India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்வதேச T20 போட்டிகளில் அதிக வீரர்களை அறிமுகப்படுத்திய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இதுவரை பாகிஸ்தான் 116 வீரர்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்தியா 117 வீரர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான T20 போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் அறிமுகமானபோது இந்தியா இந்த சாதனையை படைத்தது. AUS 111, SL 108, SA 107, ENG 104, NZ 103 வீரர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களின், முதல் பருவம் மற்றும் காலாண்டு தேர்வு மதிப்பெண் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்ற அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், OCT 15க்குள் இது தொடர்பான அனைத்து பணிகளை செய்து முடிக்கவும், 6-8ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களிடம் எடுத்துரைத்து பணிகளை துரித்தப்படுத்துமாறும் HMகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பிரிவில் காலியாக உள்ள 11,558 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு அக்.20 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதுநிலை அலுவலர் பிரிவில் 8,113 இடங்களும், இளநிலை அலுவலர் பிரிவில் 3,445 இடங்களும் நிரப்படவுள்ளன. +2 தேர்ச்சி பெற்றவர்கள், டிகிரி முடித்தவர்கள் <
அக்டோபர் 11ஆம் தேதி 4 படங்கள் OTTயில் வெளியாக உள்ளன. சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மாரி செல்வராஜின் ‘வாழை’, ‘சூரரைப் போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ ஆகிய படங்கள் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும், விதார்த் நடிப்பில் வெளியான ‘லாந்தர்’ படம் ஆஹா OTT தளத்திலும், யாஷிகா ஆனந்தின் ‘படிக்காத பக்கங்கள்’ சிம்பிலி சவுத் தளத்திலும் வெளியாகிறது. இதில் உங்கள் சாய்ஸ் எந்த படம்?
ஹரியானாவில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை வழங்கிய மக்களுக்கு PM மோடி நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து Xஇல் பதிவிட்டுள்ள அவர், நல்லாட்சி அரசியலுக்கு கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், BJPயின் வளர்ச்சித் திட்டங்களை மக்கள் அறிந்ததன் விளைவுதான் இந்த வரலாற்று வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார். ஹரியானாவில் BJP, தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
OCT 11, 12, 13 ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் ஞாயிறு விடுமுறையையொட்டி நாளை, நாளை மறுநாள் TNSTC சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சொந்த ஊர் செல்வோர் <
ஹரியானா தேர்தலில் காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு Dy CM உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாசிச சக்திகளுக்கு எதிராக அவரது பணி தொடரட்டும் எனக் கூறியவர், மக்களுக்கான பிரதிநிதியாக இந்த புதிய அத்தியாயத்தில் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ், பாஜக வேட்பாளரை விட 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
ஜம்மு- காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் மிகச் சிறப்பானது என்று தெரிவித்து இருக்கிறார் பிரதமர் மோடி. சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35(A) ரத்துசெய்யப்பட்ட பின் நடந்த முதல் தேர்தலில் மக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளனர். இது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இதற்காக ஜம்மு- காஷ்மீரிகள் ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன் என்று மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான டி20 தொடருக்குப் பின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச கிரிக்கெட் வீரர் மஹ்முதுல்லா தெரிவித்துள்ளார். இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் உட்பட 2,914 ரன்களும், 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 28 அரை சதங்கள் உட்பட 5,386 ரன்களும் எடுத்துள்ளார். வரும் 12ம் தேதி நடைபெறும் INDvsBAN டி20 போட்டி இவரது கடைசி போட்டியாகும்.
தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், திண்டுக்கல், கரூர், மதுரை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.