India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொதுத்துறை நிறுவனமான ONGCஇல் 2,236 அப்ரன்டிஸ் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கவுண்ட் எக்ஸிக்யூட்டிவ், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. <
திருச்சியில் 143 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது X பதிவில், ”திருச்சியில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதைக் கேட்டு மன நிறைவு அடைந்தேன். பரபரப்பான சூழல் நிலவியதும் தொலைபேசி மூலம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினேன்” என்றார்.
தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் அப்பாவி மக்களிடம் மர்ம நபர்கள் ₹1,116 கோடி மோசடி செய்திருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசுக்கு 91,161 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள், மோசடி பணத்தில் ₹526 கோடியை முடக்கி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களிடம் ₹48 கோடியை திருப்பி அளித்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.
ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அது திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. டயர்கள் உள்ளே செல்லாததால், அவற்றை சற்று சாய்வாக வைத்து விமானத்தின் அடிப்பகுதியை தரையில் உரசி விமானம் தரையிறக்கப்பட்டது. மிக திறமையான விமானியால் மட்டுமே இது சாத்தியம் என வல்லுநர்கள் கூறிய நிலையில், அவரது பெயர் மைதிலி எனத் தெரியவந்துள்ளது. சக விமானியாக இக்ரோம் இருந்துள்ளார். சல்யூட் மேம்.
ராஜஸ்தானின் ஹசாரிராம் (70) – சவாலி (68) தம்பதிக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். 4 பிள்ளைகளையும் தனது சக்திக்கு மீறி படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்தார் ஹசாரிராம். ஆனால், பிள்ளைகளோ சொத்துக்காக அவர்களை பட்டினி போட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று உணவு கேட்டதற்கு, பிச்சை எடு என மகன் கூறியதால், அவர்கள் நீர் தொட்டியில் குதித்து உயிரை மாய்த்தனர். பிள்ளைகள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. விமானத்தின் டயர்கள் உள்ளே செல்லாததால், விமானத்தின் அடிப்பகுதியை தரையில் உரசி (Belly Landing) இவ்விமானம் தரையிறக்கப்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் 141 பயணிகளும் மகிழ்ச்சியில் கூச்சலிட்டு வருகின்றனர்.
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் 8.15-க்கு தரையிறங்கவுள்ளது. விமானத்தின் டயர்கள் உள்ளே செல்லாததால், விமானத்தின் அடிப்பகுதியை தரையில் உரசி (Belly Landing) தரையிறக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மிக மெதுவாக விமானத்தை தரையிறக்க பைலட் முயற்சித்து வருகிறார்.
3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியாவும் வங்கதேசமும் நாளை மோதவுள்ளன. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நாளை 3ஆவது டி20 போட்டி நடைபெறவுள்ளது. இதில் வென்றால் 3-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை இந்திய அணி ஓய்ட் வாஸ் செய்து தொடரைக் கைப்பற்றும். வங்கதேசத்தை இந்திய அணி ஓய்ட் வாஸ் செய்யுமா? உங்கள் கருத்தை பதிவிடுங்க
சத்தியவாணி அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திர திட்டம் என்ற பெயரில் தமிழக அரசால், கைம் பெண்கள், ஏழை, மாற்றுத் திறனாளி பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான தகுதிகள்: வயது 20-40 இருக்க வேண்டும். தையல் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ₹72,000-க்கு மிகாமல் இருத்தல் அவசியம். இ-சேவை மூலம் அரசுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வர்த்தக நேர தொடக்கத்தில் ₹83.97ஆக இருந்தது. பிறகு ₹83.96ஆக உயர்ந்து, ₹84.10ஆக சரிந்தது. எனினும், வர்த்தக நேர முடிவில் ₹84.09ஆக இருந்தது. நேற்றைய வர்த்தக நேர முடிவுடன் ஒப்பிடுகையில் 11 காசுகள் வீழ்ச்சியை சந்தித்தது. மத்திய கிழக்கில் போர் சூழல், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்டவையே காரணமாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.