India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
BiggBoss-ல் ஸ்கோர் செய்வதில் ஒவ்வொருவரும் தீவிரமாக உள்ளனர். ஃபேட்மேன், ரஞ்சித் இடையில் நடந்த சண்டை ‘ப்ராங்க்’ எனத் தெரிந்ததும் ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை சமாதானப்படுத்த ரஞ்சித் சௌந்தர்யா நெற்றியில் முத்தமிட்டு, ஜாக்குலின் கன்னத்தை கிள்ளிவிட்டு சென்றார். இதை பலர் விமர்சிக்க, ‘நெற்றியில் இட்ட முத்தம் புனிதமானது’ என்று ரஞ்சித்துக்கு ஆதரவு கொடுத்துள்ளார் வனிதா.
பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து 150 ஓவர்கள் பேட்டிங் செய்து, 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. ஹாரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களும் குவித்தனர். டெஸ்ட்டில் ஒரு அணி 800 ரன்களுக்கு மேல் குவிப்பது, 27 ஆண்டுகளுக்கு பின் தற்போது நடந்துள்ளது. இதற்கு முன் 1997-ல் கொழும்புவில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இலங்கை 952 ரன்கள் எடுத்திருந்தது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது சனிக்கிழமை பள்ளிகள் திறந்திருக்கும் என பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பால் மாணவர்கள் குழம்பி விட்டனர். இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்காக மட்டுமே பள்ளிகள் திறந்திருக்கும். ஆனால், மாணவர்களுக்கு வழக்கம்போல் பொதுவிடுமுறை தான் என்றும், திங்கட்கிழமை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஜினி நடித்து இன்று திரையரங்கில் வெளியான வேட்டையன் திரைப்படம் இணையத்தில் வெளியானது. என்கவுன்டர், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வியாபாரம் ஆகிய 2 முக்கிய பிரச்னைகளை பேசும் வேட்டையனுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், ஆயுதபூஜை விடுமுறையில் வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால், படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
முல்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 262 ரன்கள் குவித்தார். இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் என்ற மைல் கல்லை அவர் கடந்துள்ளார். மேலும் 20,000 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 இரட்டை சதம் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் ரெக்காடையும் ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.
விண்வெளி ஆய்வுக்காக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமாண்ட (MACE) தொலை நோக்கியை லடாக்கில் இந்தியா நிர்மாணித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4,300 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இது, உலகின் உயரமான தொலைநோக்கியாகும். காமா கதிர்கள், நட்சத்திர வெடிப்புகள், கருந்துளை குறித்த ஆராய்ச்சிகளுக்கு இதன் தரவுகள் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இது புதிய மைல் கல்லாகும்.
இப்போதுள்ள படங்கள் அந்தந்த நேரத்துக்கு நன்றாக இருக்கலாம், ஆனால், தன் படங்கள் போல் எவர்கிரீன் அல்ல என்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். இதுபற்றி அவர், இப்போ வர படங்கள்லாம் தியேட்டர்ல ஒரு நாள் பாத்துட்டு டிவில மறுபடியும் பாத்தா போர் அடிக்குது. ஆனா, தன்னோட படங்களை எத்தனை முறை டிவியில் போட்டாலும் ஜனங்க இன்னும் உட்கார்ந்து போர் அடிக்காம பாக்குறாங்க என்று பெருமையாக சொல்கிறார். உங்க அனுபவம் எப்படி?
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் வெளியே செல்லும்போது பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பார்சி வழக்கப்படி, இறந்த உடலை எரிக்கவோ, புதைக்கவோ மாட்டார்கள். மனிதன் இயற்கையின் பரிசு என்றும், அதை திருப்பித்தர வேண்டும் எனவும் அவர்கள் நம்பினர். இதனால் பண்டைய காலத்தில் ஊர் எல்லையில், DAKHMA என மண் கோபுரம் அமைத்து, உடலை வைத்துவிடுவர். இயற்கையாய் சிதைந்து போகும் வகையிலும், பறவைகளுக்கும் உடல் உணவாகிவிடும். ஆனால் கால மாற்றத்திற்கு ஏற்ப, அந்த வழக்கம் தற்போது இல்லை. டாடாவின் உடல் எரியூட்டப்பட்டது.
விடுபட்ட மகளிருக்கும் ₹1,000 உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என Deputy CM உதயநிதி கூறியுள்ளார். ஆவடியில் பேசிய அவர், விடியல் பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, காலை சிற்றுண்டி போன்ற திட்டங்களால் பெண்கள் பயனடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் CM ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுசென்று, விடுபட்ட பெண்களுக்கும் உரிமைத் தொகை ₹1,000 வழங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
Sorry, no posts matched your criteria.