India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு விஜய்தான் முதன்மை காரணம் என சீமான் தெரிவித்துள்ளார். விஜய் மீது சிபிஐ FIR பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், பாஜக கூட்டணிக்கு விஜய் செல்லவில்லை எனில் அவர் மீது வழக்குப்பதிவு செய்வார்கள் என்றார். மேலும், வழக்கை சிபிஐக்கு மாற்றியதும் முன்ஜாமின் மனுவை ஆனந்த் திரும்ப பெறுகிறார் என்றால் சிபிஐ அவரை காப்பாற்றுகிறது என்றே அர்த்தம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு அரசியல் களத்திற்கு வந்த விஜய், அறிக்கை வாயிலாக ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்கட்சிகள், அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கின்றன. இதனிடையே, <<18127990>>வெற்று விளம்பரத்திற்காக<<>> நானும் டெல்டாக்காரன் என CM ஸ்டாலின் பெருமை பேசி வருவதாக விஜய் விமர்சித்துள்ளார். விஜய்யின் அறிக்கைக்கு பிறகு தவெகவினர் மீண்டும் SM-ல் ஆக்டீவாக தொடங்கியுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட அரைடஜன் படங்கள் OTT-யில் வெளிவருகின்றன. ஆனால், வரும் வாரம் ரொம்ப ஸ்பெஷல். ₹800 கோடி வசூல் செய்த படத்தில் தொடங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த மலையாள படம் வரை மக்களின் கவனம் ஈர்த்த படங்கள் OTT-யில் ரிலீசாகவுள்ளன. என்னென்ன படம் என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe பண்ணுங்க. நீங்க இதில் எந்த படத்தை பார்க்க வெயிட்டிங்?

குழப்பமாக இருந்தாலும், இது உண்மை செய்திதான். டெல்லியில் இருந்து துபாய் சென்ற Air India விமானத்தில் இருந்த கரப்பான் பூச்சிக்குதான் இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிரங்கிய பின் விமானத்தின் ஒவ்வொரு ஊழியரும் தங்களின் வேலை குறித்து Logbook-ல் பதிவிட வேண்டும். அப்படி கடந்த அக்டோபர் 25-ம் தேதி, Logbook-ல் ஊழியர் ஒருவர் எழுதிய இந்த குறிப்பு நெட்டிசன்களை அதிரவைத்துள்ளது. நீங்க என்ன சொல்றீங்க?

கர்னூல் பஸ் விபத்து குறித்த ஷாக்கிங் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. விபத்துக்கு காரணமான பைக்கை ஓட்டிவந்த சிவசங்கர் 2:45 மணியளவில் டிவைடரில் மோதி மரணமடைகிறார். பைக்கின் மீது பஸ் மோதியது 2:55 மணிக்கு. இடைப்பட்ட 10 நிமிடங்களில், சாலையில் கிடந்த பைக்கை 19 பேர் கடந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர், பைக்கை ஓரம் கட்டியிருந்தால், இந்த விபத்தே தவிர்க்கப்பட்டிருக்குமே என்ற கேள்வி எழாமல் இல்லை.

58 வயதை தாண்டிய தமிழறிஞர்களுக்கு ‘அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை திட்டம்’ மூலம் TN அரசு மாதந்தோறும் ₹8,000 உதவித்தொகை வழங்குகிறது. மேலும், அரசு பஸ்களில் கட்டணமில்லா பயண சலுகையும் வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெறுபவர்கள் இறந்தால், நாமினிக்கு மாதந்தோறும் ₹3,000 கிடைக்கும். இதற்கு ஆண்டு வருமானம் ₹1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்கணும். விண்ணப்பிக்க <

ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் என்ஜினியர்கள் தான் இருப்பார்கள், அது இப்போது Influencer-களாக மாறியுள்ளது. அதில் தவறில்லை என்றாலும், ஒரு பொருளின் சாதக பாதகங்களை அறியாமலே பலரும் புரமோட் செய்கிறார்கள். இதனால் பல பிரச்னைகள் உருவாகின்றன. இதை தடுக்க, ஒரு பொருளை விளம்பரம் செய்பவர்கள், அதற்கான துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை சீனா விதித்துள்ளது. இதை நம்மூரில் கொண்டுவரலாம் அல்லவா?

ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை உடனடியாக திமுக அரசு நிறுத்த வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். வெற்று விளம்பரத்திற்காக நானும் டெல்டாக்காரன் என ஸ்டாலின் பெருமை பேசிவருவதாகவும் அவர் சாடியுள்ளார். பருவமழையின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க உண்மையாகவே போர்க்கால அடிப்படையில், நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பெயர்களை சொல்லக்கூட தகுதியில்லாதவர் CM ஸ்டாலின் என அன்புமணி விமர்சித்துள்ளார். சமூகநீதியை திமுக குழி தோண்டி புதைத்துவிட்டதாகவும், அதைப்பற்றி பேசவே உங்களுக்கு தகுதியில்லை எனவும் அவர் சாடியுள்ளார். தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுகவை ஏன் வைகோ, திருமாவளவன் வலியுறுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமேசான் நிறுவனம் 30,000 கார்ப்ரேட் ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-க்கு பிறகு(27,000 பேர்) நடக்கும் மிகப்பெரிய வேலை நீக்கமாக இது பார்க்கப்படுகிறது. அமேசான் மொத்தமாக 15% வேலையாள்களை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. AI வளர்ச்சியின் காரணமாக பலர் வேலையிழப்பார்கள் என முன்னரே அந்நிறுவனத்தின் CEO ஆண்டி ஜாஸ்ஸி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.