India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நிலக்கரி நிறுவனத்தின் CMPFO அமைப்பில் காலியாக உள்ள 136 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Social Security Assistant, Jr.Translator பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள். கல்வித்தகுதி: Any Degree (Eng & Hindi அறிந்திருக்க வேண்டும்). வயது வரம்பு: 18-30. சம்பளம்: ₹25,000 – ₹30,000. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: அக்.6. கூடுதல் விவரங்களுக்கு<
மெரினாவில் விமானப் படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனைக் காண சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் குவிந்ததால், அங்கு தற்போது கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் சிக்கி 20 பேர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பு விகிதத்தை பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வர 4 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. *குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடுகளை கண்டறிய அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை *குறைப்பிரசவம், எடை குறைவான குழந்தைகள் வீடுகளிலேயே, தொழில்நுட்ப உதவியோடு கண்காணிக்கப்படும் *சுகப்பிரசவத்தை ஊக்குவிக்க செவிலியர்களுக்கு பயிற்சி * குழந்தை வளர்ச்சிக்கான ‘பெற்றோர் பயன்பாட்டு செயலி’ தொடக்கம்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவை போன்று லட்சம் பேர் வந்தாலும் பயப்பட மாட்டேன் என்று மத்திய அமைச்சர் H.D.குமாரசாமி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் பேசிய அவர், மூடா வீட்டு மனை முறைகேடு விவகாரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில், காங்கிரஸ் அரசு செயல்படுகிறது. அதனை மடைமாற்ற என்னை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கில், வழக்குகள் போடப்படுகின்றன. இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்றார்.
உ.பி. மாநிலம் ஆக்ராவில் கடந்த 2021-ம் ஆண்டு 10 வயது சிறுமியை, 5 இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்தனர். அவர்களில் 17 வயது சிறுவனும் ஒருவன். அவனுக்கு 20 வயதான போதிலும், குற்றம் நடக்கையில் சிறார் என்பதால், அவனை விடுவிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், அவனது மன, உடல் உறுதியை வைத்து, அந்த நபரை 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞனாக கருதலாம் எனத் தெரிவித்த நீதிபதி, அவனுக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
*சோறு வடிக்கும்போது சிறிது குழைந்து விட்டால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் சரியாகிவிடும். *பால் உறைக்கு ஊற்றும்போது வெதுவெதுப்பாக இருந்தால்தான் தயிர் நன்கு உறையும். *வத்தக்குழம்பு தாளிக்கும்போது ஆரஞ்சு பழத்தோலை சேர்த்தால் நல்ல சுவையுடன் இருக்கும். *பாகற்காய் குழம்பில் ஒரு காரட் சேர்த்து செய்தால் கசப்பே தெரியாது. *கத்தியை சூடு செய்துவிட்டு வெங்காயம் நறுக்கினால் கண்களில் எரிச்சல் இருக்காது.
ஜம்மு-காஷ்மீர், ஹரியானா சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், அவற்றில் காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என Exit Poll முடிவுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகையை போல, காஷ்மீரில் பெண்களுக்கு மாதம் ₹ 3000-ம், ஹரியானாவில் ₹ 2000-ம் வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் ஏராளமான பெண்கள், காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் தொடர்பான அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிச.12 ஆம் தேதி வெளியாகலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 1991இல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற ‘தளபதி’ படத்திற்குப் பின் இக்கூட்டணி மீண்டும் இணையுமா என இருவரது ரசிகர்களும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
விவாதங்களை ஏற்படுத்துவதே நல்ல கலைப்படைப்புக்கான அடையாளம் என்று நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ‘மெய்யழகன்’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், “எல்லா கலையம்சங்களையும் கொண்ட படங்கள் எப்போதாவதுதான் வெளியாகும். மெய்யழகன் அப்படியான சினிமா. என்ன சொல்ல முயற்சி செய்தோமோ அதை செய்துவிட்டதாக உணர்கிறோம். வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவித்தவர்களுக்கு இப்படம் என்ன சொல்கிறது என புரியும்” என்றார்.
பச்சரிசி, உளுந்தம் பருப்பு 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதை நீரூற்றாமல் சிறிது சிறிதாக பாகு வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ளவும். அதில் ஏலக்காய் பொடி, பச்சைக் கற்பூரம், தேங்காய் துருவல் தூவி இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலக்கி விடவும். அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் இந்த கலவையை மாவுக்கரண்டியில் ஊற்றவும். அவை பொன்னிறமாக மாறும்வரை சுட்டு எடுத்தால், சுவையான கந்தரப்பம் ரெடி.
Sorry, no posts matched your criteria.