித் தேர்வுக்கு ssc.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். NIA, CAPFs, SSF மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காலியாக உள்ள காவலர் பணியில் பணிபுரியலாம். மேலும் விவரங்களுக்கு நாளைக்குள் ssc.gov.in. என்ற இணைய முகவரியில் அணுகலாம். SHARE IT
துணை முதல்வராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக மதுரைக்கு வந்துள்ளார். ஆனால், அமைச்சர் பிடிஆர் அவரை விமான நிலையத்தில் வரவேற்றதோடு சரி, அதன் பிறகு உதயநிதியுடன் அவரை பார்க்க முடியவில்லை. மதுரையின் மற்றொரு அமைச்சரான மூர்த்தி தான், உதயநிதியின் வரவேற்பு, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தடபுடலாக செய்துள்ளார். முன்னதாக, உதயநிதியின் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் பிடிஆர் மிஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
மகளிர் T20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இன்று நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி தற்போது பவுலிங் செய்து வருகிறது. INDIA Team: ஷஃபாலி, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன் ப்ரீத், ரோட்ரிக்ஸ், ரிச்சா, தீப்தி, வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், அருந்ததி, ரேணுகா சிங், ஆஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மக்கள் விரும்பி சாப்பிடும் கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. கர்நாடகா முழுவதும் food safety துறையினர் நடத்திய ஆய்வில், ரெட் வெல்வெட், பைன் ஆப்பிள், பிளாக் ஃபாரஸ்ட் கேக்குகளில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணங்களில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். SHARE IT
தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அருண் விஜய், ராஜ்கிரண் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.