India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹிந்தி திணிப்பை தமிழகம் என்றும் ஏற்றுக் கொள்ளாது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமானது என்பதை மத்திய அரசு புரிந்துக் கொள்ள வேண்டுமெனக் கூறியுள்ளார். இதை செய்தால்தான், அதை செய்வேன் என மத்திய அரசு கூறுவது சரியில்லை என்ற அவர், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ₹560 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹56,760க்கும், கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹7,095க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹102க்கும், கிலோவிற்கு ₹2,000 உயர்ந்து ₹1,02,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
1) பொற்கதவு நகரம் என அழைக்கப்படும் நகரம் எது? 2) BMW என்பதன் விரிவாக்கம் என்ன? 3) பில்லியர்ட்ஸ் மேசையின் நீளம் & அகலம் எவ்வளவு? 4) மனிதனைப் போல தலையில் வழுக்கை விழும் விலங்கு எது? 5) செம்பைவிட அதிவேகமாக மின்சக்தி பாயும் உலோகம் எது? 6) குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாத நூல் எது? 7) கருப்பு நிறத்தில் முட்டையிடும் பறவை எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
‘கங்குவா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை இம்மாதம் இறுதியில் சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு நவ.14ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. தமிழ், இந்தி உட்பட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அண்மையில் வெளியான டிரைலர் அதிகரிக்கச் செய்துள்ளது.
வங்கக்கடலில் நாளை வளிமண்டல சுழற்சி உருவாகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி மேலும் தீவிரமடைந்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும், தமிழகத்தில் மழை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. இதனால், அதிகனமழை பெய்தாலும் சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக்கெடுப்பு என்பதைக் குறிக்க Plebiscite, Referendum என்ற இரு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டுக்கும் என்ன வேறுபாடு எனத் தெரியுமா? Referendum என்பது புதிய சட்ட சாசனம் அமலாவது போன்ற விஷயம் குறித்து நேரடியாகவே வாக்களிப்பதை குறிக்கும். Plebiscite என்பது மொழி இன அடிப்படையில் ஒரு நாட்டில் இருந்து பிரிந்துப் போகும் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்ய நடத்தப்படும் ஒரு வகையான வாக்கெடுப்பு ஆகும்.
த்ரிஷாவின் நியூ லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘விடாமுயற்சி’ படத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இதனிடையே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நியூ ஹேர் ஸ்டைலில் இருக்கும் த்ரிஷாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. முன்னதாக, அஜித்தின் நியூ லுக் போட்டோ கவனம் ஈர்த்தது.
2024-25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டியில், அரையாண்டு தேர்வு டிச. 16 – 23 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டிச. 24 – ஜன. 1 வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு முடிந்து ஜன. 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. அதே மாதம் 6ஆம் தேதி 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு முதல் திருப்புதல் தேர்வு தொடங்குகிறது.
மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல், கோழை, மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் தூதுவளை தேநீரைப் பருகலாம் என ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைப்பிடி தூதுவளை இலை, சுக்கு, திப்பிலி, மிளகு, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான தூதுவளை தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமென்றாலும் பருகலாம்.
அரசியல் சுயநலத்திற்காக நிதி கூட்டாட்சியை பாஜக அரசு சிதைப்பதாக விசிக எம்பி ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலங்களுக்கு வழங்கிய அக்டோபர் மாதத்துக்கான நிதி பங்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டியுள்ளது. தமிழ்நாடு ( ₹7,268 கோடி), கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு ₹28,152 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, உ.பி.,க்கு மட்டும் ₹31,962 கோடி நிதியை வாரி வழங்கியுள்ளது என சாடினார்.
Sorry, no posts matched your criteria.