India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படவுள்ளது. அதாவது, 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,400 முதல் அதிகபட்சமாக ரூ.16,800 வரை போனஸாக கிடைக்கும். இதனால் 2.75 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர்.
ரத்தன் டாடாவின் அசுர வளர்ச்சிக்கு அசாத்திய துணிச்சலும், அபார தன்னம்பிக்கையுமே காரணம். அவரது சில பொன்மொழிகள்: 1)ரிஸ்க் எடுக்காததுதான் பலர் வாழ்க்கையில் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க். 2) வேகமாக செல்ல விரும்பினால், தனியே செல்லுங்கள்; நீண்டதூரம் செல்ல விரும்பினால் சேர்ந்து செல்லுங்கள். 3) வாழ்வின் ஏற்ற இறக்கமே நம்மை முன்னுக்கு கொண்டு செல்லும். ECG-இல் கோடு நேராக இருந்தால் நாம் இறந்ததாக அர்த்தம்.
அம்பிகைக்குரிய நவராத்திரியின் 8ஆவது நாளான அஷ்டமி தினத்தை ‘துர்காஷ்டமி’ என புராணம் கூறுகிறது. சண்டன்-முண்டன் அசுரர்களை அழித்த சிறப்பு வாய்ந்த இந்த நன்னாளில் காலையிலேயே குளித்து, விரதமிருந்து, ராகு காலத்தில் பட்டீஸ்வரம் கோயிலுக்குச் சென்று துர்க்கைக்கு வெண் தாமரை மலர் மாலை சாற்றி, தேவி அஷ்டக துதியைப் பாடி, எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டால் தீய சக்திகளால் உண்டான தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
1) 1937-இல் பிறந்த ரத்தன் டாடாவின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக 1948-இல் பிரிந்துவிட்டனர். பிறகு தனது பாட்டி நவஜ்பாய் டாடா பராமரிப்பில்தான் அவர் வளர்ந்தார். 2) ரத்தன் டாடாவுக்கு 4 முறை திருமணம் நடைபெறுவதற்கான சூழல் நெருங்கிய போதிலும், கடைசி நேரங்களில் அவை கை நழுவின. 3) அமெரிக்க பெண்ணை காதலித்து வந்த டாடா, அவரை திருமணம் செய்யும் தருணத்தில் இந்தியா – சீனா போர் மூண்டதால் அதுவும் நடக்கவில்லை.
ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை, அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். ரத்தன் டாடாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய அவர், மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்ற அவர், பல்வேறு தொழில்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த அவர், எப்போதும் நம் நினைவிலும் இருப்பார் என்றார்.
விடுபட்ட மகளிருக்கும் ₹1,000 உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என Deputy CM உதயநிதி கூறியுள்ளார். ஆவடியில் பேசிய அவர், விடியல் பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, காலை சிற்றுண்டி போன்ற திட்டங்களால் பெண்கள் பயனடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் CM ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுசென்று, விடுபட்ட பெண்களுக்கும் உரிமைத் தொகை ₹1,000 வழங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவை சந்தித்த நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துள்ளார் கமல்ஹாசன். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ரத்தன் டாடா என்னுடைய ஹீரோ. அவரை பின்பற்ற என் வாழ்நாள் முழுவதும் முயற்சித்திருக்கிறேன். 2008 மும்பை தாக்குதலுக்கு பிறகு நான் தாஜ் ஓட்டலில் தங்கியிருந்த போது, அவரை சந்தித்தேன். அந்த நெருக்கடியான தருணத்திலும், அவர் பலமான ஆளுமையாக நிமிர்ந்து நின்றது ஆச்சரியம் தந்தது” என்றார்.
இந்தியாவில் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி, அதானி போன்றவர்கள் முன்னணியில் உள்ளனர். ஆனால் நீங்கள் என்றாவது ஏன் ரத்தன் டாடா இந்த பட்டியலில் இல்லை என யோசித்து உண்டா. நிஜத்தில் டாடா, அவர்களை விட பணக்காரர் தான். ஆனால் அவரின் 80% சொத்துகளை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என குரல் எழுந்தபோது இந்தியனாக இருப்பதே தனது அதிர்ஷ்டம் என தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’வேட்டையன்’ திரைப்படம் இன்று வெளியாகிறது. ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில், அமிதாப், மஞ்சு வாரியர், ஃபகத், ராணா, துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ’ஜெய் பீம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
1780 – மேற்கிந்திய தீவுகளில் நிகழ்ந்த பெரும் சூறாவளியில் சிக்கி 20,000-30,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1935 – கிரீஸில் நடைபெற்ற ராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.
1949 – விடுதலை பெற்ற பின் இலங்கையில் புதிய ராணுவம் உருவாக்கப்பட்டது.
1980 – வடக்கு அல்ஜீரியாவில் 7.1 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2,633 பேர் உயிரிழந்தனர்.
2015 – தமிழக திரைப்பட நகைச்சுவை நடிகை மனோரமா மறைந்த தினம்.
Sorry, no posts matched your criteria.