India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல், கோழை, மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் தூதுவளை தேநீரைப் பருகலாம் என ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைப்பிடி கற்பூரவள்ளி இலை, சுக்கு, மிளகு, துளசி, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான கற்பூரவள்ளி தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமென்றாலும் பருகலாம்.
விஜயதசமி நாளான இன்று அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளையும் திறந்து வைக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மே, ஜூன் மாதங்களில் நடைபெறும். சில தனியார் பள்ளிகளில் விஜயதசமி தினத்தை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். இது பல பள்ளிகளிலும் விரிவடைந்துள்ள நிலையில், அரசு பள்ளிகளிலும் விஜயதசமிக்கு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சாளக்கிராம நரசிம்மர், நாமகிரி தாயாரை ஆஞ்சநேயர் வணங்கியபடி நின்றவாறு அருள் பாலிக்கும் திருத்தலம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலாகும். இச்சா, கிரியா, ஞானம் ஆகிய 3 சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற இக்கோயிலுக்கு விரதமிருந்துச் சென்று, அனுமனுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து, துளசி & வெற்றிலை பாக்கு மாலை சாற்றி, நல்லெண்ணெய் தீபமேற்றி, மிளகு வடை படைத்து வழிபட்டால் நவகிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து உதயநிதி ஆறுதல் கூறினார். இதன்பின் அவர் அளித்த பேட்டியில், ரயில் விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை; காயமடைந்த 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மீட்புப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். ரயில் விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதால், மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூரில் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், குமரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், நீலகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
விமானம் வானில் பறக்கும் போது, சக்கரங்கள் உள்ளே செல்லாவிட்டால் சீராக பறப்பதில் சிக்கல் ஏற்படும். காற்றின் எதிர்ப்பு சக்தி காரணமாக, விமானம் இழுக்கப்படுவதால் விமானம் தொடர்ந்து பறக்க அதிக எரிபொருள் தேவைப்படும். இதனால், விமானம் செல்ல வேண்டிய இடத்திற்கு முன்னதாகவே எரிபொருள் தீரும் நிலை ஏற்படும். இந்த ஆபத்தை தவிர்க்கவே, அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் புறப்பட்ட இடத்திலேயே தரையிறக்கப்படுகிறது.
தங்களின் ஊழியர்கள் புத்துணர்ச்சி பெறுவதற்காக 9 நாட்கள், ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கி MEESHO நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. வெற்றிகரமான பண்டிகை கால விற்பனையை தொடர்ந்து, அக் 26-நவ. 3ம் தேதி வரை லேப்டாப், மீட்டிங் என எந்த தொந்தரவும் இல்லாமல் ஊழியர்கள் தங்களின் விடுப்பை கொண்டாடலாம் என கூறியுள்ளது. ஊழியர்களின் கஷ்டத்தை புரிந்ததற்காக நன்றி என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
1971 – பாரசீகப் பேரரசின் 2,500ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
1976 – சென்னை நோக்கிச் சென்ற இந்தியன் ஏர்லைன் விமானம், மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும்போது வெடித்ததில், நடிகை ராணி சந்திரா உட்பட அதில் பயணம் செய்த 95 பேர் உயிரிழந்தனர்.
1993 – இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது.
1999 – பாக். ராணுவ தளபதி முஷாரப், நவாஸ் ஷெரீபை ஆட்சியில் இருந்து அகற்றி அரசுத்தலைவரானார்.
* நேற்றைய தோல்விகளை பற்றி நீங்கள் கவலைப்பட்டால், இன்றைய வெற்றிகள் குறைவாகவே இருக்கும். நிகழ்காலத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் அமையும். *நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், உங்களிலிருந்து தொடங்குங்கள். *உறவுகள் நான்கு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை: மரியாதை, புரிதல், ஏற்றுக்கொள்ளல் மற்றும் பாராட்டு.* மனிதகுலத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் அமைதி.
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, சென்னை, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, சிவகங்கை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.