India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ், தெலங்கானா மாநில காவல்துறை DSP-யாக நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் புரிந்த சாதனைகள், தெலங்கானா மாநிலத்திற்கான அர்ப்பணிப்பை கவுரவிக்கும் வகையில், இந்த பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த சிராஜ், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வடிவ கிரிக்கெட் விளையாட்டுகளிலும் இதுவரை 163 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
ஹிஸ்புல்லா தலைவர் நசரல்லா இஸ்ரேலின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டார். மிக ரகசியமாக இயங்கிவந்த அவரின் இருப்பிடத்தை ஈரான் படையில் உள்ள மொசாத் உளவாளி தான் வெளியிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இது தொடர்பாக ஈரான் அரசின் இஸ்லாமிய புரட்சிப்படையின் ‘Quds’ பிரிவு சீனியர் தளபதி இஸ்மாயில் கனியிடம் ஈரான் அரசு விசாரணை நடத்தி வருகிறது. சில நாட்களாக இவர் வெளியில் தென்படாத நிலையில், இத்தகவல் கசிந்துள்ளது.
ஆன்லைனில் கைது செய்ய முடியுமா என்ற சந்தேகத்திற்கு சைபர் கிரைம் போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. சிலருக்கு, நீங்கள் கைது செய்யப்பட்டுள்ளீர்கள். இதிலிருந்து தப்பிக்க பணம் செலுத்துங்கள் என மின்னஞ்சல் அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இதை சுட்டிக்காட்டி, சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், ஆன்லைனில் கைது செய்ய முடியாது. அதை நம்பி பணம் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
இன்று இரவு 7 மணி வரை சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என RMC தெரிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், தி.மலை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம் எனவும் கணித்துள்ளது. SHARE IT
இஸ்ரேல் – லெபனான் மோதல் ஏற்படுவதை தடுக்கவே 1978 முதல் தெற்கு லெபனான் எல்லையில் ஐநா அமைதிப் படை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவும் இதில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் ஐநா அமைதிப்படை வீரர்கள் 4 பேர் காயமடைந்துள்ளனர். எல்லைப் பகுதியில் ஐநா படையினர் இருப்பது லெபனான் மீது படையெடுக்க தடையாக இருப்பதால், வேண்டுமென்றே இஸ்ரேல் அங்கு தாக்குதல் நடத்தியதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.
கடலை பருப்பு, துவரம்பருப்பு ஆகிய இரண்டையும் 2 மணிநேரம் நீரூற்றி ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். காம்பு நீக்கிய முருங்கைப் பூ, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, மல்லித் தழை ஆகியவற்றை பொடிதாக வெட்டி, பருப்பு கலவையில் உப்பு சேர்த்து பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் மாவை வடைகளாக தட்டி, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான முருங்கைப்பூ வடை ரெடி.
ISD அழைப்பு திட்டங்களை ஜியாே மாற்றியமைத்துள்ளது. அதன்படி, ₹39 ரீசார்ஜ் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 7 நாள்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதில் அமெரிக்கா, கனடாவுக்கு 30 நிமிடங்கள் வரை பேசலாம். வங்கதேசத்துக்கு ₹49, மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூருக்கு ₹59, ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு ₹69 ஆகிய திட்டங்களையும் தனித்தனி வேலிடிட்டி, அழைப்பு நிமிடங்களுடன் ஜியாே அறிமுகம் செய்துள்ளது.
பூமியை நோக்கி இன்று 3 பிரமாண்ட எரிகற்கள் மிக வேகமாக வருவதாக அமெரிக்காவின் நாசா அமைப்பு எச்சரித்துள்ளது. அந்த எரிகற்களின் பயணப் பாதையை உன்னிப்பாக கவனிப்பதாக கூறியுள்ள நாசா, அவற்றால் பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. பாெதுமக்கள் பாதுகாப்பு, எதிர்காலத் தேவைக்கு தயாராகும் வகையில் எரிகற்கள் பயணத்தை கண்காணித்து தரவுகளை சேகரித்து வருவதாகவும் நாசா கூறியுள்ளது.
* பிரியாணியில் உள்ள வாசனைப் பொருள்கள் பசியை தூண்டுகின்றன. சீரணத்தை எளிதாக்கி, சத்துகளை உடல் கிரகிக்க உதவுகின்றன.
* Protien, Carbohydrates, Fat மூன்றும் சரிவிகிதத்தில் உள்ளன.
* சிக்கனில் உள்ள செலினியம், வயதாவதை தடுக்கிறது, நியாசின், Immunity அதிகரிக்கிறது.
* மஞ்சள், இஞ்சி, மிளகு, சீரகம்: சீரணத்தை எளிதாக்கி, கழிவுகளை வெளியேற்றுகிறது.
* காய்கறிகள் vitamins, minerals உள்ளிட்ட நுண்சத்துகளை அளிக்கிறது.
உலக பிரியாணி தினம் ஆண்டுதோறும் அக். 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பீப், சிக்கன், மட்டன், காய்கறி, காளான் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரியாணிகளை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். பெரும்பாலான இந்தியர்களுக்கு பிரியாணி விருப்பமான உணவாகவும் இருக்கிறது. இதனால், இந்தியாவில் பிரியாணிக்கென மிகப்பெரிய மார்க்கெட்டே இருக்கிறதென்றால் மிகையாகாது. உங்களுக்கு பிடித்தமான பிரியாணி எதுவென்று கமெண்ட்ல சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.