India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியச் சந்தையில் மேம்படுத்தப்பட்ட 200 DUKE பைக்கை KTM நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6 கியர் பாக்ஸ், 25 Bhp பவர், 19.3 NM டார்க் இழுவிசை, 199.5 cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம்பெற்றுள்ளன. 5 இன்ச் DFT டிஸ்பிளே மூலம் KTM கனெக்ட் ஆப்ஸ் இணைத்து நேவிகேஷன் வசதியை பயன்படுத்தலாம். லிட்டருக்கு 35 Km மைலேஜ் தரும். 159 Kg எடையில், 3 புது வண்ணங்களில் கிடைக்கும் இதன் ஷோரூம் விலை ₹2.03 லட்சமாகும்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காலை 10 மணிவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
தக்காளி, வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும், பெரிய வெங்காயம் ரூ.100-ஐயும் நெருங்கியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ள தமிழக அரசு, அவற்றை பண்ணை பசுமைக் கடைகளில் விற்று வருகிறது. அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.60, வெங்காயம் ரூ.40-க்கு விற்கப்படுகிறது. ஒருவருக்கு 2 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.
சென்னையில் சமீபகாலமாக ரயில்களிலும், பஸ்களிலும் கல்லூரி மாணவர்கள் செய்யும் அராஜகம் அதிகரித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு கூட, ரூட்டு தல விவகாரத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த மோதல் சம்பவத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார். இந்நிலையில், ரயில்களில் இனி ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே போலீசார் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
➤ஏசியன் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: தென் கொரியாவை 2-3 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ➤U-19 ஜூனியர் ஆஸி. அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 492 ரன்னில் ஆல்-அவுட்டானது. ➤குளோபல் செஸ் லீக்: ஆல்பைன் அணியின் வீரர் பிரக்ஞானந்தா, மும்பை மாஸ்டர்ஸ் அணியின் வீரர் விதித் குஜ்ராத்தியை 31ஆவது நகர்த்தலில் வெற்றி கொண்டார்.
➤தென் கொரியா, USAவுக்கு எதிராக அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என வடகொரியா எச்சரித்துள்ளது. ➤லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி சுஹைல் ஹுசைனி உயிரிழந்தார். ➤உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதில்லை என்று அமெரிக்கா அறிவித்தது. ➤ஹைதி பிரதமர் கேரி கோனிலுக்கு எதிரான செரிசியர் ஆயுதக்குழுவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
பிளாக் காஃபி சேர்த்து 3 முக்கிய உணவுப்பொருள்களை சாப்பிடவே கூடாது என டயட்டீஷியன்ஸ் கூறுகின்றனர். பிளாக் காஃபியில் உள்ள கஃபைன் எனும் வேதிப்பொருளுடன் இரும்புச்சத்து கொண்ட நட்ஸ் (பாதாம், முந்திரி, பிஸ்தா), பச்சை இலை காய்கறிகள் (கீரை வகைகள்), மஞ்சள் (குர்குமின்) சாப்பிட்டால் உடலில் வயிற்றுக் கோளாறு, அலர்ஜி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். எனவே, இவற்றுடன் பிளாக் காஃபியை சேர்த்து பருகுவதைத் தவிர்க்கவும்.
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் வழக்கமான அரசு பஸ்களை தவிர 1,715 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணிக்க கடந்த இரண்டே நாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரிசர்வ் செய்துவிட்டனர். ரயில்களிலும் ஏறக்குறைய முன்பதிவு முடிந்துவிட்டது. இந்நிலையில், ஆயுத பூஜை, தீபாவளிக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 44 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே விட்டுள்ளது.
காசி, காஞ்சி உள்ளிட்ட 7 மோட்சபுரிகளுக்குச் சென்று வழிபட்ட புண்ணியத்தை ஒருங்கே அருளும் இடம் புதுக்கோட்டை அடுத்துள்ள திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயிலாகும். காசிமன்னனின் பூர்வஜென்ம பாவத்தை போக்கிய இந்த திருத்தலத்திற்கு பாண்டியர்கள் கற்றளி கோவில் எழுப்பித்தந்ததாக வரலாறு. இங்குச் சென்று இறைவனை வணங்கி, பிரசாதமாக வழங்கும் பஞ்சாமிர்தத்தை உண்டால், தீராத நோய்களும் தீரும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காங்கிரஸ் கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் இருவரை நேற்று இரவு தீவிரவாதிகள் கடத்தினர். இதில் ஒருவர் தப்பி வந்த நிலையில், மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.