news

News October 9, 2024

சண்டை இன்னும் ஓயவில்லை: வினேஷ் போகத்

image

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற செய்த ஜூலானா மற்றும் ஹரியானா மக்களுக்கு வினேஷ் போகத் நன்றி தெரிவித்துள்ளார். ஜூலானா தொகுதியின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் எனக் கூறிய அவர், சண்டை இன்னும் ஓயவில்லை; சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க இன்னும் பலத்துடன் மோத வேண்டும். நமது உரிமைகள் மற்றும் நீதிக்காக தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளார்.

News October 9, 2024

INDvsBAN: இந்திய அணி பேட்டிங்

image

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி சற்று நேரத்தில் பேட்டிங்கை தொடங்க உள்ளது. India Team: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார், நிதிஷ் ரெட்டி, பாண்டியா, ரியான் பராக், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்.

News October 9, 2024

இது மாற்றத்துக்கான தொடக்கமா?

image

சாதாரணமாக தொடங்கும் ஒரு சிறிய நிகழ்வு, எதிர்காலத்தில் பெரிய மாற்றத்திற்கு வித்திடுவதை அரசியல் வரலாற்றில் காண்கிறோம். தற்போது Samsung தொழிலாளர் போராட்டம் அத்தகைய ஒன்றாக அமையுமா? அசைக்க முடியாத கூட்டணியாக இருந்த திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள், இப்போது தொழிலாளர் ஆதரவு நிலை எடுக்க, திமுக அரசு தடுமாறி வருவது தெரிகிறது. இதனால், புதிய போராட்ட களங்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. உங்க கருத்து?

News October 9, 2024

கர்ப்பிணிகளுக்கு காய்ச்சலா? சுகாதாரத்துறை WARNING!

image

தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் நோய்களின் தாக்கம் அதிகம் உள்ளது. இந்நிலையில், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காய்ச்சலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், முதல் நாளிலேயே காய்ச்சல் பரிசோதனைகளை செய்து ஆன்டிபயாடிக்/வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை முன்கூட்டியே வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

News October 9, 2024

நடிகர் அஜித் வழியை பின்பற்றப் போகிறேன்: ரித்திகா சிங்

image

நடிகர் அஜித் ஒரே நேரத்தில் சினிமா, கார் ரேஸ் என இரண்டு துறைகளிலும் சாதித்து, பலருக்கும் ரோல் மாடலாக உள்ளார். இந்நிலையில், அஜித்தைப் போல தானும் வாழ விரும்புவதாக நடிகை ரித்திகா சிங் தெரிவித்துள்ளார். பாக்சரான அவர், ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், ஒரே நேரத்தில் சினிமா, பாக்சிங் என இரு துறைகளிலும் கவனம் செலுத்த உள்ளதாக கூறியுள்ளார்.

News October 9, 2024

இங்க பிடிச்சது அங்க எதிரொலிக்கும்: வானதி

image

ஹரியானா, ஜம்மு&காஷ்மீர் தேர்தல் முடிவுகள், ராகுல் காந்தியின் போலி பிம்பங்களை தகர்த்துள்ளதாக வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக BJP வென்றுள்ளது சாதாரண விஷயமல்ல எனக் குறிப்பிட்ட அவர், J&Kவில் 29 தொகுதிகளில் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், மராட்டியம், ஜார்க்கண்ட் MLA தேர்தலிலும் இந்த வெற்றி எதிரொலிக்கும் எனவும் கூறினார்.

News October 9, 2024

BREAKING: 8,932 பணியிடங்கள்.. TNPSC அறிவிப்பு

image

TNPSC குரூப் – 4 தேர்வு பணியிடங்களுக்கான எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி 6,724 இடங்கள் அறிவிக்கப்பட்டது. தற்போது, கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 8,932ஆக அதிகரித்துள்ளது. குரூப்-4 பணியிடங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்ததை ஏற்று, TNPSC இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

News October 9, 2024

Recipe: கம்பு இனிப்பு அடை செய்வது எப்படி?

image

உளுந்தையும், வெந்தயத்தையும் 3 மணி நேரம் ஊற வைத்து இட்லிக்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கம்பு மாவு சேர்த்து அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். அதில், பனை வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும். பிறகு சூடான தவாவில் நெய் காய்ந்ததும் இந்த மாவை தட்டிப் போடவும். பொன்னிறமாக மாறும்வரை இருபக்கமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்தால், சுவையான கம்பு அடை ரெடி.

News October 9, 2024

UPI பயனர்களுக்கு நற்செய்தி சொன்ன RBI

image

இன்டர்நெட் இல்லாமல் கீபேட் போன் பயன்படுத்துபவர்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. அதாவது, UPI123Pay பரிவர்த்தனை வரம்பை ₹5,000இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தியுள்ளது. UPI Lite Wallet உச்ச வரம்பு ₹2,000இல் இருந்து ₹5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், பயனர்கள் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை எளிமையாக செய்ய முடியும் என்று RBI தெரிவித்துள்ளது.

News October 9, 2024

ஹரியானா தேர்தல்: காங்கிரசை அழைத்த தேர்தல் ஆணையம்

image

ஹரியானா தேர்தல் விவகாரம் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸூக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதிகளில் EVM இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் காங்., கூறியிருந்தது. இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு காங்.,குழு, தங்களை வந்து சந்திக்கலாம் என கார்கேவுக்கு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

error: Content is protected !!