India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மிக கனமழை எச்சரிக்கை எதிரொலியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எவ்வித பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வருவாய் பேரிடர் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேடிஎம் CEO விஜய் சேகர் சர்மா வெளியிட்ட இரங்கல் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ட்வீட் செய்த அவர், அடுத்த தலைமுறை தொழில் முனைவோர் இந்தியாவின் எளிமையான தொழிலதிபருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை தவறவிடுவார்கள் எனப் பதிவிட்டிருந்தார். மேலும், ஓகே Tata bye bye எனக் குறிப்பிட்டதற்கு கண்டனங்கள் வலுத்தது. இதைத் தொடர்ந்து அவர் அந்த பதிவை நீக்கினார்.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி திருநாளையொட்டி விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துகள். தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களை வணங்கி வழிபடுவோம் எனக் கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சையான நிலையில், ஆயுத பூஜைக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார்.
➤செங்கடல் பகுதியில் சென்ற லைபீரிய சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். ➤தைவானுக்கு ராணுவ உதவிகளை வழங்கிய 3 அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா பொருளாதார தடை விதித்துள்ளது. ➤லெபனானிலுள்ள ஐ.நா. அமைதிப் படை நிலை வீரர்கள் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். ➤ஐ.நாவின் HRC குழுவில் இணைவதற்கான வாக்கெடுப்பில் சவுதி அரேபியா தோல்வியுற்றது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்தப் படத்தை கன்னடத்தில் ‘கர்கி’ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்குநர் பவித்ரன் வெளியிட்டுள்ளார். கதாநாயகனாக நடிகர் ஜே.பி, நாயகியாக மீனாட்சி, முதன்மை வேடத்தில் சாது கோகிலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாதி ஒழிப்பு, சமூக நீதி, சமத்துவத்தை பேசும் இப்படத்துக்கு கன்னட ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.
டயட்டில் இருந்து டீயை முற்றிலுமாக தவிர்ப்பது சிலருக்கு மன ரீதியான பிரச்னையை தரலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு பதிலாக, மூலிகை தேநீர், பழச்சாறு, வெந்நீர் போன்றவற்றை முயற்சிக்கலாம் என்கிறார்கள். குறிப்பாக, ஆப்பிள், கிரான்பெர்ரி போன்ற பழச்சாறுகளில் காஃபைன் இல்லாததால் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். வெந்நீருடன் எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து குடிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
ஆயுதபூஜை, விஜயதசமி, ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால், ஆம்னி பஸ், விமானக் கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை – மதுரைக்கு ₹18 ஆயிரம் வரையிலும், கோவை, சேலத்திற்கு ₹10,000 வரையிலும் விமானக் கட்டணம் உயர்ந்துள்ளன. அதேபோல், ஆம்னி பேருந்துகளில் ₹1500 முதல் ₹2000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன.
தவெக மாநாடு எதிரொலியாக, விக்கிரவாண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஹோட்டல் அறைகளின் முன்பதிவு ஜோராக நடந்துள்ளது. தவெகவின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் தங்குவதற்காக ஹோட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
➤மைசூரு ITF டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு இந்தியாவின் ஸ்மிருதி முன்னேறியுள்ளார். ➤இங்கிலாந்தில் நடக்கும் சர்வதேச கால்பந்து தொடரில் இந்தியா சார்பில் சென்னை யூத் அணி பங்கேற்கவுள்ளது. ➤ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இந்திய ஆடவர் அணி 3ஆவது முறையாக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. ➤IPL போல ஹாக்கி லீக் தொடருக்கான ஏலத்தில் 1000-க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தியாவில் ‘வேட்டையன்’ திரைப்படம் முதல் நாளில் ₹25 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் நேற்று வெளியானது. தொடர் விடுமுறை என்பதால், வரும் நாள்களில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், ரஜினியின் முந்தைய படமான ‘ஜெயிலர்’ முதல் நாளில் ₹48 கோடி வசூலித்து இருந்தது.
Sorry, no posts matched your criteria.