news

News October 10, 2024

முதல் நாளே ராஜினாமா: SHOCK கொடுத்த ஊழியர்

image

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ரிசைன் பண்ணி கம்பெனிக்கு ஷாக் கொடுத்துள்ளார் கர்நாடகாவை சேர்ந்த இளைஞர். முதல் நாளே, கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டும் என்றும், அதற்கு கூடுதல் சம்பளம் கிடையாது என்றும் உயரதிகாரி கூறியுள்ளார். Work – Life balance பாக்க வேணாமா என ஊழியர் கேட்க, அதெல்லாம் மேற்கத்திய கலாசாரம் என பதில் வந்துள்ளது. பிறகென்ன, நீங்களும் வேண்டாம், உங்க வேலையும் வேண்டாம் என கிளம்பிவிட்டார்.

News October 10, 2024

ஆயுத பூஜை விடுமுறை: ஷாக் கொடுத்த விமானக் கட்டணம்

image

ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி பஸ்களிலும், ரயில்களிலும் முன்பதிவு முடிந்ததால், தற்போது விமானங்களை பலர் நாடி வருகின்றனர். ஆனால், இதுதான் நேரம் என்பதை போல, விமான நிறுவனங்கள், பயணக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன. சென்னை – கோவை விமானக் கட்டணம் ₹ 3,290 ₹ 10,996-ஆக உயர்ந்துள்ளது. சென்னை – தூத்துக்குடி இடையேயான கட்டணம் ₹ 5,006-இல் இருந்து ₹ 11,736 வரை அதிகரித்துள்ளது. உங்கள் அனுபவத்தை சொல்லுங்க.

News October 10, 2024

“நீட் ரத்து என்னாச்சு?” விளாசிய இபிஎஸ்

image

நீட் தேர்வில் தோல்வி விரக்தியில் சேலம் மாணவி நேற்று தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், நீட் ரத்து குறித்து DMK அரசு அளித்த வாக்குறுதி என்ன ஆனது என EPS கேள்வி எழுப்பியுள்ளார். DMK, Cong இரண்டு கட்சிகள் சேர்ந்து தான் நீட் தேர்வை கொண்டு வந்ததாக குறிப்பிட்ட அவர், ஆட்சி பொறுப்பேற்று 41 மாதம் ஆன நிலையில், நீட்-ஐ ரத்து செய்ய திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News October 10, 2024

நான் சாய கிடைத்த கடைசி தோள்: ஸ்டாலின் இரங்கல்

image

மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “திமுகவின் கொள்கை செல்வம் மறைந்தார். முரசொலி ஆசிரியராக பொறுப்பேற்று, தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர். நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை, கொள்கை தூணை இழந்து நிற்கிறேன்” எனக் கூறினார்.

News October 10, 2024

முரசொலி செல்வம் காலமானார்

image

முரசொலி மாறனின் சகோதரரும், கருணாநிதியின் மருமகனுமான முரசொலி செல்வம் (84) இன்று காலமானார். திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தார். முரசொலியை திமுகவினரை தாண்டி, சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்ததில் இவரது பங்கு அதிகம். முதல்வர் மு.க. ஸ்டாலினின் அரசியல் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார். மாரடைப்பால் அவர் இன்று காலமானார்.

News October 10, 2024

“மறக்க முடியவில்லை.. போய் வா நண்பா!”

image

ரத்தன் டாடா மறைவுக்கு, பாலிவுட் நடிகை சிமி கெர்வாலின் இரங்கல் உணர்ச்சிகரமாக உள்ளது. சில பத்தாண்டுகளுக்கு முன் டாடாவும் சிமியும் காதல் உறவில் இருந்தனர். பின்னர் பிரிய நேர்ந்தது. இந்நிலையில் X பக்கத்தில் டாடாவுக்கு இரங்கல் பதிவிட்டுள்ள சிமி, “நீ போய்விட்டதாக எல்லாரும் சொல்கின்றனர். இதை தாங்க முடியவில்லை. மிகக் கடினமாக உள்ளது. போய் வா, நண்பா!” என்று உருகி இருக்கிறார்.

News October 10, 2024

20 தொகுதிகளில் Voting Machines ஹேக்: CONGRESS புகார்

image

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக ECI-யிடம் புகார் அளித்துள்ளது காங்., கட்சி. மேலும், 7 தொகுதிகளில் ஹேக் செய்யப்பட்ட ஆதாரங்களை வழங்கி உள்ளதாகவும், விசாரணை முடியும்வரை இயந்திரங்களை பாதுகாக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. தேர்தலில் காங்., அதிக இடங்களை வெல்லும் எனக் கூறப்பட்ட நிலையில், பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.

News October 10, 2024

Recipe: முசுக்கை அடை செய்வது எப்படி?

image

சின்ன வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, முசுக்கை இலைகள் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, மல்லித் தழைகளைச் சேர்த்து தாளித்து, நன்றாக வதக்கவும். பின்னர், இக்கலவையை மசிய அரைத்து, சாமை அரிசி மாவுடன் கலந்து பிசையவும். அதை சூடான தோசைக் கல்லின் மேல் தடிமனாக தட்டி, வேக வைத்து எடுத்தால், சுவையான முசுக்கை அடை ரெடி.

News October 10, 2024

‘வேட்டையன்’ First View விமர்சனம்

image

ஞானவேலின் சமூக நீதி பார்வையில் ரஜினியின் மாஸ் கமர்ஷியல் படமாக வேட்டையன் இருக்கிறது. ரஜினி, அமிதாப்பின் அசுரத்தனமான ஸ்கிரீன் பிரசன்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. என்கவுன்டருக்கு எதிராக மட்டுமல்ல கல்வியில் நடக்கும் ஊழலையும் படம் பேசி இருக்கிறது. குற்ற விசாரணையாக நகரும் முதல் பாதி மிரள வைப்பதாக கூறும் பார்வையாளர்கள், 2ஆம் பாதியில் கொஞ்சம் தொய்வு என்கின்றனர். WAY2NEWS-இன் முழு Review-க்கு காத்திருங்கள்.

News October 10, 2024

Health Tips: பாலூட்டும் பெண்கள் உடற்பயிற்சி செய்யலாமா?

image

குழந்தைக்கு பாலூட்டும் பெண்கள் உடல் எடையைக் குறைக்க க்ராஷ் டயட் & அதீத உடற்பயிற்சிகளைச் செய்யக்கூடாது என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரசவத்திற்கு பிறகு தாய்மார்களின் எடை அதிகரிப்பது இயல்பானது. அதைக் கண்டு பயமோ பதற்றமோ கொள்ளத் தேவையில்லை. அதீத உடற்பயிற்சி மேற்கொள்வதால் பால் உற்பத்தி குறைவதோடு, அதன் விளைவாக குழந்தையின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுமென அவர்கள் எச்சரிக்கின்றனர்.

error: Content is protected !!