India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி தினத்தில் பட்டாசுகள் வெடித்து மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இதனால் சென்னை நகரின் பல பகுதிகளில் காற்றுமாசு அதிகரித்துள்ளது. மாலை 3 மணி நிலவரப்படி, 4 இடங்களில் மாசு தரக் குறியீடு 200-ஐ தாண்டியுள்ளது. அதிகபட்சமாக ஆலந்தூரில் மாசு தரக் குறியீடு 257 எனப் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் அரும்பாக்கம்(250), பெருங்குடி(238), வேளச்சேரி(217) உள்ளன. சூழலையும் கவனிங் மக்களே!
நடிகர் சிம்பு புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்புவின் 48ஆவது படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பிசினஸ் மற்றும் பட்ஜெட் எகிறிய காரணங்களால் படம் டிராப் ஆனதாக கூறப்பட்டது. இந்நிலையில், படத்தின் கதை மீது நம்பிக்கை இருப்பதால் தானே தயாரிக்க முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் உலவி வருகிறது.
கடந்த ஐபிஎல் சீசனில் ₹55 லட்சம் சம்பளத்தில் KKR அணிக்காக ரிங்கு சிங் விளையாடினார். குறைந்த தொகையாக இருக்கிறதே என அவரிடம் கேட்டதற்கு, இது தனக்கு அதிக தொகை எனவும், கடவுள் கொடுத்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்து இருந்தார். அந்த சீசனில் அவருடைய அதிரடியான ஃபினிஷிங் டச் பேசப்பட்டது. இந்நிலையில், 2025 IPL சீசனுக்காக ₹13 கோடிக்கு அவரை KKR அணி தக்கவைத்துள்ளது.
வங்கக்கடலில் நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2ஆவது வாரத்தில் தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. இதன் காரணமாக நவம்பர் 7 முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அலர்ட் விடுத்துள்ளது.
பொழுதுபோக்கு முதல் பொருள்கள் வாங்குவது வரை போன் தேவையாக உள்ளது. ஆனால், நீண்டநேரம் போன், கணினி பயன்படுத்துவதால் ‘TEXT NECK SYNDROME’ என்ற பாதிப்பு அதிகரித்து உள்ளதாகவும், குழந்தைகள், இளைஞர்களை அதிகம் பாதிப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் கழுத்து எலும்புகளுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு, தசைகளும் பாதிக்கப்படுகிறது. இதனால் தலைவலி, தோள்பட்டை- கழுத்துவலி, நரம்பு பாதிப்பு ஏற்படும்.
LSG அணியின் Retention தொடர்பாக அதன் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ள கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட விருப்பங்களை காட்டிலும், அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற வீரர்களைத்தான் தக்கவைக்க விரும்பியதாக அவர் கூறியுள்ளார். கே.எல்.ராகுல் ரிலீஸ் செய்யப்பட்டதையும், உரிமையாளரின் இந்த கருத்தையும் முடிச்சு போட்டு நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
‘அமரன்’ படத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயனுக்கு ₹30 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு சம்பளம் பெற்றதற்கு வொர்த்தான நடிப்பை SK வெளிப்படுத்தியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு இன்று இந்த படம் வெளியாகியுள்ளது. தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது.
எல்லையில் ஒரு இன்ச் நிலத்தை கூட அண்டை நாடுகளுக்கு விட்டுத் தரமாட்டோம் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். மேலும், ராணுவத்திற்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை (ITC) அமைக்க அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். சீனாவை மையமாகக் கொண்டு லக்னோவிலும், பாகிஸ்தானுக்கு ஜெய்பூரிலும், திருவனந்தபுரத்தில் கடற்படைக்காக ITC-களை அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
சாதாரண பாத்திரத்தை விட குக்கரில் வேகமாக சமைக்க முடிகிறது. இதற்கு நீரின் கொதிநிலையே காரணம். சாதாரண பாத்திரத்தில் நீரின் கொதிநிலை 100°C-ஐ எட்டியதும் நீராவியாகி விடும் என்பதால் வெப்பம் அதிகரிக்காது. ஆனால், பிரஷர் குக்கரில் உள்ள நீர் 100°C எட்டியதும் உண்டாகும் நீராவி வெளியே செல்ல வழியில்லை. அப்போது வெளியே இருக்கும் வளிமண்டல அழுத்தத்தைவிட இருமடங்கு அழுத்தம் உண்டாக்கி, உணவும் விரைவாக வெந்து விடுகிறது.
உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் 17 வயது டீன்-ஏஜ் சிறுமி மூலம் 20 இளைஞர்களுக்கு HIV தொற்று பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குலார்கட்டி பகுதியை சேர்ந்த இந்த சிறுமி, போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். இதனால் பணம் தேவைப்பட, உள்ளூர் இளைஞர்களுடன் உறவு கொண்டிருக்கிறார். அந்த வகையில் 20 பேருக்கு எயிட்ஸ் நோய்க்கு காரணமான HIV தொற்று பரவியுள்ளது. இதுபற்றி மேலும் விசாரணை நடந்துவருகிறது.
Sorry, no posts matched your criteria.