India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேகன்ஆர் வரிசையில் Waltz என்ற ஸ்பெஷல் எகானமி எடிஷனை மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புது ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மாடலில், குரோல் கிரில், 6.2 இன்ச் திரை கொண்ட மியூசிக் சிஸ்டம், செக்யூரிட்டி சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. இரு ஏர் பேக், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ், ஏ.பி.எஸ். பாதுகாப்பு வசதி வசதியுடன் கிடைக்கும் இதன் விலை ₹5.65 லட்சமாகும்.
மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் மோரிங்கா டீ பருகலாம் என டயட்டீஷியன்ஸ் பரிந்துரைக்கின்றனர். முருங்கை இலை (கைப்பிடி), எலுமிச்சை இலை (2), தேநீர் தூள், சுக்கு, சோம்பு, பட்டை, துளசி, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனை வெல்லம் சேர்த்தால் மணமிக்க சுவையான மோரிங்கா டீ ரெடி. இந்த டீயை இரவு தவிர்த்து எப்போது வேண்டுமென்றாலும் குடிக்கலாம்.
TASMAC கடைகளை தமிழ்நாடு அரசு படிப்படியாக மூட வேண்டும் என்று CPIM மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி வலியுறுத்தியுள்ளார். அதற்கு முதற்கட்டமாக டாஸ்மாக் நேரத்தை குறைக்க வேண்டும் எனக் கூறிய அவர், அரசியல் கட்சித் தலைவர்கள் ஓட்டுப் போடுவதற்கு மது வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். போதையில்லாத தமிழகம், இந்தியா உருவாக வேண்டும் என்பதே CPIM கனவு எனத் தெரிவித்தார்.
➤U 21 சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ➤சிங்கப்பூர் ஓபன் ஸ்னுாக்கர் தொடரில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றார். ➤ குளோபல் செஸ் லீக் தொடரில் ஆனந்த் தலைமையிலான கங்காஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. ➤ காத்மாண்டுவில் நடந்த ஆசிய ரக்பி செவன்ஸ் எமிரேட்ஸ் டிராபி தொடரில் இந்திய பெண்கள் அணி வெள்ளி வென்றது.
கர்நாடகாவில் ₹5 கோடி பழைய நோட்டுகளை எரிக்க பெங்களூரு போலீசார் திட்டமிட்டுள்ளனர். பல்வேறு வழக்குகளில் சுமார் ₹5 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்தனர். இவை பழைய ₹500, ₹1,000 நோட்டுகளாகும். இந்த பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், இவை தற்போது வெறும் காகிதமாகி விட்டன. இந்நிலையில், இவற்றை எரிக்க நீதிமன்ற அனுமதி கோரியுள்ளது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலின் அடுத்து தயாரிக்கப்போகும் படத்தின் பெயர் மற்றும் First look இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் ஜீவா மற்றும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது நடிகர் ஜீவாவின் கரியரில் முக்கிய படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வார்ரூம் பகுதியை சுற்றி 100 மீட்டர் தொலைவிற்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வார்ரூம் பகுதியில் அனுமதி அளிக்கப்படும் என்று ஜம்மு போலீசார் தெரிவித்துள்ளனர்.
➤பாகிஸ்தானில் பலுசிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ➤அமெரிக்காவில் ஹெலீன் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227ஆக அதிகரித்தது. ➤இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் விமானத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக ஹூதி அமைப்பு தெரிவித்தது. ➤தெற்குப் பெய்ரூட்டில் உள்ள பிரான்ஸின் எரிவாயு நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
காலாண்டு விடுமுறையைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. இதையொட்டி, தேவையான முன்னேற்பாடுகளை செய்ய பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது. முதலில் 5 நாள்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விடைத்தாள் திருத்தம், மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட காரணங்களால் செப்.28 முதல் நேற்று வரை 9 நாள்களாக விடுமுறை நீட்டிக்கப்பட்டது.
காவிரி பாயும் பெருமை வாய்ந்த தஞ்சையின் தாராசுரத்தில் அமைந்துள்ளது ஐராவதேஸ்வரர் கோயில். துருவாசரின் சாபத்தால் நிறம் மாறிய ஐராவத யானை இங்கு வந்து ஈசனை வழிபட்டு விமோசனம் பெற்றதாக பெருமை வாய்ந்தது. கி.பி.12இல் 2ஆம் இராஜராஜ சோழரால் இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது. இத்தலத்திற்கு வந்து ஐராவதேஸ்வரர் வணங்கினால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.
Sorry, no posts matched your criteria.