India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா, நியூசி. அணிகள் இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் 2 போட்டிகளில் நியூசி. அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த சூழ்நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டி மும்பையில் தொடங்கவுள்ளது. ஏற்கெனவே 2 போட்டிகளில் தோற்றதால் இந்திய அணி விமர்சனத்துக்கு ஆளானது. இதனால் 3ஆவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்திய அணியில் முன்பு சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோரின் ஆதிக்கமே இருந்தது. இவர்களுக்கு மத்தியில் வி.வி. எஸ் லட்சுமண் தனக்கென தனி பாணியை வகுத்து ரன்களை குவித்தார். முன்னணி வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியபோது இவர் அசத்தினார். 2001இல் நடந்த டெஸ்டில் தனி ஆளாய் 281 ரன் குவித்தது இன்றும் கண் முன் நிழலாடும். அவருக்கு இன்று பிறந்தநாள். உங்கள் வாழ்த்தை கீழே பதிவிடுங்க.
*1945 – புரட்சிகர எழுத்தாளர் நரேந்திர தபோல்கர் பிறந்தநாள்.
*1954 – புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.
*1956 – மதராஸ் ஸ்டேட் உருவான நாள் (தமிழ்நாடு)
*1959 – தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் மறைந்தநாள்.
*1974 – முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விவிஎஸ் லட்சுமண் பிறந்தநாள்.
* 1986- பிரபல நடிகை இலியானா பிறந்த நாள்.
நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: விருந்தோம்பல்
▶குறள் எண்: 87
▶குறள் : இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்
▶ விளக்க உரை: விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.
SHARE IT.
ரயிலில் டிக்கெட் அட்வான்ஸ் முன்பதிவு நாள் 60ஆக குறைக்கப்பட்டது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ரயில் டிக்கெட்டை 120 நாள்களுக்கு முன் முன்பதிவு செய்வது அமலில் இருந்தது. அதை 60 நாள்களாக குறைத்த ரயில்வே, நவ.1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்திருந்தது. அதன்படி, அது அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக, 2015 ஏப்ரலில் அட்வான்ஸ் முன்பதிவு நாள்கள் 60இல் இருந்து 120ஆக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ. 61.50 உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று வரை சென்னையில் ₹1903க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அந்த விலை ரூ.61.50 உயர்த்தப்பட்டு ரூ.1964.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜூலை 1இல் விலை குறைக்கப்பட்டது. அதன்பிறகு சிலிண்டர் விலை தாெடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 4 மாதங்களில் ரூ.155 உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.
* முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது.அறிவு சற்று தீப்பிடிக்க தாமதமாகும் * ஊரில் பேசிக் கொள்கிறார்கள் என்பது கீழ்த்தரமான தன்மையாகும் * மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;மானமற்ற ஒருவருடன் போராடுவது கஷ்டமான காரியம் * ஓய்வு ,சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன் * தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகி விடுகின்றான்
2031இல் திராவிட கட்சிகள் இல்லாத தமிழ்நாடு உருவாகும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும், இதில் எந்த மாற்று கருத்து கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை சொல்வது போல் 2031இல் திராவிட கட்சிகள் இல்லாத தமிழ்நாடு உருவாகுமா? அதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீங்க. உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் (O.N.O.E.) சாத்தியமற்றது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மோடி சொல்வதை செய்ய மாட்டார் என்றும், ஏனெனில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைவரின் கருத்தும் ஒன்றாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே சொல்வது குறித்து உங்கள் கமெண்டை கீழே பதிவிடுங்க.
Sorry, no posts matched your criteria.