India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2026இல் தமிழகத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும்போது, திமுக ஊழல்கள் வெளியே கொண்டு வரப்படும் என பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். நெல்லையில் பேசிய அவர், “திமுக தலைவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்றதாக கைது செய்யப்படுகின்றனர். தமிழ் சமூகத்தை அழித்துக் காட்டுவோம் என டாஸ்மாக் மூலம் மது விற்பனையை திட்டமிட்டு செயல்படுத்தும் தீய சக்தியாக திமுக செயல்படுகிறது” என்றார்.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மகிழ்முற்றம் குழுக்கள் உருவாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் இக்குழுக்களை உருவாக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுப்பு எடுப்பதை குறைப்பது, கல்வியை ஊக்கவிக்க, ஆசிரியர்-மாணவ உறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இதன் நோக்கங்களாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே விரைவில் தனியார்மயமாக்கப்பட இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.இந்நிலையில், இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையின் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கப் போகிறது. இது ரயில்வே மாற்றத்துக்கான சகாப்தம். இனி தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என உறுதிப்படக் கூறினார்.
புற்றுநோய் பாதித்த இளைஞரின் உயிரணுவை டெல்லி கங்காராம் ஹாஸ்பிட்டலில் அவரது பெற்றோர் பாதுகாத்து வந்தனர். அவர் இறந்த நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற, மகனின் உயிரணுவை அவர்கள் கேட்டனர். ஆனால், மருத்துவமனை மறுக்கவே, இந்த விவகாரம் டெல்லி ஐகோர்ட்டுக்கு சென்றது. விசாரணையில், உயிரிழந்தவர்களின் உயிரணு மூலம் செயற்கை கருத்தரிப்பு செய்ய தடையில்லை எனக் கூறிய நீதிபதி, உயிரணுவை ஒப்படைக்க உத்தரவிட்டார்.
ATMகளில் 24 மணி நேரமும் காவலாளிகளை நியமிக்குமாறு வங்கிகளுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. 60 வயதுக்கும் மேற்பட்டோரை காவலாளியாக நியமிப்பதை தவிர்க்குமாறும், பகல், இரவுக்கு தனி காவலாளிகளை நியமிக்குமாறும் கூறியுள்ளது. வாட்ஸ்அப் குழு துவங்கி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ரோந்து போலீசாரிடம் தகவல் பகிருமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. மேவாட் கொள்ளையார்கள் கைவரிசையை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.
தமிழ்த்திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் பிரசன்னா ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்குமாருடன் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது X தளத்தில், “AK சாரின் குட் பேட் அக்லி படத்தில் ஒரு அங்கமாக இருப்பது உண்மை. இது ஒரு கனவு. படத்தில் முதல் சில நாட்கள் நடித்து விட்டேன். அஜித் அவராகவே இருப்பதாலேயே அனைவராலும் நேசிக்கப்படுகிறார். பணிவு நிரம்பியவர். உண்மையானவர்” என்று கூறியுள்ளார்.
முத்துராமலிங்க தேவர் குருபூஜை அக்.30-இல் நடைபெறவுள்ளது. அன்றைய தினம், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு வாடகை வாகனங்கள், டூவீலர்கள், டிராக்டர் உள்ளிட்ட திறந்தவெளி வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என அரசு தெரிவித்துள்ளது. மேலும், சொந்த நாற்சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட டிஎஸ்பி அலுவலகங்களில் வாகன அனுமதிச் சீட்டு பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதானி குழுமம் தொடர்பான முறைகேடு விவகாரத்தில் OCT.24ல் செபி தலைவர் மதாபி ஆஜராக நாடாளுமன்ற பொது கணக்குக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. அதானி குழுமம் தொடர்பான முறைகேடு விசாரணையில் அவர், ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அத்துடன், வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் அவர் பங்குகளை வைத்திருந்ததாகவும் புகார் உள்ளது. இதுதொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளை மதிப்பது இல்லை என்று நடிகை மாளவிகா மோகனன் வேதனையுடன் கூறியுள்ளார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில், “படம் தோல்வி அடைந்தால் நடிகைகளை குறை சொல்கிறார்கள். அதிர்ஷ்டம் இல்லாத நடிகை என்றும் முத்திரை குத்தி விடுகிறார்கள். தென்னிந்திய சினிமா என்று மட்டும் இல்லாமல், பொதுவாகவே எல்லா சினிமா துறையிலும் இது இருக்கிறது” என்றார்.
➤வடகொரியாவை தாக்கினால் தென்கொரியா நிரந்தரமாக அழிக்கப்படும் என கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்தார். ➤சீன கடற்படை நடத்திய தாக்குதலில் வியட்நாம் மீனவர்கள் 10 பேர் படுகாயம் அடைந்தனர். ➤பிலிப்பைன்சில் இணைய மோசடியில் ஈடுபட்ட 190 சீனர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். ➤பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு ஆதரவான போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.