India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. கிழக்கு திசைக்காற்று தமிழகத்தின் ஊடே செல்வதால், வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளது. இதன்காரணமாக, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
ISRO-வில் காலியாக உள்ள 99 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்.9) கடைசி நாளாகும். Medical Officer உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: ITI, MBBS, M.E, M.Tech, Any Degree. சம்பளம் வரம்பு: ₹21,700 – ₹2,08,700. வயது: 18-35. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு & நேர்காணல். கூடுதல் தகவலுக்கு <
உமர் அப்துல்லா ஜம்மு – காஷ்மீர் முதல்வராவார் என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் தங்களுக்கு வழங்கியுள்ளதாகவும், மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்வோம் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு & காஷ்மீரில் காங்.- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஹரியானாவில் காங்கிரஸுக்கு சாதகமான சூழல் இருந்தும், பாஜக முன்னிலை பெற்றுள்ளது. ஜாதி ரீதியான வாக்கு வங்கி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த யுக்தியை பயன்படுத்தியே பாஜக வென்றுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். காங்கிரஸுக்கு ஆதரவாக ஜாட் சமூக மக்கள் 27% இருந்தாலும், ஜாட் அல்லாத ஓபிசி, உயர் சாதி மற்றும் பழங்குடியினரின் வாக்குகளை ஒருங்கிணைத்ததன் மூலம் பாஜக நாற்காலியை தக்கவைத்துள்ளது.
எழுத்தாளர் பவா செல்லதுரையை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், பவா சொல்லும் கதைகளை “பெருங்கதையாடல்” நிகழ்ச்சிகளின் வாயிலாக கேட்டுக்கொண்டே நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டதாகவும், தற்போது அவர் சொல்லும் கதைகளை நேரடியாக கேட்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நவீன இலக்கியவாதிகளின் சரணாலயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக அமைப்புச் செயலாளர், குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் MLA தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அதிமுக கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலில் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது. இதனால், அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக EPS அறிவித்துள்ளார்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளை டிசம்பரில் CBSE அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் 26 நாடுகளில் உள்ள 8,000 பள்ளிகளில் சுமார் 44 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர். அடுத்தாண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தேர்வுகளை நடத்த CBSE திட்டமிட்டுள்ளது. இறுதித் தேர்வுகளுக்கான மாதிரி தாள்களை cbseacademic.nic.in-லிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
* பாகிஸ்தான் உடனான நான்கு போர்களில் 1947-1948, 1965, 1971 (வ.தேச போர்), மற்றும் 1999 (கார்கில் போர்), நம் வான்படை சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை விரட்டியுள்ளது.
* 1961-ல் கோவா இணைப்புக்கும் பக்கபலமாக உதவியது.
* சீனாவுடனான போரில் ராணுவத்துக்கு தேவையான உதவிகளை செய்தது.
* 1984-ல் சியாச்சின் பகுதியை நம் படைகள் கைப்பற்ற உதவியது.
சொத்து வரி, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம், குடிநீர், கழிவுநீர் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன. திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர். போராட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் இரண்டாவது இடத்தையும், இந்திய தேசிய லோக் தளம் வேட்பாளர் சுரேந்தர் லாஹர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
Sorry, no posts matched your criteria.