India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக கூட்டணியில் குழப்பம் நிலவி வருவதாகவும், கம்யூ., விசிக தனித்தனி பிரிவாக உள்ளதாகவும் EX மினிஸ்டர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், காங்கிரசுக்காக விழுந்த ஓட்டுகளை திமுக தனக்கானதாக எண்ணி வருவதாகவும் கிண்டலடித்தார்.
டாடா மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், ”ஒரு நல்ல நண்பரை பிரான்ஸ் இழந்துவிட்டது. டாடாவின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியா& பிரான்ஸ் நாடுகள் உற்பத்தித் துறைகளில் மேம்பட்டன. அதையும் தாண்டி, அவரது மனிதநேய பார்வை, மகத்தான தொண்டு மற்றும் அவரது பணிவு ஆகியவற்றால் டாடா நினைவுகூரப்படுவார். இந்திய மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
2024 – 25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் வேலைநாட்கள் 210 நாட்களுக்கு குறையாமல் இருப்பதை, தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இனிவரும் அனைத்து வாரத்திலும் சனி, ஞாயிறு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், அரையாண்டு தேர்வு நடைபெறும் போது ஒரு சனிக்கிழமை (டிச. 21) மட்டும் வேலை நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சயனக்கோலத்தில் மிக அபூர்வமாக துர்க்கை பற்றிக்கொண்ட கோலத்தில் அருளும் தலம்தான், நெல்லை வடக்கு செழியநல்லூர் சயன வனதுர்க்கை கோயிலாகும். சிறப்பு வாய்ந்த மஹாநவமி நன்னாளில் காலையிலேயே குளித்து, விரதமிருந்து, இக்கோயிலுக்குச் சென்று துர்க்கைக்கு சிவப்புப் பட்டும் செவ்வரளிப்பூ சாற்றி, நெய் தீபமேற்றி, பொங்கலிட்டு, அங்கு தரும் வேம்பை வீட்டில் கொண்டுவந்து வைத்து வணங்கினால் தீய சக்திகள் விலகும் என்பது ஐதீகம்.
அடுத்தாண்டு ஜூன் 15ஆம் தேதி குரூப் 1 தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வு அடுத்தாண்டு ஜூலை 13ஆம் தேதியும், குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28ஆம் தேதியும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை www.tnpsc.govt.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.
2024-25 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. 5 மாதங்கள் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 32 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள சாய் கிஷோர் தலைமையான தமிழ்நாடு அணி இன்று தனது முதல் போட்டியில் சவுராஷ்டிரா அணியை எதிர்கொள்கிறது. சென்ற முறை அரையிறுதியில் தோல்வியடைந்த தமிழ்நாடு இந்தமுறை நிச்சயம் கோப்பையை வெல்லும் நோக்கி களமிறங்கும். All the best தமிழ்நாடு.
1811 – முதலாவது நீராவிப் படகுக் கப்பல் சேவை ஜூலியானா நியூயார்க்கிற்கும் நியூ செர்சி, ஓபோகின்
நகருக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
1908 – தமிழிசைப் பாடகி, நாடக, திரைப்பட நடிகை கே. பி. சுந்தராம்பாள் பிறந்தநாள்.
1968 – நாசா முதல்முறையாக மூன்று விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு அனுப்பியது.
1984 – ரஷ்யாவின் ஓம்சுக் நகரில் ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 178 பேர் உயிரிழந்தனர்.
இன்று 4 படங்கள் OTTயில் வெளியாக உள்ளன. சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மாரி செல்வராஜின் ‘வாழை’, ‘சூரரைப் போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ ஆகிய படங்கள் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும், விதார்த் நடிப்பில் வெளியான ‘லாந்தர்’ படம் ஆஹா OTT தளத்திலும், யாஷிகா ஆனந்தின் ‘படிக்காத பக்கங்கள்’ சிம்பிலி சவுத் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது. உங்கள் சாய்ஸ் எது?
நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள 15-24 வயதுக்குட்பட்ட இளவயதினரில் 82% பேர், இன்டர்நெட் பயன்பாடு குறித்து அறிந்துள்ளதாக, மத்திய அரசின் ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 13லட்சம் நபர்களிடம் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. அதில் 95% பேர் வங்கிக் கணக்கு குறித்தும், 27% பேர் மின்னஞ்சல், இன்டர்நெட் பேங்கிங் பயன்பாடு குறித்தும் அறிந்துள்ளனர். 95% பேருக்கு வங்கிக் கணக்கு உள்ளது.
Sorry, no posts matched your criteria.