news

News October 5, 2024

இளம் வயதினரை குறிவைக்கும் சர்க்கரை நோய்..!

image

ஒருகாலத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் பரவலாகக் காணப்பட்ட சர்க்கரை நோய், தற்போது 23 முதல் 30 வயது வரையிலான இளம் வயதினரை தாக்க தொடங்கியுள்ளது. இதற்கு உடற்பயிற்சியின்மை, தூக்கமின்மை, ஜங்க் புட்ஸ் போன்றவை காரணிகளாக உள்ளன. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக பசி, கழுத்து பகுதியில் கறுப்பு வளையம், பாதங்களில் மதமதப்பு அல்லது எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சுகர் டெஸ்ட் செய்து கொள்வது நல்லது.

News October 5, 2024

தீபாவளி முன்பணம் அரசு ஊழியர்கள் கோரிக்கை

image

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணமாக ₹10,000 பண்டிகைக்கு ஒரு மாதம் முன் வழங்கப்படும். இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பணம் பெற விரும்புவோர், களஞ்சியம் செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தீபாவளிக்கு இன்னும் 27 நாள்களே உள்ள நிலையில், அச்செயலி கடந்த 4 நாள்களாக செயல்படவில்லை. இதனால், சிக்கல்களை களைந்து விரைவாக முன்பணம் வழங்குமாறு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News October 5, 2024

விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

image

தமிழ்நாடு & புதுச்சேரி வருமான வரித் துறையில் நிரப்பப்படவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுயுடன் நிறைவடைகிறது. IT Inspector, Assistants, Multi-Tasking Staff பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பியுங்கள். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு, Any UG Degree. வயது வரம்பு: 18-30. சம்பளம்: ₹5,200-₹34,800. கூடுதல் விவரங்களுக்கு <>IT <<>>இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள்.

News October 5, 2024

விளையாட்டு துளிகள்

image

➤China Open Tennis: பெலாரஸின் சபலென்காவை வீழ்த்தி செக்குடியரசின் முச்சோவா அரையிறுதிக்கு முன்னேறினார். ➤மகளிர் T20 உலகக் கோப்பை: IND அணியை 58 ரன் வித்தியாசத்தில் NZ அணி வென்றது. ➤U21 உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 25 மீ. ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. ➤காமன்வெல்த் வலு தூக்கும் போட்டியில் புதுச்சேரி காவலர் அனிதா ராய் தங்கப் பதக்கம் வென்றார்.

News October 5, 2024

ஹரியானாவில் வாக்குப்பதிவு தொடக்கம்

image

ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 90 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. சுமார் 2 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க மாநிலம் முழுவதும் 20,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்வர் நயாப் சிங் சைனி, துஷ்யந்த் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இதில், காங்கிரஸ், பாஜக இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

News October 5, 2024

வெளுத்து வாங்க போகும் கனமழை.. ரெடியா மக்களே

image

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று (சனிக்கிழமை) பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.

News October 5, 2024

துஷ்ட சக்திகளை விரட்டும் பஞ்சமுக ஆஞ்சநேயர்

image

விஷ்ணுவின் விஸ்வரூபம் போல ஹயக்ரீவர், நரசிம்மம், கருடன், வானரம், வராகம் ஆகிய 5 திருமுகங்களுடன் காட்சித்தரும் திருத்தலம் புதுச்சேரி பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலாகும். சனியின் வக்கிர பார்வையை வலுவிழக்கச் செய்து, பக்தரை காக்கும் 5 தெய்வங்களும் ஒன்றாக அருளும் இக்கோயிலுக்கு விரதமிருந்துச் சென்று, வெண்ணை காப்பு & வெற்றிலை மாலை சாற்றி, மிளகு வடை படைத்து வழிபட்டால் துஷ்ட சக்திகள் விலகும் என்பது ஐதீகம்.

News October 5, 2024

PM KISAN: வங்கிக்கணக்கில் இன்று பணம்

image

PM கிசான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ₹2,000 வீதம் ஆண்டுக்கு ₹6,000 மத்திய அரசு வழங்கி வருகிறது. இதுவரை 17 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 18வது தவணை இன்று (அக்.5) வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. eKYC நிறைவு செய்யாதவர்களுக்கு பணம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. eKYCயை pmkisan.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News October 5, 2024

மாநில அரசை பாஜக வஞ்சிக்கிறது: காங்கிரஸ்

image

மெட்ரோ 2ஆம் கட்ட பணிக்கு காலம் கடந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். மெட்ரோ ரயில் திட்ட மொத்த மதிப்பீட்டில் 12% மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், மோடி அரசின் மாநில விரோத போக்கை இது அப்பட்டமாக வெளிகாட்டுவதாகவும் விமர்சித்துள்ளார். 2 கட்ட மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.7425 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 5, 2024

இஸ்ரேல் தாக்குதலில் 2,000 பேர் பலி: லெபனான்

image

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த மாதம் 23ஆம் தேதி லெபனான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலில் 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் பலியாகியுள்ளனர். இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அந்நாடு எச்சரித்துள்ளது.

error: Content is protected !!