India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

58 வயதை தாண்டிய தமிழறிஞர்களுக்கு ‘அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை திட்டம்’ மூலம் TN அரசு மாதந்தோறும் ₹8,000 உதவித்தொகை வழங்குகிறது. மேலும், அரசு பஸ்களில் கட்டணமில்லா பயண சலுகையும் வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெறுபவர்கள் இறந்தால், நாமினிக்கு மாதந்தோறும் ₹3,000 கிடைக்கும். இதற்கு ஆண்டு வருமானம் ₹1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்கணும். விண்ணப்பிக்க <

ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் என்ஜினியர்கள் தான் இருப்பார்கள், அது இப்போது Influencer-களாக மாறியுள்ளது. அதில் தவறில்லை என்றாலும், ஒரு பொருளின் சாதக பாதகங்களை அறியாமலே பலரும் புரமோட் செய்கிறார்கள். இதனால் பல பிரச்னைகள் உருவாகின்றன. இதை தடுக்க, ஒரு பொருளை விளம்பரம் செய்பவர்கள், அதற்கான துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை சீனா விதித்துள்ளது. இதை நம்மூரில் கொண்டுவரலாம் அல்லவா?

ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை உடனடியாக திமுக அரசு நிறுத்த வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். வெற்று விளம்பரத்திற்காக நானும் டெல்டாக்காரன் என ஸ்டாலின் பெருமை பேசிவருவதாகவும் அவர் சாடியுள்ளார். பருவமழையின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க உண்மையாகவே போர்க்கால அடிப்படையில், நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பெயர்களை சொல்லக்கூட தகுதியில்லாதவர் CM ஸ்டாலின் என அன்புமணி விமர்சித்துள்ளார். சமூகநீதியை திமுக குழி தோண்டி புதைத்துவிட்டதாகவும், அதைப்பற்றி பேசவே உங்களுக்கு தகுதியில்லை எனவும் அவர் சாடியுள்ளார். தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுகவை ஏன் வைகோ, திருமாவளவன் வலியுறுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமேசான் நிறுவனம் 30,000 கார்ப்ரேட் ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-க்கு பிறகு(27,000 பேர்) நடக்கும் மிகப்பெரிய வேலை நீக்கமாக இது பார்க்கப்படுகிறது. அமேசான் மொத்தமாக 15% வேலையாள்களை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. AI வளர்ச்சியின் காரணமாக பலர் வேலையிழப்பார்கள் என முன்னரே அந்நிறுவனத்தின் CEO ஆண்டி ஜாஸ்ஸி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிச்சயமாக ரோஹித் 2027 உலக கோப்பைக்கு பிறகுதான் ஓய்வு பெறுவார் என அவரது சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஒரு சதம், ஒரு அரைசதத்தை விளாசி, தொடர் நாயகன் விருதை வென்ற ரோஹித், தனது டார்கெட் 2027 உலககோப்பைதான் என தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், அவருக்கு பதிலாக இளம் வீரர்களை அணியில் சேர்க்க BCCI முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

2026 தேர்தல் என்பது அதிமுக – பாஜக கூட்டணியிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் தேர்தலாகவே இருக்கும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். <<18126503>>வாக்குச்சாவடி பயிற்சிக் <<>>கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கே உள்ளதாக கூறியுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணிக்கு எந்த கட்சியும் செல்ல விரும்பவில்லை என்றும், மக்களுக்கும் அவர்கள் மீது விருப்பமில்லை எனவும் சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,708 பணியிடங்கள் காலியாக உள்ளன. மாதம் ₹57,700 முதல் ₹1,82,400 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு முதுகலை பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், UGC/CSIR NET (அ) SLET/SET-ல் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் <

விவசாயிகளின் நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனையவிட்டு வீணாக்கிய திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி என விஜய் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூரில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு அரசியல் ரீதியாக எவ்வித அறிக்கை, அறிவிப்புகளையும் வெளியிடாமல் இருந்த அவர், நேற்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் அரசியல் பணிகளை தொடங்கியுள்ளார்.

உலகளவில் மருத்துவ சின்னங்களில் பாம்பு இடம்பெற்றிருக்கும். WHO-வின் Logo-விலும் பாம்பு இருப்பதை நம்மால், பார்க்க முடியும். ஆனால், பாம்புக்கும், மருத்துவத்துக்கும் என்ன சம்பந்தம் என தெரியுமா? கிரேக்க புராணங்களின் படி, மருத்துவ தெய்வமான அஸ்கிளேபியஸ்(Asclepius) கையில் பாம்பு சுற்றிய தடியை (Rod of Asclepius) வைத்திருந்தார். அதன் வெளிப்பாடாகவே மருத்துவ சின்னங்களில் பாம்பு இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.