India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2026இல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக சோளிங்கரில் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளும் இடம்பெறும் காலம் விரைவில் வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவ்வாறு அமையும் கூட்டணி அரசில் பாமக நிச்சயம் பங்கேற்கும் எனவும், திமுக மீண்டும் ஆட்சியில் அமர வாய்ப்பே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக NZ பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திராவை பயிற்சி பெற அனுமதித்ததற்காக, சிஎஸ்கே அணியை முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சாடியுள்ளார். யூடியூப் சேனலில் பேசிய அவர், எதற்கும் ஒரு எல்லைக்கோடு முக்கியம். இந்திய அணியை எதிர்த்து விளையாடும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு பயிற்சி அளிக்கும்போது, நமது நாட்டின் நலனே முன்னோக்கி இருக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிக கனமழைக்கான orange alert விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், தி.மலை, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, குமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது.
திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக Deputy CM உதயநிதி தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், திமுகவை அழிக்க கிளம்பியவர்களுக்கு மக்களே பதில் சொல்வார்கள் என்றார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல பாடுபட வேண்டும் என்றும் திமுகவினரை அவர் கேட்டுக்கொண்டார்.
கோதுமையை கழுவி, 6 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின் கிரைண்டரில் போட்டு அரைத்து, அதை பிழிந்து பாலெடுக்கவும். அதிலிருந்து கிடைக்கும் கெட்டியான பாலை எடுத்து, அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும். கொதி வந்ததும், அதில் பனை வெல்லம் சேர்க்கவும். அத்துடன், சிறுக சிறுக நெய் சேர்த்து இடைவிடாது கிளறவும். பதம் வந்ததும் ஏலக்காய் தூள், முந்திரி போட்டு இறக்கி ஆறவைத்தால் கோதி அல்வா ரெடி.
பெண்ணுடன் டேட்டிங் App-ல் பழகிய நபர், 4 சவரன் நகையை ஏமாற்றியுள்ளார். சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த 34 வயதான பெண்ணுக்கு டேட்டிங் App மூலம் அறிமுகமானார் பிரசாந்த். முதல் நாள் பழக்கமே சந்திக்கும் ஆவலை தூண்ட, அன்றே இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது அப்பெண்ணின் 4 சவரன் செயினை எடுத்து அணிந்து கொண்டார் பிரசாந்த். நாலு நாளில் தருகிறேன் என்று சொன்னவர் அப்ஸ்காண்ட் ஆக, அப்பெண் போலீசை நாடியுள்ளார்.
தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். அவர் முதன் முதலில் இயற்றிய ‘திருச்செந்தூர் கவசம்’ தான் எல்லோரும் அறிந்தது. ‘சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்’ என தொடங்கும் கவசம். இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது.
அரசியல்வாதியான தங்களுக்கே சீமானின் பேச்சு, விமர்சனங்கள் வருத்தத்தை ஏற்படுத்துவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மறைந்த அரசியல் தலைவர்களை, பிற கட்சித் தலைவர்களை வாய்க்கு வந்தபடி சீமான் பேசுவது சரியில்லை எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் போக்கை திருத்திக்கொள்வதுதான் அவருக்கு நல்லது என்றார். பொது இடங்களில் சீமான் பேசுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு வெளியான ஒரே நாளில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு ₹2.23 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, டிரம்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த எலான் மஸ்க், பிரசாரத்துக்கு ₹375 கோடி அளவுக்கு நிதியும் வழங்கி இருந்தார். எலான் மஸ்கின் ஆதரவால் உள்ளம் மகிழ்ந்த டிரம்ப், வெள்ளை மாளிகையில் ஆலோசகர் பதவி கொடுப்பேன் என உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசு மருத்துவமனைக் கல்லூரிகளில் முதல்வர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதாக சீமான் கூறிய குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் மா.சு பதிலடி கொடுத்துள்ளார். அரசியல் கட்சி நடத்தும் சீமான், முதல்வர்கள் நியமனம் செய்தது கூட தெரியாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. அப்டேட் அரசியல்வாதி என சீமான் நினைத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், அவர் காலாவதியான அரசியல்வாதி என்று சிரித்துக்கொண்டே மா.சு தக் லைஃப் செய்தார்.
Sorry, no posts matched your criteria.