India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: விருந்தோம்பல்
▶குறள் எண்: 87
▶குறள் : இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்
▶ விளக்க உரை: விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.
SHARE IT.
ரயிலில் டிக்கெட் அட்வான்ஸ் முன்பதிவு நாள் 60ஆக குறைக்கப்பட்டது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ரயில் டிக்கெட்டை 120 நாள்களுக்கு முன் முன்பதிவு செய்வது அமலில் இருந்தது. அதை 60 நாள்களாக குறைத்த ரயில்வே, நவ.1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்திருந்தது. அதன்படி, அது அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக, 2015 ஏப்ரலில் அட்வான்ஸ் முன்பதிவு நாள்கள் 60இல் இருந்து 120ஆக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ. 61.50 உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று வரை சென்னையில் ₹1903க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அந்த விலை ரூ.61.50 உயர்த்தப்பட்டு ரூ.1964.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜூலை 1இல் விலை குறைக்கப்பட்டது. அதன்பிறகு சிலிண்டர் விலை தாெடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 4 மாதங்களில் ரூ.155 உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.
* முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது.அறிவு சற்று தீப்பிடிக்க தாமதமாகும் * ஊரில் பேசிக் கொள்கிறார்கள் என்பது கீழ்த்தரமான தன்மையாகும் * மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;மானமற்ற ஒருவருடன் போராடுவது கஷ்டமான காரியம் * ஓய்வு ,சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன் * தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகி விடுகின்றான்
2031இல் திராவிட கட்சிகள் இல்லாத தமிழ்நாடு உருவாகும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும், இதில் எந்த மாற்று கருத்து கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை சொல்வது போல் 2031இல் திராவிட கட்சிகள் இல்லாத தமிழ்நாடு உருவாகுமா? அதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீங்க. உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் (O.N.O.E.) சாத்தியமற்றது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மோடி சொல்வதை செய்ய மாட்டார் என்றும், ஏனெனில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைவரின் கருத்தும் ஒன்றாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே சொல்வது குறித்து உங்கள் கமெண்டை கீழே பதிவிடுங்க.
இந்தியாவுக்குள் இருந்தும், வெளியில் இருந்தும் நாட்டை அழிக்க முயற்சி நடப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வலிமையாகவும், திறமையானதாகவும் மாறுவதை விரும்பாத சக்திகள், நாட்டை அழிக்க முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தவும், உலக நாடுகள் மத்தியில் இந்தியா மீது எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தவும் அவர்கள் விரும்புவதாகவும் PM மோடி குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை 4 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், தி.மலை, அரியலூர், புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, திருப்பூர், நெல்லை, தென்காசியில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளது.
விஜய் மீது தனிப்பட்ட வன்மம் தனக்கு இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். எடுத்த எடுப்பிலேயே விஜய்யால் எப்படி 30% வாக்குகள் வாங்க முடியும் என கேள்வி எழுப்பிய அவர், எம்ஜிஆர் கட்சித் தாெடங்கும் முன்பே அவர் திமுகவில் இருந்தவர், தேர்தல் அனுபவம் உள்ளவர். ஆனால் விஜய் அப்படியில்லை என்றும் அவர் கூறியுள்ளார். விசிக திமுக கூட்டணியில்தான் நீடிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது லெபனான் நடத்திய ஏவுகணை வீச்சில் 7 பேர் பலியாகினர். லெபனானில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் அடுத்தடுத்து செலுத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் 4 வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 1ஆம் தேதி இஸ்ரேல், லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. அதையடுத்து இஸ்ரேல் மக்கள் மீது லெபனானால் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.