India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குநர் ஜானிக்கான தேசிய விருது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டதால், விருது குழு இம்முடிவை எடுத்துள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தின் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக அவருக்கு விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், விருது அறிவிக்கப்பட்ட சில நாள்களிலேயே பாலியல் வழக்கில் கைதான அவர், தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.
இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் உள்ளிட்ட சுமார் 72 போர் விமானங்கள் சாகசங்களில் ஈடுபட உள்ளன. காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுமார் 15 லட்சம் பேர் கண்டுகளிக்க வாய்ப்புள்ளதால், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோயிலில் அமர்ந்திருக்கும் இடத்துக்கு ஏற்ப தனிச் சிறப்புகளைக் கொண்டிருப்பவர் பிள்ளையார். அந்த வகையில், பிரகாரத்தின் மேற்குத் திசை நோக்கி சந்நிதி கொண்டிருந்தால், அவருக்கு சர்வப்ரிய மகாகணபதி என பெயர். மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அருள்பலிக்கும் முழுமுதற் கடவுளான இந்த கணபதிக்கு சதுர்த்தி விரதமிருந்து அருகம்புல் கொண்டு அர்ச்சித்து வணங்கினால் வாழ்வில் வளங்கள் சேரும் என்பது ஐதீகம்.
பெண்கள், குழந்தைகள் பயணிப்பதற்காக PINK நிற ஆட்டோக்கள், சென்னையில் வலம் வரவுள்ளன. இதற்கான அரசாணையை, தமிழக அரசு இன்னும் சில தினங்களில் வெளியிடவுள்ளது. முதல்கட்டமாக, தலைநகர் சென்னையில் 250 PINK ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ஓட்டுநராக விரும்பும் பெண்களுக்கு, ஆட்டோவின் மொத்த விலையில் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். சென்னையை தொடர்ந்து, பிற மாவட்டங்களிலும் PINK ஆட்டோ சேவை வருகிறது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு பதில் அளிக்கும் வகையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்ரேலுக்கு எதிராக ஆயுத தடை விதித்துள்ள மேக்ரான் மற்றும் மேற்கத்திய தலைவர்களால் ஈரான் மீது ஆயுத தடைவிதிக்க முடியுமா என்றார். அவர்களின் ஆதரவு இருந்தாலும், இல்லை என்றாலும் வெற்றிபெறுவோம் என தெரிவித்தார்.
*கார்த்திகை, உத்திரம், உத்திராடம்⇒ சிவன் (சூரியன்) ரோகிணி, அஸ்தம், திருவோணம்⇒ சக்தி (சந்திரன்) *மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்⇒ முருகன் (செவ்வாய்) *திருவாதிரை, சுவாதி, சதயம்⇒ ராகு & காளி. *புனர்பூசம், விசாகம், பூரட்டாதி⇒ ராமர் (குரு) *பூசம், அனுஷம், உத்திரட்டாதி⇒ சாஸ்தா (சனி) *ஆயில்யம், கேட்டை, ரேவதி⇒ விஷ்ணு (புதன்) *மகம், மூலம், அசுவினி⇒ கணபதி (கேது) *பரணி, பூரம், பூராடம்⇒ லட்சுமி (சுக்கிரன்).
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், புதுக்கோட்டை, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் எனவும் கூறியுள்ளது.
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பிளேயிங் லெவனை இங்கி. அணி அறிவித்துள்ளது. காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் பாக். எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடமாட்டார் என தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக இங்கி. அணியின் கேப்டனாக ஒல்லி போப் செயல்படவுள்ளார்.
திருப்பதியில் பக்தர் சாப்பிட்ட தயிர் சாதத்தில் பூரான் கிடந்ததாக வெளியான செய்திக்கு தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது. முழுவதுமாக வேக வைக்கப்பட்ட உணவில் உடல் பாகங்கள் சேதம் அடையாமல் முழு பூரான் சிதையாமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. இது போன்ற பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது. லட்டு சர்ச்சை இன்னும் முடியாத நிலையில், பூரான் கிடந்ததாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ICC மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி இன்று நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங், பௌலிங், பீல்டிங் என்ற அனைத்திலும் தடுமாறியது. மறுபுறம் பாக். அணி இலங்கை அணியை வீழ்த்திய தெம்புடன் களமிறங்கவுள்ளது. சிங்கப்பெண்கள் மீண்டு வருவார்களா?
Sorry, no posts matched your criteria.