India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பாஜகவில் ஒரு பிராமணர் கூட இல்லாமல் அனைவரையும் அண்ணாமலை ஒழித்துக் கட்டிவிட்டதாக எஸ்.வி.சேகர் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது எனவும், சும்மா திமுகவை திட்டிக் கொண்டிருந்தால் அவர்களால் வளரவே முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இங்கு யாரும் பிராமணர்களை பெரிய வாக்கு வங்கியாக பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆஸி., ஏ அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் இன்று நடைபெற உள்ளது. கடந்த சில தொடர்களில் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த கே.எல். ராகுல், இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸி.,க்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலும் ராகுலை ஓப்பனராக களமிறக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே அதற்கான பயிற்சியாக, இன்றைய போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.
முகுந்த் வரதராஜனுக்கு ரஜினிகாந்த் சல்யூட் அடித்ததை அப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸிடம் தெரிவித்துள்ளார். அதற்கு, சூப்பர் ஸ்டாரின் மிகப்பெரிய Fan-ஆன முகுந்த் தற்போது இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார் என இந்து பதிலளித்துள்ளார். மேலும், முகுந்த் இன்னும் தன் நினைவுகளில் வாழ்ந்து வருவதாகவும் இந்து உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
Naukri தளம் அக். மாதத்திற்கான வேலைவாய்ப்பு இன்டெக்ஸ் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தென்னிந்திய மாநிலங்களில் தான் White Collar வேலைகள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட 24% அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் 16%, கர்நாடகாவில் 12%, கேரளாவில் 7% உயர்ந்துள்ளது. அதேபோல், Fresher-களுக்கு அதிக வேலை வழங்கும் 2ஆம் நிலை நகரங்களில் கோவை 31% என்ற அளவில் முன்னிலையில் உள்ளது.
*மற்றவர்களின் உணர்வுகளுடன் ஒருபோதும் விளையாடாதீர்கள், ஏனெனில் நீங்கள் விளையாட்டில் வெல்லலாம், ஆனால் நீங்கள் நிச்சயமாக அந்த நபரை உங்கள் வாழ்நாள் முழுவதும் இழப்பீர்கள். *அனைவரையும் நேசியுங்கள், ஒரு சிலரை நம்புங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள். *புத்திசாலித்தனமாகவும் மெதுவாகவும் செல்லுங்கள். வேகமாகச் செல்பவர்கள் தடுமாறி விழுந்துவிடுவார்கள். *உங்கள் அன்பை அதை மதிக்காதவருக்காக வீணாக்காதீர்கள்.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் மோடி தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்தார். அதற்கு பதிலளித்த டிரம்ப், ஒட்டுமொத்த உலகமும் பிரதமர் மோடியை விரும்புவதாகவும், மோடி ஒரு உன்னதமான தலைவர் என்றும் புகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியா ஒரு பிரமிக்க வைக்கும் நாடும் எனவும், இந்தியாவை உண்மையான நண்பனாக கருதுவதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது.
மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி 5 வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். *மகளிருக்கு மாதம் ₹3,000, அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம். *விவசாயிகள் பயிர்க் கடன் ₹3 லட்சம் தள்ளுபடி. முறையாக கடனை திருப்பி செலுத்தியவர்களுக்கு ₹50,000 ஊக்கத்தொகை. *சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 50% இடஒதுக்கீடு வரம்பை நீக்குதல். *₹25 லட்சம் மருத்துவ காப்பீடு. *வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ₹4,000 உதவித்தொகை.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: இனியவைகூறல். ▶குறள் எண்: 93 ▶குறள் : முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். ▶ விளக்க உரை: முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது, இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 901 புள்ளிகள் உயர்ந்து 80,378-ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 270 புள்ளிகள் உயர்ந்து 24,484-ஆகவும் வர்த்தகமாகியுள்ளன. இதனால், முதலீட்டாளர்களுக்கு ₹8 லட்சம் கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கூண்டோடு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் காங்., கட்சியை மறுசீரமைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. கோஷ்டி பூசல் காரணமாகவே கலைக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டிலும் மாநில தலைமையை தவிர்த்து கூண்டோடு கலைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.