India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அண்மையில் சென்னை கமிஷனராக பொறுப்பேற்ற அருண், “ரவுடிகளுக்கு அவர்களுக்கு புரிகிற மொழியில் பாடம் எடுக்கப்படும்” என நிருபர்களிடம் கூறினார். அவரது பேச்சு மனித உரிமையை மீறும் வகையில் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவரது பேச்சுக்கு அர்த்தம் கேட்டு 14-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ரயில்வேயில் காலியாக உள்ள 25,000க்கும் அதிகமான பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Assistant Loco Pilot பணிக்கு நவ. 25 முதல் 29 வரை தேர்வு நடைபெற உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையில் SI பதவிக்கான தேர்வு டிசம்பர் 2 முதல் 5ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதேபோல், ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட பணிகளுக்கு டிசம்பர் 6-13 வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம மக்களிடம் வித்தியாசமான நடைமுறைகள் இருப்பது வழக்கம்தான். பீகாரில், திரிலோகி பிகா என்ற கிராம மக்கள் மது, இறைச்சியை தொடுவது கூட கிடையாது. அதுமட்டுமின்றி, அக்கிராமத்தில் உள்ள வயதானவர்கள் பூண்டு, வெங்காயம் கூட சாப்பிடாமல் இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக அங்குள்ள இளைஞர்களும் இப்பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். மீறினால் கிராமத்தில் கெட்ட விஷயம் நடக்கும் என்பது அவர்கள் ஐதீகம்.
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வரும் 9, 10 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோயில், கன்னியாகுமரி, தூத்துக்குடிக்கு 1105 பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருக்கு 300 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 110 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
போதைப் பொருள்களின் தலைநகர் குஜராத் பற்றி ஆளுநர் ஏன் வாய் திறப்பதில்லை என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா முழுவதும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் பாஜகவினர் சிக்கியிருப்பதாகவும், தமிழகத்தில் அப்படிப்பட்ட 16 பேரை பாஜகவில் இணைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, கஞ்சா அல்லாத போதைப் பொருள்களை தமிழகத்தில் மத்திய அரசின் அமைப்புகளே கைப்பற்றுவதாக ஆளுநர் பேசியிருந்தார்.
மெரினாவில் விமானப் படை ஏர் ஷோ நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது, அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலை என சீமான் விமர்சித்துள்ளார். மேலும், ஒக்கி புயலால் நடுக்கடலில் என் மீனவர்கள் தத்தளிக்கும் போது வராத வான்படை விமானங்கள், குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கியவர்களுக்காக வராத வான்படை விமானங்கள், இப்போது கடற்கரையில் சாகசம் காட்டுவதால் தமிழினத்திற்கு கிடைக்க போகும் நன்மை என்ன” என வினவினார்.
வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் வைட்டமின்கள் A, C & K போன்ற கனிமச் சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது. வெண்டைக்காயில் உள்ள நார்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் தாதுக்கள் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
பீர் அருந்தும் போது கலோரி அதிகமான Non-Veg உணவுகள் சாப்பிடுவது நல்லதல்ல. காரமான உணவுகள் நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லையை ஏற்படுத்தலாம். Bread, Dark chocolate ஆகியவையும் நல்லதல்ல. Beer, Bread இரண்டிலும் ஈஸ்ட் அதிகம். இது செரிமானத்தை பாதிக்கும். அதிகம் உப்பு சேர்த்த உணவுகளில் Sodium அதிகம் உள்ளதால், Dehydration, BP ஏற்படலாம். மொத்தத்தில் உடல்நலத்துக்கு கேடான பீரை தவிர்ப்பது நலம் என்கின்றனர் டாக்டர்கள்.
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ஐநாவின் 2024ஆம் ஆண்டுக்கான UN-AITF விருது கிடைத்துள்ளதாகவும், இத்திட்டத்தால் இதுவரை 1.80 கோடி பேர் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அமைச்சர் முதல் மருத்துவ பணியாளர்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களை கணக்கிட்டு டிசம்பருக்குள் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவ.7ஆம் தேதியை கடைசி நாளாக அறிவித்து, நாளிதழ்களில் செய்தி வெளியிட வேண்டும் என்றும், நேர்முகத் தேர்வை நவம்பர் இறுதியில் நடத்த வேண்டும் என்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். மேலும், டிசம்பர் இறுதியில் தேர்வானவர்களின் பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.