news

News October 31, 2024

கடவுள் இருக்கான் குமாரு..!

image

கடந்த ஐபிஎல் சீசனில் ₹55 லட்சம் சம்பளத்தில் KKR அணிக்காக ரிங்கு சிங் விளையாடினார். குறைந்த தொகையாக இருக்கிறதே என அவரிடம் கேட்டதற்கு, இது தனக்கு அதிக தொகை எனவும், கடவுள் கொடுத்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்து இருந்தார். அந்த சீசனில் அவருடைய அதிரடியான ஃபினிஷிங் டச் பேசப்பட்டது. இந்நிலையில், 2025 IPL சீசனுக்காக ₹13 கோடிக்கு அவரை KKR அணி தக்கவைத்துள்ளது.

News October 31, 2024

Alert: கொட்டப் போகும் மழை..!

image

வங்கக்கடலில் நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2ஆவது வாரத்தில் தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. இதன் காரணமாக நவம்பர் 7 முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அலர்ட் விடுத்துள்ளது.

News October 31, 2024

போன் யூஸ் பண்றீங்களா? உடனே இத படிங்க.. WARNING!

image

பொழுதுபோக்கு முதல் பொருள்கள் வாங்குவது வரை போன் தேவையாக உள்ளது. ஆனால், நீண்டநேரம் போன், கணினி பயன்படுத்துவதால் ‘TEXT NECK SYNDROME’ என்ற பாதிப்பு அதிகரித்து உள்ளதாகவும், குழந்தைகள், இளைஞர்களை அதிகம் பாதிப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் கழுத்து எலும்புகளுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு, தசைகளும் பாதிக்கப்படுகிறது. இதனால் தலைவலி, தோள்பட்டை- கழுத்துவலி, நரம்பு பாதிப்பு ஏற்படும்.

News October 31, 2024

கே.எல்.ராகுலுக்கு சோதனை மேல் சோதனை

image

LSG அணியின் Retention தொடர்பாக அதன் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ள கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட விருப்பங்களை காட்டிலும், அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற வீரர்களைத்தான் தக்கவைக்க விரும்பியதாக அவர் கூறியுள்ளார். கே.எல்.ராகுல் ரிலீஸ் செய்யப்பட்டதையும், உரிமையாளரின் இந்த கருத்தையும் முடிச்சு போட்டு நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

News October 31, 2024

‘அமரன்’ படத்திற்கு SK சம்பளம் இவ்வளவா..!

image

‘அமரன்’ படத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயனுக்கு ₹30 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு சம்பளம் பெற்றதற்கு வொர்த்தான நடிப்பை SK வெளிப்படுத்தியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு இன்று இந்த படம் வெளியாகியுள்ளது. தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது.

News October 31, 2024

ஒரு இன்ச் கூட விட்டுத் தரமாட்டோம்: PM

image

எல்லையில் ஒரு இன்ச் நிலத்தை கூட அண்டை நாடுகளுக்கு விட்டுத் தரமாட்டோம் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். மேலும், ராணுவத்திற்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை (ITC) அமைக்க அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். சீனாவை மையமாகக் கொண்டு லக்னோவிலும், பாகிஸ்தானுக்கு ஜெய்பூரிலும், திருவனந்தபுரத்தில் கடற்படைக்காக ITC-களை அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

News October 31, 2024

ப்ரஷர் குக்கரும், வளிமண்டல அழுத்தமும்

image

சாதாரண பாத்திரத்தை விட குக்கரில் வேகமாக சமைக்க முடிகிறது. இதற்கு நீரின் கொதிநிலையே காரணம். சாதாரண பாத்திரத்தில் நீரின் கொதிநிலை 100°C-ஐ எட்டியதும் நீராவியாகி விடும் என்பதால் வெப்பம் அதிகரிக்காது. ஆனால், பிரஷர் குக்கரில் உள்ள நீர் 100°C எட்டியதும் உண்டாகும் நீராவி வெளியே செல்ல வழியில்லை. அப்போது வெளியே இருக்கும் வளிமண்டல அழுத்தத்தைவிட இருமடங்கு அழுத்தம் உண்டாக்கி, உணவும் விரைவாக வெந்து விடுகிறது.

News October 31, 2024

SHOCKING: 20 பேருக்கு HIV பரப்பிய 17 வயது பெண்

image

உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் 17 வயது டீன்-ஏஜ் சிறுமி மூலம் 20 இளைஞர்களுக்கு HIV தொற்று பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குலார்கட்டி பகுதியை சேர்ந்த இந்த சிறுமி, போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். இதனால் பணம் தேவைப்பட, உள்ளூர் இளைஞர்களுடன் உறவு கொண்டிருக்கிறார். அந்த வகையில் 20 பேருக்கு எயிட்ஸ் நோய்க்கு காரணமான HIV தொற்று பரவியுள்ளது. இதுபற்றி மேலும் விசாரணை நடந்துவருகிறது.

News October 31, 2024

ஸ்வீட் பறிமாறிக் கொண்ட இந்திய-சீன படைகள்

image

தீபாவளியை முன்னிட்டு கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய-சீன வீரர்கள் இனிப்பு பரிமாறிக் கொண்டனர். டெம்சோக், டெப்சாங் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த வீரர்களை இருநாடுகளும் நேற்று முழுமையாக திரும்பப் பெற்ற நிலையில், இன்று இனிப்பு வழங்கியுள்ளனர். 2020 கல்வான் மோதலுக்கு முன்பு இருந்த ரோந்து உரிமை தொடர்பாக கமாண்டர் நிலையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

News October 31, 2024

கண்டிப்பா இந்த இடங்களில் இன்று விளக்கு ஏத்துங்க..

image

தீபாவளியன்று வீட்டில் உள்ள சில விசேஷ இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். வீட்டின் நுழைவாயில், சமையலறை அறை, துளசி மாடம் போன்ற இடங்களில் விளக்கு வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. இது தவிர கோயில்கள், மடங்கள், மரங்கள் மற்றும் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தீபம் ஏற்றினால் நல்லது என்பது ஐதீகம். இந்த தீபத் திருநாளை நீங்கள் எப்படி கொண்டாடுகிறீர்கள்? SHARE IT

error: Content is protected !!