India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எதிலும், எப்போதும் எச்சரிக்கை உணர்வு மிக்கவர்களாக இருப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செலவு செய்வதில் சிக்கனமாக இருந்தாலும், பிறருக்கு உதவுவதில் கணக்குப் பார்க்க மாட்டீர்கள். சிந்தனை & செயல் உறுதி, கலை ஆர்வம், ஆடம்பரத்தை விரும்பும் மனம் உள்ளவராக இருப்பீர்கள் என்கிறது நந்தி வாக்கியம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணிலேயே ஒரு இன்னிங்ஸ் தோல்வியடைந்து பாக்., மோசமான சாதனையைப் படைத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 500+ ரன்களை எடுத்த பின்னர், ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இதுவே முதல்முறை. பாக்., தனது சொந்த மண்ணில் 1,331 நாட்களில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. இந்த டெஸ்ட்டில் (PAK 556 & 220, ENG 823/7 d).
பாகிஸ்தானின் டுகி பகுதியில் ஜுனைட் நிலக்கரி சுரங்கத்தில் பலூசிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து பலூசி மாகாண நிர்வாகம், காவல்துறை & எல்லைப் படை குழுக்கள் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக அறிய முடிகிறது. அக்டோபர் 15-16 வரை இஸ்லாமாபாத்தில் SCO உச்சிமாநாட்டை நடத்த பாக். தயாராகி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
PAK-க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ENG அணி இன்னிங்ஸ் & 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் PAK அணி 556 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ENG முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 2ஆம் இன்னிங்ஸை விளையாடிய PAK அணி 220 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தனது தாய் மண்ணிலேயே மோசமான தோல்வியை சந்தித்தது.
தமிழரின் உணவு பண்பாட்டில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது நெய். சுவை & மணத்திற்காக மட்டுமின்றி, உடல் நலத்திற்காகவும் பயன்படுத்தப்படும் அதில் தற்போது அதிகம் கலப்படம் செய்யப்படுகிறது. தூய நெய்யா என்பதை கண்டறிய, சிறு அளவு நெய்யை உள்ளங்கையில் வைத்து சிறிது நேரம் வரை பாருங்கள். சில நொடிகளில் நெய் உருகிவிட்டால் அது தாவர எண்ணெய் & வனஸ்பதி சேர்க்கப்படாத தூய நெய் ஆகும். அறை வெப்பநிலையிலேயே தூய நெய் உருகும்.
மறைந்த முரசொலி செல்வத்தின் உடலுக்கு திரைத்துறையினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இயக்குநர் பி.வாசு, எஸ்.ஏ. சந்திரசேகர், தியாகராஜன், பிரசாந்த், விஜயகுமார், அருண்விஜய் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின், முரசொலி செல்வத்தின் உடல் அருகே மிக சோகத்துடன் அமைதியாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு முக்கிய தலைவர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.
*சப்பாத்தி மாவு மீது வெண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும். *காய்ந்த மிளகாயை வறுக்கும்போது, சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது. *ஊறுகாய் கெட்டுப்போகாமல் இருக்க சிறிதளவு வினிகர் சேர்க்கலாம். *தோல் சீவிய இஞ்சை இடித்து, தயிரில் போட்டு வைத்தால் அது நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும். *பருப்பு வேக வைக்கும்போது நெய் சேர்த்து சமைத்தால் சாம்பார் ருசியாக இருக்கும்.
ராஜ மெளலி இயக்கத்தில், மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் ‘SSMB29’ படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இணைந்து பணியாற்ற இருப்பதாகக் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து, ப்ரீபுரொடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆக்ஷன் அட்வென்ச்சர் கதை அம்சத்தோடு தயாராகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
நவராத்திரியின் கடைசி நாள் என்பது இன்று கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையுடன் முடிவடையும். சரஸ்வதி, ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை. மாலை நேரத்தில் பூஜை செய்வோர், 6 மணிக்கு மேல் செய்துக் கொள்ளலாம். வீட்டில் ஆயுதங்கள், புத்தகங்களை வைத்து, விளக்கேற்றி, சாம்பிராணி புகை போட்டு, சுண்டல், பொரி கடலை, வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகள் வைத்து படைக்க வேண்டும்.
ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள 2,236 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Apprentice (Data Entry Operator, Plumber, Welder, Fitter) பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் இன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு, ITI, Diploma. வயது வரம்பு: 18-24. உதவித்தொகை: ₹9,000. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.25. கூடுதல் விவரங்களுக்கு<
Sorry, no posts matched your criteria.