news

News October 8, 2024

GATE-2025 தேர்வு காலக்கெடு நீட்டிப்பு

image

இன்ஜினியரிங் மாணவர்களுக்கான GATE தேர்வுக்கு பதிவு செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி Oct 03 என்று இருந்த நிலையில், தற்போது Oct 11 வரை late fee உடன் விண்ணப்பம் பதிவு செய்யலாம். Engg மாணவர்கள் IISC, IIIT, NIT உள்ளிட்ட மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ME,M.Tech மற்றும் நேரடியாக PhD படிப்புகளில் சேர GATE தேர்ச்சி உதவும். விண்ணப்பிக்க முகவரி: gate2025.iitr.ac.in.

News October 8, 2024

டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத் இப்போ ஜம்மு&காஷ்மீர்

image

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி தற்போது 5ஆவதாக ஒரு மாநிலத்தில் கால்பதித்துள்ளது. டெல்லி, பஞ்சாப்பை தன்வசப்படுத்தி, கோவா, குஜராத்தில் MLAக்களை உருவாக்கிய AAP, தற்போது J&Kவில் முத்திரை பதித்துள்ளது. தோடா தொகுதியில் போட்டியிட்ட AAP வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் 5000+ வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதன் மூலம் தேசிய அரசியலில் தனித்தடத்தை AAP உருவாக்குவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

News October 8, 2024

காங்கிரஸ் குற்றச்சாட்டு தவறானது

image

ஹரியானா தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் என காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டு தவறானது என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சிக்கு ECI அனுப்பிய கடிதத்தில், பொறுப்பற்ற, ஆதாரமற்ற மற்றும் உறுதிப்படுத்தப்படாத தவறான குற்றச்சாட்டுகளுக்கு, மறைமுகமாக நம்பகத்தன்மையை வழங்குவதற்கான உங்கள் முயற்சியை சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

News October 8, 2024

J&K பாஜக தலைவர் ராஜினாமா

image

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா ராஜினாமா செய்துள்ளார். மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில், பெரும்பான்மை இடங்களை (49) காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ரவீந்தர் ரெய்னா தெரிவித்துள்ளார். BJP-29, PDP-3, OTH-9 இடங்களை பிடித்துள்ளன.

News October 8, 2024

மாநிலக் கட்சிகளை கைவிட்ட ஹரியானா மக்கள்

image

ஹரியானாவில் BJP ஆட்சி உறுதியாகிவிட்டது. கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கிய இத்தேர்தல் முடிவில், மற்றொரு சுவாரஸ்யமும் இருக்கிறது. தேசிய கட்சிகளுக்கே ஹரியானா வாக்காளர்கள் ஆதரவளித்துள்ளனர். பதிவான வாக்குகளில் 80%க்கு மேல் BJP, Cong., கட்சிகளுக்கே சென்றுள்ளது. JJP உள்ளிட்ட எந்த மாநில கட்சிக்கும் ஆதரவில்லை. உள்ளூர் தலைவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லையா.. மோடி, ராகுல் முகங்கள் மக்களை ஈர்க்கிறதா?

News October 8, 2024

7வது முறையாக தேசிய விருது வென்ற AR ரஹ்மான்

image

டெல்லியில் இன்று நடைபெற்ற 70வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் AR ரஹ்மான் ‘பொன்னியின் செல்வன்-1’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றார். இது அவர் பெறும் 7வது தேசிய விருது ஆகும். இதற்கு முன்னதாக ரோஜா, மின்சார கனவு, லகான் (ஹிந்தி), கன்னத்தில் முத்தமிட்டாள், மாம் (ஹிந்தி), காற்று வெளியிடை ஆகிய படங்களுக்காக தேசிய விருது வென்றுள்ளார்.

News October 8, 2024

EB: செந்தில் பாலாஜி போட்ட முதல் உத்தரவு

image

வடகிழக்கு பருவமழையையொட்டி, மரம் வெட்டும் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இயங்கும் நிலையில் இருக்க வேண்டும் என செந்தில் பாலாஜி உத்தரவிட்டார். JCB, கிரேன் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களின் தொலைபேசி எண்களை வைத்துக் கொள்ளவும், மின்சார பணி தொடர்பான தகவல்களை பரிமாற்றிக்கொள்ள வாக்கி டாக்கிகளை கொள்முதல் செய்யவும், மிக தாழ்வாக செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் அறுந்து விழுவதை தடுக்கவும் அறிவுறுத்தினார்.

News October 8, 2024

ODI கிரிக்கெட் 50 ஓவர் போட்டியாக மாறிய கதை

image

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 1975-ல் தொடங்கிவிட்டாலும் அவை 60 ஓவர் போட்டிகளாக தான் இருந்தன. 1983-ல் இந்தியா கோப்பையை வென்றபோதும் 60 ஓவர் போட்டியாக தான் இருந்தது. 1987-ல் இந்தியா – பாகிஸ்தான் இணைந்து நடத்திய ரிலையன்ஸ் உலகக் கோப்பையில் தான் 50 ஓவர் முறை அறிமுகமானது. அந்த ஆண்டு Oct 08 முதல் Nov 08 வரை நடந்த அந்த உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது.

News October 8, 2024

தேசிய விருது பெற்ற தமிழ் பிரபலங்கள்

image

70வது தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம், சுபாஷ்கரன், KGF படத்திற்காக ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு சகோதரர்கள், திருச்சிற்றம்பலம் படத்திற்காக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருதைப் பெற்றனர். சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனன் பெற்றுக்கொண்டார்.

News October 8, 2024

தேர்தலில் முறைகேடு .. காங்., பரபரப்பு புகார்

image

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வெற்றி பறிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கூறிய அவர், தேர்தல் தொடர்பான அனைத்து புகார்களையும் திரட்டி தேர்தல் ஆணையத்திடம் அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!