India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் சமூக ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும், நோக்கில் ரத்தன் டாடாவின் இயக்கம் இருந்தது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு உதவும் உறுதுணை (Companionship) சேவையை வழங்கி வரும் ‘Goodfellows’ ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் கடந்த 2022-ல் அவர் முதலீடு செய்தார். அதேபோல் முன்னாள் ஊழியர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது நேரடியாக அவர் இருப்பிடத்துக்கு சென்று நலம் விசாரித்தவர்.
ரத்தன் டாடா மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கார்கே, இந்தியாவின் விலைமதிப்பற்ற மகனை இழந்துவிட்டோம். கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு உத்வேகமாகவும் அடையாளமாகவும் இருந்தார் என்றார். ராஜ்நாத் சிங், ரத்தன் டாடா இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு மகத்தான பங்களிப்பு வழங்கி உள்ளதாக புகழாரம் சூட்டினார்.
*என்னால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும், அதனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் அல்லது சூழ்நிலை குறித்த அவர்களின் கருத்துக்கள் என்னைத் தொந்தரவு செய்யாது. * பந்தயத்தின் தொடக்கத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள், முடிவைப் பற்றிச் சிந்தியுங்கள்.
*உங்கள் கனவுகளை நம்புங்கள், எதுவும் சாத்தியமாகும்.
•1937-ம் ஆண்டு நேவல் டாடாவிற்கும் சூனி டாடாவிற்கும் பிறந்தார்.
•1962- டாடா ஸ்டீல் மூலம் டாடா குழுமத்தில் இணைந்தார்.
•1991-ம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். பல புதிய மூலம் நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார்.
•2000 – பத்ம பூஷன், 2008 – பத்ம விபூஷன் விருதை பெற்றார்.
•2012 – 75வது பிறந்தநாளில் டாடா குழுமத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
ரத்தன் டாடா மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனையடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய தொழில்துறையின் மாபெரும் ஆளுமையாக விளங்கியதாக அவருக்கு புகழாரம் சூட்டிய முதல்வர், டாடாவின்
தொலைநோக்குப் பார்வை டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது என்றார். மேலும் அவரது குடும்பத்தினர், டாடா குழும ஊழியர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: அன்புடைமை. ▶குறள் எண்: 77
▶ குறள்: அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று.
▶பொருள்: மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
ரத்தன் டாடா மறைவுக்கு மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், ரத்தன் டாடா இல்லாததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் மறைவுக்கு நாம் செய்ய வேண்டிய அஞ்சலி, அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதாக உறுதி ஏற்பதுதான். Goodbye டாடா. நீங்கள் மறக்கப்பட மாட்டீர்கள். ஏனென்றால் லெஜெண்டுகள் ஒருபோதும் மறைந்து போவதில்லை என கூறியுள்ளார்.
ரத்தன் டாடா மறைவுக்கு, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் x தளத்தில் இரங்கல் தெரிவித்தார். அதில், ரத்தன் டாடா தனக்கு ஒரு நல்ல நண்பராகவும், வழிகாட்டியாகவும் இருந்தாக தெரிவித்த அவர், பணி, நேர்மை மற்றும் புதுமை ஆகியவற்றில் தனது அர்ப்பணிப்புடன் சர்வதேச அளவில் முத்திரை பதித்தவர் என புகழாரம் சூட்டினார். அவரால் பல லட்சம் மக்கள் பயனடைந்துள்ளதாகவும், டாடா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்தார்.
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது x பதிவில், ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர். அவர் வணிகம் மற்றும் philanthropy ஆகிய இரண்டிலும் தனி முத்திரையை பதித்தவர் என பாராட்டிய அவர், ரத்தன் டாடா குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
▶அக். 10 (புரட்டாசி 24) ▶வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நேரம்: 1:00 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶ எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: அஷ்டமி ▶ பிறை: வளர்பிறை ▶ சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: தெற்கு ▶ பரிகாரம்: தைலம் ▶ சந்திராஷ்டமம்: ரோகிணி ▶ நட்சத்திரம்: மூலம் அ.கா 2.06 ▶யோகம்: சித்த யோகம்
Sorry, no posts matched your criteria.