India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண் ஒருவர் Zomato-ல் ஆர்டர் செய்த உணவுகளுக்கு, ₹655 பில் வந்துள்ளது. Discount-களுக்கு பிறகு, அவர் ₹550 கட்டியுள்ளார். இதே உணவுகளை அதே ஹோட்டலில், நேரில் வாங்கும் போது, ₹320 மட்டுமே பில் வந்துள்ளது. 2 பில்லையும் பதிவிட்டு, Zomato-ல் அதிக விலை வைப்பதாக விமர்சித்துள்ளார். இது ஹோட்டல் நிர்ணயிக்கும் விலை என Zomato பதிலளித்தாலும், நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

SK-வின் ‘பராசக்தி’ படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக இளைஞர் காங்., வலியுறுத்தியுள்ளது. இது முழுக்க திமுக சார்பு படம்; 1965-ல் கோவைக்கு வராத இந்திரா காந்தியை அங்கு வந்ததாகவும், அவர் கண் முன்னே ரயில் எரிப்பு போராட்டம் நடந்ததாகவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் நடக்காத ஒன்றை இப்படத்தில் திணித்த படக்குழு மன்னிப்பு கேட்டு, அனைத்து காட்சிகளையும் உடனே நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது

டெல்லியில் CBI விசாரணையை முடித்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டார் விஜய். புஸ்ஸி ஆனந்த், நிர்மல், ஆதவ்விடம் 3 நாள்கள் CBI விசாரணை நடைபெற்ற நிலையில், விஜய் கேட்டுக் கொண்டதால், ஒரு நாளோடு விசாரணை முடிந்தது. இந்நிலையில், ஜன.19-ல் ஆஜராகும்படி விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னைக்கு வந்ததும் வழக்கறிஞர்கள் குழுவுடன் விஜய் உடனடி ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

சபரிமலை, மகரவிளக்கு சீசனின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பனை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகரவிளக்கை முன்னிட்டு, இன்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 45,000 ஆக குறைக்கப்பட்ட நிலையில், நாளை 30,000 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

காலையில் எழுந்ததும் 100% சார்ஜ் இருக்கணும் என எண்ணி, இரவு முழுவதும் போனை சார்ஜ் போடுகிறோம். அப்படி செய்வதால் பேட்டரியின் செயல்திறன் குறையுமாம். தற்போது, போன்களில் இருக்கும் லித்தியம்-அயன் பேட்டரி நவீனரகம் என்றாலும், அதன் செயல்திறனுக்கும் ஓர் எல்லை உண்டு. நீண்ட நேரம் போன் சார்ஜில் இருந்தால், செயல்திறன் பாதிப்பதோடு, சமயங்களில் பேட்டரி சூடாகி, வெடிப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன. SHARE.

2025-ம் ஆண்டுக்கான பேரறிஞர் ‘அண்ணா விருது’ அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். 1965-ம் ஆண்டு நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் பங்கெடுத்த துரைமுருகன், இலக்கியம், அரசியல் என எப்பொருளிலும் மணிக்கணக்கில் உரையாற்றும் ஆற்றல் பெற்றவர்; அவை முன்னவராக இருந்து சட்டப்பேரவையின் கண்ணியத்தை காக்கும் அவருக்கு அண்ணா விருது வழங்கப்படுவதாக CM தெரிவித்துள்ளார்.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று பிற்பகல் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூரில் இடியுடன் மழையும், அரியலூர், திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, திருச்சியில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. ஏமாந்த ரசிகர்களை கொஞ்சம் தேற்றுவோம் என்ற எண்ணத்தில், தயாரிப்பாளர் தாணு ‘தெறி’ படத்தை வரும் 15-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவித்தார். ஆனால், இந்த படமும் தற்போது தள்ளிப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. வெந்த புண்ணுல வேல பாய்ச்சுன மொமண்ட் என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த சில நாள்களாக மல்லிகைப்பூ விலை தங்கத்திற்கு இணையாக உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் புதிய உச்சமாக 1 கிலோ ₹12,000 வரை விற்பனையானது. இந்நிலையில், இன்று மதுரை, தோவாளையில் 1 கிலோ மல்லிகைப்பூ ₹4,000-₹6,000 வரை விற்பனையாகிறது. ஆனால், இதுவும் பெரிய விலை என மக்கள் புலம்புகின்றனர். 1 கிலோ முல்லை ₹2,500, பிச்சிப்பூ ₹2,000, கனகாம்பரம் ₹2,000, சம்பங்கி ₹150-க்கு விற்பனையாகிறது.

கிரீன்லாந்தை எப்படியாவது <<18833302>>வாங்கிவிடுவேன்<<>> என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார் டிரம்ப். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்த டென்மார்க் MEP ஆண்டர்ஸ் விஸ்டிசன், கிரீன்லாந்து 800 ஆண்டுகளாக டென்மார்க்கின் முக்கிய அங்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே, கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்ற அவர், மேடையிலேயே டிரம்ப்பை “F**k off” என அசிங்கமாகவும் திட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.