India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா(86) மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது x பதிவில், ”தொலைநோக்குப் பார்வையுள்ள தொழிலதிபரும், பழமையான மதிப்பு வாய்ந்த நிறுவங்களின் தலைவராக விளங்கினார். பணிவு , இரக்கம், அர்பணிப்பு காரணமாக அனைவராலும் நேசிக்கப்பட்டவர்” என அவருக்கு புகழாரம் சூட்டினார்
இன்று (அக். 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (அக். 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மருத்துவமனையில் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த அவர், 2012-ல் ஒய்வு பெற்றார். பல லட்சம் இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் உலக அரங்கில் திறமையான தொழிலதிபராகவும் திகழ்ந்த ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சாம்சங் ஊழியர்களை போராட அனுமதிக்குமாறு தமிழக அரசை, இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக அரசு செயல்படுவது மோசமான அணுகுமுறை என விமர்சித்த அவர், சட்டத்திற்கு முரணாக தொழிலாளர்களை கைது செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், தொழிலாளர்களை அச்சுறுத்த, காவல்துறையை ஒரு கருவியாக அரசு பயன்படுத்துவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
◙மேஷம் – விருப்பம்
◙ரிஷபம் – ஜெயம்
◙மிதுனம் – நிம்மதி
◙கடகம் – சாந்தம்
◙சிம்மம் – அமைதி
◙கன்னி – பாசம்
◙துலாம் – அன்பு
◙விருச்சிகம் – முயற்சி
◙துனுசு – பாராட்டு ◙மகரம் – ஆர்வம்
◙கும்பம் – உதவி ◙மீனம் – பக்தி
மகளிர் T20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இலங்கையை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 172/3 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது இந்திய அணி.
BAN-க்கு எதிரான 2ஆவது T20 போட்டியில் IND அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த IND, 221 ரன்கள் குவித்தது. இந்த கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய BAN அணி முதல் ஓவரில் அதிரடியாக விளையாடியது. ஆனால், 3ஆவது ஓவருக்கு பின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த BAN, 20 ஓவரில் 135/9 ரன்கள் மட்டுமே எடுத்து 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், 2 -0 என்ற கணக்கில் IND தொடரை கைப்பற்றியது.
தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்து, இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. நெடுந்தீவு அருகே 21 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி அனைவரையும் கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். மீனவர்கள் கைதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, CM ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் எந்த பயனும் இல்லை.
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது T20 போட்டியின் கடைசி ஓவரை வங்கதேச வீரர் ரிஷாத் ஹொசைன் அசத்தலாக வீசினார். 19 ஓவருக்கு 213 ரன்கள் குவித்த இந்தியா, கடைசி ஓவரில் சிக்ஸர் மழை பொழியும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ரிஷாத் ஹொசைன் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி, மெர்சல் செய்தார்.
Sorry, no posts matched your criteria.