news

News October 12, 2024

JUST NOW: நியூஸி. டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

image

நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா, துணை கேப்டனாக பும்ரா அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கோலி, கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (கீப்பர்), துருவ் ஜூரல் (கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஸ் தீப் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

News October 12, 2024

அந்நிய செலாவணி கையிருப்பு ₹31, 179 கோடி சரிவு

image

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ₹31, 179 கோடி அளவுக்கு சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4ஆம் தேதியுடன் முடிந்த நிலவரப்படி, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு குறித்த புள்ளி விவரத் தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் அந்நிய செலாவணி கையிருப்பு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் ₹31, 179 கோடி சரிந்து ₹58.94 லட்சம் கோடியாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 12, 2024

ரயில் விபத்து: முதல்வர் அதிரடி உத்தரவு

image

ரயில் விபத்து தொடர்பாக தேவையான உதவிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணியில் சுணக்கம் ஏற்படாமல் மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பயணிகளுக்கு குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும் உத்தரவிட்டார்.

News October 12, 2024

விமானத்தில் என்ன பிரச்னை? மத்திய அரசு விளக்கம்

image

திருச்சியில் வானில் 2 மணி நேரம் விமானம் வட்டமடித்ததற்கான காரணம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய விமானப் போக்குவரத்து இணையமைச்சர் முர்ளிதர் மோகல், ஹைட்ராலிக் தோல்வி காரணமாக சார்ஜா சென்ற விமானம் திருச்சிக்கு திரும்பி வர நேரிட்டதாக கூறினார். எரிபொருளை வெளியேற்றி எடையை குறைக்க விமானி விரும்பியதால் 4,000 அடி உயரத்தில் வட்டமடித்ததாகவும் தெரிவித்தார்.

News October 12, 2024

டோரேமானுக்கு குரல் கொடுத்தவர் மரணம்

image

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சிறார்களின் மனம் கவர்ந்த கார்டூன் கதாபாத்திரங்களில் டோரேமானும் ஒன்றாகும். ஜப்பானைச் சேர்ந்த கார்டூன் கலைஞர் பிஜிகோ பிஜியோ என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த கதாபாத்திரத்துக்கு 1979ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை குரல் கொடுத்தவர் நொபுயு ஓயாமா ஆவார். அவர் கடந்த 29ஆம் தேதி தனது 90ஆவது வயதில் வயோதிகம் காரணமாக காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 12, 2024

ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

image

பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டையில் சரக்கு ரயில் மீது மைசூர் – தர்பங்கா (12578) எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துகுள்ளானது. மீட்புக் குழுவினர் வந்து ரயிலில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும் தகவல்களுக்கு 044 – 2535 4151, 044 – 2435 4995 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 11, 2024

ராசி பலன்கள் (12-10-2024)

image

◙மேஷம் – பாராட்டு
◙ரிஷபம் – பரிவு
◙மிதுனம் – நன்மை
◙கடகம் – பகை
◙சிம்மம் – யோகம்
◙கன்னி – வரவு
◙துலாம் – நலம்
◙விருச்சிகம் – மேன்மை
◙துனுசு – சிந்தனை ◙மகரம் – கவனம்
◙கும்பம் – பெருமை ◙மீனம் – பயணம்

News October 11, 2024

21 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

இரவு 1 மணி வரை நாமக்கல், திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று RMC குறிப்பிட்டுள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளது. SHARE IT.

News October 11, 2024

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?

image

உலகளவில் சிறந்து விளங்கும் கல்வி நிலையங்கள் தொடர்பான 2024ஆம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலில் பெங்களூரு IIS இடம்பிடித்துள்ளது. டைம்ஸ் நிறுவனம் வெளியிட்ட பட்டியலில், அறிவியல் & தொழில்நுட்ப ஆராய்ச்சியைப் பொறுத்தவரை பெங்களூரு IIS, 251 முதல் 300க்குள் இடம்பெற்றுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைகழகம், சவீதா IMTS, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகம், IIT இந்தூர் உள்ளிட்டவை இடம்பிடித்துள்ளன.

News October 11, 2024

தவறான சிக்னலே ரயில் விபத்துக்கு காரணம்?

image

சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு தவறான சிக்னலே காரணம் எனத் தெரியவந்துள்ளது. கவரப்பேட்டையில் தனக்குரிய லூப் வழித்தடத்தில்தான் சரக்கு ரயில் நின்றுள்ளது. ஆனால், தவறான சிக்னல் காரணமாக மைசூர் தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில், லூப் வழித்தடத்தில் நுழைந்ததால் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!