news

News October 6, 2024

அக்.6: வரலாற்றில் இன்று

image

1935 – தமிழகக் கவிஞர், பாடலாசிரியர் புலமைப்பித்தன் பிறந்தநாள்.
1973 – 80,000 எகிப்திய படைகள் சூயஸ் கால்வாயைக் கடந்து இசுரேலில் உள்ள பார் லேவ் கோட்டையை அழித்து, யோம் கிப்பூர்ப் போரை ஆரம்பித்தனர்.
1976 – பார்படோசில் இருந்து புறப்பட்ட கியூபா விமானம் ஒன்று தீவிரவாதிகளால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
2010 – இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்டது.

News October 6, 2024

நவம்பரில் 4 நாட்களுக்கு வாக்காளர் சிறப்பு முகாம்

image

தமிழகத்தில் நவம்பர் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்காக பணிகள் செ.20ம் தேதி துவங்கி, வரும் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இம்மாதம் 29ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்று முதல் நவ. 28ம் தேதி வரை, பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.

News October 6, 2024

உங்களுக்கு சிறுநீர் எந்த நிறத்தில் வருகிறது?

image

சிறுநீர் வெண்மையாக இருந்தால் அதிகளவில் தண்ணீர் குடிக்கிறோம் என அர்த்தம். வெளிர் மஞ்சள் நிறத்தில் வந்தால், உடலில் தேவையான அளவு நீர் உள்ளது என்று பொருள். போதிய அளவு நீர் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். இளஞ்சிவப்பு (அ) சிவப்பு நிறத்தில் வந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறுநீர் நுரையாக வெளியேறுவது நமது உணவில் புரதம் அதிகமாக இருப்பதை காட்டுகிறது.

News October 6, 2024

ஆடம் ஸ்மித்தின் பொன்மொழிகள்

image

*ஒரு சமூகத்தின் பெரும் பகுதியினர் ஏழைகளாகவும் துன்பத்திலும் இருக்கும் போது. எந்தவொரு சமூகமும் நிச்சயமாக செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது. *மனிதர்கள் பணத்தை விரும்புவது பணத்துக்காக அல்ல, அவர்கள் அதைக் கொண்டு வாங்கக் கூடிய வற்றிற்காக.
*நாம் நம்மை மதிப்பது போல் நம்மை மதிக்கும் ஒரு நபரைக் கண்டறிவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

News October 6, 2024

பாகிஸ்தான் செல்வது ஏன்?: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

image

பாக். அக்.15,16-ல் நடைபெறும் SCO மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் பாக். பயணம் குறித்த விளக்கம் அளித்துள்ள அவர், மாநாட்டின் நிகழ்ச்சிகளுக்காகவே பாக். செல்வதாகவும், இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை எனவும் கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் பாக். செல்வது இதுவே முதல்முறை ஆகும்.

News October 6, 2024

டி20 உலகக்கோப்பையை வெல்ல உதவிய பந்த்!

image

தென் ஆப்ரிக்க அணி எதிரான WC டி20 இறுதிப்போட்டியில் பந்த் சாதுர்யமாக செயல்பட்டதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில், 24 பந்துகளில் 26 ரன்கள் தேவைப்பட்டபோது, ​பந்த் ஆட்டத்தின் வேகத்தை குறைக்க முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு டேப் ஓட்ட physio-வை அழைத்தார். அதனால் bowlerகளிடம், பீல்டிங் குறித்து ஆலோசிக்க முடிந்ததாக கூறிய அவர், அதுவும் எங்கள் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது என்றார்.

News October 6, 2024

மீண்டும் ஆட்சிக்கு வருவேன்: நயாப் சிங் சைனி

image

Exit Poll முடிவுகள் எதிர்மறையாக இருந்தாலும் ஹரியானாவில் மீண்டும் ஆட்சிக்கு வருவேன் என அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பாஜக முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற அவர், ஹரியானாவில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் மக்கள் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும் கூறினார். 90 இடங்களில் பதிவான வாக்குகள் இம்மாதம் 8ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

News October 6, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ஈரோடு, சேலம், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்று கூறியுள்ளது.

News October 6, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: அன்புடைமை. ▶குறள் எண்: 74 ▶ குறள்: அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு. ▶பொருள்: அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும். அஃது எல்லாரிடத்தும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

News October 6, 2024

தகாத உறவால் பலியான அழகான குடும்பம்

image

உ.பி., மாநிலம் அமேதியில் பள்ளி ஆசிரியை, அவரது கணவர், 5 மற்றும் 1.5 வயது மகள்கள் என 4 பேரை படுகொலை செய்த சந்தன் வர்மாவை இன்று காலை உ.பி., போலீஸ் என்கவுண்டர் செய்தனர். எனினும், காயங்களுடன் அவன் பிழைத்துவிட்டான். ஆசிரியை உடன் ரகசிய உறவில் இருந்த நிலையில், அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு பேசாத நிலையில், ஆத்திரத்தில் இந்த கொலைகளை அவன் செய்திருக்கிறான். திருமணத்தை மீறிய உறவு என்றுமே பிரச்சனை தானே?

error: Content is protected !!