India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய T20 அணியின் மிகவும் ராசிக்காரராக பார்க்கப்பட்டவர் ஷிவம் துபே. அவர் அணியில் இருந்த கடந்த 37 போட்டிகளில் இந்திய அணி தோல்வியே அடைந்ததில்லை என்பதே அதற்கு காரணம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால், அவரது அதிர்ஷ்டம் இன்றுடன் முடிவுக்கு வந்திருப்பதாக நெட்டிசன்கள் SM-ல் பதிவிட்டு வருகின்றனர். அடுத்த போட்டியில் இந்தியா வென்று, இந்த கணக்கை முதலில் இருந்து தொடங்குமா?

செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கிய EPS-ற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது என்றும் இதுபோன்ற மனப்பாங்கு திருத்திக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அதிமுக ஒன்றிணைவதற்கு யார் இடையூறாக இருந்தாலும், அவர்களை திமுகவுக்கு மறைமுக உதவி செய்பவர்களாகவே கருதமுடியும் என்றும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக அதிகரித்தே வருகிறது. இம்மாத தொடக்கத்தில் 22 கேரட் தங்கம் சவரன் ₹87,600 ஆக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து அக்.16-ல் ₹95,200-ஐ தொட்டது. அடுத்த 2 வாரம் குறைந்துவந்து இன்று ₹90,400-ல் நிற்கிறது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டிக் குறைப்பு, USA-சீன உடன்பாடு போன்ற காரணங்களால் சற்றே குறைந்தாலும், டிசம்பர் வரை பெரிதாக விலைக் குறைய வாய்ப்பில்லையாம்.

ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான <<18121808>>திறனாய்வுத் தேர்வு<<>> அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதனை தேர்வுக் கட்டணம் ₹10 செலுத்தி, பள்ளி HM-களிடம் மாணவர்கள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வரும் செவ்வாய்கிழமை(நவ.4) கடைசி நாளாகும்.

தீவிர வறுமையை (Extreme Poverty) மாநிலத்தில் இருந்து ஒழித்துவிட்டதாக கேரள அரசு, நாளை (நவ.1)அறிவிக்க உள்ளது. உலக வங்கியின் வரையறைப்படி, ஒருவரின் தினசரி வருமானம் ₹168-க்கு குறைவாக இருந்தால், அவர் தீவிர வறுமையில் இருப்பதாக கொள்ளப்படும். இந்நிலையில் உணவு, உறைவிடம், உடைகள், சுகாதார வசதி, குறைந்தபட்ச வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் தீவிர வறுமையை அடையாளம் கண்டு ஒழித்ததாக கேரளா கூறுகிறது.

காலை குளியல் போன்றே, இரவு குளியலும் வெறுமென உடலை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், உடலுக்கு பல்வேறு நன்மைகள் தருகிறது. தூங்குவதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன்பு குளிப்பது மிகவும் சிறந்தது. மோசமான தூக்கம் இதய நோய், மனச்சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தி ஆயுட்காலத்தை குறைக்கிறது. ஆனால், இரவு குளியல் ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுத்து, நீண்ட காலம் வாழ உதவுகிறது. மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்க.

நாட்டு மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை திமுக செய்வதாக தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹார் மக்களை திமுகவினர் கீழ்த்தரமாக பேசுவதாகவே PM மோடி குறிப்பிட்டதாகவும், அது திமுக குறித்து வைக்கப்பட்ட விமர்சனமே தவிர தமிழர்கள் மீது கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பிஹாரிகள் அறிவில்லாதவர்கள், தமிழர்களின் வேலையை பறிப்பவர்கள் என்று கே.என்.நேரு பேசியதை தமிழிசை சுட்டிக்காட்டினார்.

நம் வாழ்வின் தேவைகளை கடவுளிடம் வேண்டிப் பெறுவது போலக் காதலையும் வேண்டிப்பெறலாம். காதல் கைகூட காதற் கடவுளர்களான ரதி – மன்மதனை வணங்க வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் திண்டுக்கல், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள மன்மதனின் சிலைக்கு பெண்களும், ரதியின் சிலைக்கு ஆண்களும் அபிஷேகம் செய்து வழிபட, காதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதால் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். சென்னை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மழை விடுமுறையை ஈடுசெய்ய திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் முழுநேரம் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

கையில் கிடைப்பதை வாயில் போடும் பழக்கம் குழந்தைகளிடம் இருக்கும். அப்படி வாயில் போடும் பொருளில் சுவை இல்லை என தெரிந்தால் அதனை மீண்டும் செய்யாது. ஆனால் சில குழந்தைகள் மட்டும் மண், சாம்பலை அடிக்கடி உண்ணும். அப்படி செய்தால், உங்கள் குழந்தைக்கு வயிற்றில் பூச்சி தொல்லை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்த சோகை இருக்கலாம் என டாக்டர்கள் சொல்றாங்க. உடனடியாக டாக்டரை அணுகுங்கள். குழந்தைகளை காக்கும், SHARE THIS.
Sorry, no posts matched your criteria.