India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் படம், 4 நாளில் ₹150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த ராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்ததுடன், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தீபாவளியன்று ரிலீஸான படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ்-பெங்களூருடன் இன்று மோதவுள்ளன. தலைவாஸ் அணி 3 வெற்றி, 1 டை, 1 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று 2-ஆவது இடத்தில் உள்ளது. பெங்களூரு புல்ஸ் 1 வெற்றி, 5 தோல்வியுடன் 7 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ஐதராபாத்தில் நடைபெறும் இந்த போட்டி இன்று இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் 12 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் 22 ஆட்டங்களில் விளையாடவுள்ளன.
ஆந்திராவில் பாலியல், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ள துணை முதல்வர் பவன் கல்யாண், தான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றால், நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும் எனத் தெரிவித்தார். உள்துறை அமைச்சர் அனிதா தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்திய பவன், நிலைமை இப்படியே சென்றால், தானே உள்துறை அமைச்சருக்கான பொறுப்பை கையிலெடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார்.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் உள்ள பேட்டரிகள் தரம் குறைவாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த சுனில் என்பவர் இதுகுறித்து ஓலாவுக்கு பலமுறை புகார் அளித்தும், நிறுவனம் சரியாக பதில் அளிக்காததால் அவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். விசாரித்த நீதிமன்றம் ஓலாவுக்கு ரூ.1.73 லட்சம், நுகர்வோரின் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கேள்வி கேளுங்கள்!
HDFC வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளையும் (நவ.5), நவ.23-ம் தேதியும் HDFC வங்கியின் UPI சேவை 2 மணிநேரத்திற்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே. மேலே குறிப்பிடப்பட்ட தேதிகளில் பிற்பகல் 12 முதல் 2 மணி வரை G Pay, Mobile Banking, Paytm, Whatsapp pay, Mobikwik உள்ளிட்டவற்றில் பணம் அனுப்ப முடியாது.
ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வர பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதிய அரசு அமைந்த பிறகு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது பிடிபி எம்எல்ஏ வஹீத் பாரா சட்டப்பிரிவு 370 தீர்மானத்தை முன்மொழிந்தார். இதற்கு பாஜக MLA-க்கள் 28 பேரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீர்மானத்தை அங்கீகரிக்கவில்லை என சபாநாயகர் அறிவித்தார்.
உத்தராகண்ட் மாநிலம் மார்ச்சுலா என்ற இடத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. பேருந்தில் 50 பேர் பயணித்த நிலையில், 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். NDRF, SDRF மற்றும் உள்ளூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 24 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில CM தலா ₹4 லட்சம் நிதி அறிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை விஜய் எதிர்ப்பது ஆச்சரியமாக உள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். விஜய் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதால் விஜய்யும் அதை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு விஷயத்தையும் விஜய் study பண்ணி பேச வேண்டும் என்றார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ODI தொடரில் விளையாடி வருகிறது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸி., 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய பாக்., 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய ஆஸி., 204/8 ரன்கள் எடுத்து வென்றது. கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கம்மின்ஸ் (32*) அணியை வெற்றி பெறச் செய்தார்.
தவெக மாநாட்டுக்கு பின்னர் விஜய் பல அதிரடியில் இறங்க திட்டமிட்டுள்ளார். இதன் முதல்கட்டமாக, போராட்டத்தில் குதிக்க விஜய் முடிவு செய்துள்ளார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கோரி, விஜய் தலைமையில் தவெக மாபெரும் போராட்டத்தில் விரைவில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனவ மக்கள் மத்தியில் விஜய்க்கு அதிக செல்வாக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.