India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘தங்கலான்’ ஓடிடியில் வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இப்படம் செப்.20 நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திரையரங்கில் எதிர்பார்த்த வசூலை ஈட்டாத நிலையில், அதை காரணம் காட்டி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தொகையை குறைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாததால் அடுத்த மாதம் அமேசான் பிரைமில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குழுக்கள் அமைக்கப்படுகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து மாணவர் தலைவர் மற்றும் மாணவ அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர். இதன் மூலம் மாணவர்களிடம் அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள், ஆளுமைத் திறன் மேம்பட மாதிரி சட்டப்பேரவை, நாடாளுமன்றம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஒருவர் தனது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மரத்தை வீட்டிலேயே (அ) தோட்டத்திலோ வளர்த்து, பராமரித்து வருவதால் அவருக்கு ஏற்படும் தோஷங்கள் விலகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். 1) அஸ்வினி-எட்டி 2) பரணி-நெல்லி 3) கார்த்திகை-அத்தி 4) ரோஹிணி-நாவல் 5) மிருகசீரிடம்-கருங்காலி 6) திருவாதிரை- செம்மரம் 7) புனர்பூசம்-மூங்கில். 8) பூசம்-அரசு 9) ஆயில்யம்-புன்னை.
10) மகம் – ஆலம் 11) பூரம் – பலா 12) உத்திரம் – அலரி 13) அஸ்தம் – வேலம் 14) சித்திரை – வில்வம் 15) சுவாதி – மருது 16) விசாகம் – விலா 17) அனுஷம் – மகிழம் 18) கேட்டை – குட்டிப் பலா 19) மூலம் – மா 20) பூராடம் – வஞ்சி 21) உத்திராடம் – சக்கைப்பலா 22) திருவோணம் – வெள்ளை எருக்கு 23) அவிட்டம் – வன்னி *24) சதயம் – கடம்பு 25) பூரட்டாதி – கருமருது 26) உத்திரட்டாதி – வேம்பு 27) ரேவதி – இலுப்பை.
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். ₹46 கோடி செலவில் 6.09 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பனிமூட்ட பாதை, காய்கறி தோட்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
திமுக அரசின் கவனக்குறைவால் வான்படை சாகச நிகழ்வு சாதனையாக மாறாமல், வேதனையாக மாறிவிட்டதாக விசிகவின் ஆதவ் அர்ஜூனா விமர்சித்துள்ளார். அரசு இனிவரும் காலங்களிலாவது, இதுபோன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும். தன்நலன் பேணாது மக்கள் நலனை பெரிதாக பேணும் அரசே மக்களுக்கான அரசு எனக் கூறிய அவர், அரசின் மூத்த நிர்வாகத்தினர் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்ததாக குற்றம் சாட்டினார்.
மெரினாவில் நடந்த விமான வான் சாகச நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அண்ணாமலை, முதல்வர் தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக் கூட, பல லட்சம் மக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது, அவரது நிர்வாகத்தின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறது. இதற்கு திமுக அரசே முழு பொறுப்பு. பொதுமக்களுக்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார்.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்றும், சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.
வங்கதேச அணியை ஆல்அவுட் செய்ததன் மூலம் இந்தியா சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது எதிரணியை அதிக முறை ஆல்அவுட் ஆக்கிய அணி என்ற பாக். அணியின் சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இந்தியா மற்றும் பாக். அணிகள் டி20 கிரிக்கெட்டில் 42 முறை எதிரணியை ஆல் அவுட்டாக்கி உள்ளது. இந்தப் பட்டியலில் நியூசிலாந்து 40 முறை 3வது இடத்திலும், உகாண்டா 35 முறை 4வது இடத்திலும், மே.இ.தீவுகள் 32 முறை 5வது இடத்திலும் உள்ளன.
பதப்படுத்தப்பட்ட, அதிக சர்க்கரைக் கொண்ட உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், ரத்த ஓட்டத்தில் தேவைக்கு அதிகமான மெக்னீசியம், பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து இதய ஆரோக்யத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை பச்சையாக காலையில் சாப்பிடுவது வயிறு சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும்.
Sorry, no posts matched your criteria.