news

News October 12, 2024

உயிரிழப்பை தடுத்த 2 விஷயங்கள்

image

கவரப்பேட்டை ரயில் விபத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டாலும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதற்கு 2 விஷயங்கள் காரணமாக சொல்லப்படுகிறது. 1) கவரப்பேட்டை ஸ்டேஷனின் வளைவு காரணமாக, அங்கு ரயிலும் 75 km வேகத்தில் வந்ததால் மோதலின் தாக்கம் குறைந்தது. 2) கூட்ஸ் ரயிலில் கடைசி பெட்டியாக பிரேக் வேன் இருந்ததால், எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய அதிர்ச்சியை அது தாங்கிக் கொண்டதால், பயணிகள் ரயிலில் சேதம் குறைந்தது.

News October 12, 2024

வேலை இல்லையா? உடனே அப்ளை பண்ணுங்க

image

டாப்-500 நிறுவனங்களில் தொழில்பயிற்சி வழங்கும் மத்திய அரசின் PM Internship Scheme திட்டத்துக்கான பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகையுடன் manufacturing, management, maintanane, sales – marketing, operations உள்பட 20 துறைகளில் 1 ஆண்டுக்கு உலகத்தரமான பயிற்சி வழங்கப்படும். 10-ம் வகுப்பு முதல், ITI, Dip, Degree முடித்தவர்கள் வரை <>இங்கு<<>> விண்ணப்பிக்கலாம்.

News October 12, 2024

இந்தியா பேட்டிங் தேர்வு

image

இந்தியா – வங்கதேசம் இடையிலான 3ஆவது டி20 ஆட்டம் இன்று ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். முதல் இரண்டு ஆட்டங்களில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய டீம் இந்தியா, இந்த ஆட்டத்திலும் அபாரமாக வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்றைய ஆட்டத்தின் முடிவு எப்படி இருக்கும்? யார் இன்றைய போட்டியில் கலக்குவார்கள்?

News October 12, 2024

இந்தியாவுக்கு எதிராக மோசமான சதி: RSS

image

இந்தியாவுக்கு எதிராக மோசமான சதித்திட்டம் தீட்டப்படுவதாக RSS தலைவர் மோகன் பகவத் எச்சரித்துள்ளார். நாட்டில் பல மதங்கள் இருந்தாலும், அவற்றை ஒன்றிணைக்கும் அடிப்படை ஆன்மிகமே தர்மம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதனை பிளவுப்படுத்த முயல்பவர்கள், நாங்கள் வேறுபட்டவர்கள் எனக்கூறிக்கொண்டு அரசு, சட்டம் மற்றும் நிர்வாகத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.

News October 12, 2024

கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஷாக் சம்பவம்!

image

சென்னை கதீட்ரல் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவை, பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள ஜிப் லைனில் இன்று இரு பெண்கள் பயணித்த போது, திடீரென அதில் பழுது ஏற்பட்டு அந்தரத்தில் பாதியில் நின்றது. 20 நிமிடங்களாக அதில் சிக்கித் தவித்த அவர்களை, கயிறு மூலமாக ஊழியர்கள் மீட்டு, பத்திரமாக கீழே கொண்டு வந்தனர்.

News October 12, 2024

சவுக்கு சங்கர் ஹாஸ்பிட்டலில் அனுமதி!

image

யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவர் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் போலீஸார் குறித்து தவறாக பேசிய புகாரின் பேரில், சவுக்கு சங்கர் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

News October 12, 2024

தசராவில் ராவணனை கும்பிடும் மக்கள்

image

பொதுவாக விஜயதசமி நாளன்று ராவணன் வதம் நடைபெறுவதை தான் பார்த்திருப்போம். ஆனால், உ.பி., கான்பூர் அருகே ஷிவாலா என்ற இடத்தில், இந்நாளில் ராவணனை வழிபடுவது வழக்கம். அங்குள்ள தஷணன் கோயிலில், தசரா நாள் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் திரண்டுவரும் பக்தர்கள், தீவிர சிவபக்தரும், மிகப்பெரிய பண்டிதருமான ராவணனை வழிபடுவர். மாலை மீண்டும் கோயில் மூடப்படும். வடமாநிலங்களில் பல இடங்களில் ராவணன் வழிபாடு தொடர்கிறது.

News October 12, 2024

ரயில் விபத்து.. காரணம் தெரிந்து பேசணும்: வானதி

image

கவரப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக மத்திய அரசை பலர் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், “ஒவ்வொரு ரயில் விபத்துக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். அந்தக் காரணங்களை களைந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். சில நேரங்களில் மனித தவறுகளும் நடக்கலாம். எனவே, காரணத்தை பார்த்து கருத்து கூற வேண்டும்” எனக் கூறினார்.

News October 12, 2024

ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து: என்ன செய்கிறது ரயில்வே?

image

ரயில்கள் தொடர்ந்து விபத்துக்கு உள்ளாவதாக கவலை தெரிவித்துள்ளார் மதுரை MP சு.வெங்கடேசன். அவர் தன் X பதிவில், “ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே. ஆய்வின் முடிவுகளை கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது?” என கேள்வி எழுப்பி, ஒவ்வொரு ரயில் பயணத்தையும் நிம்மதி இல்லாத, பதட்டத்தை நோக்கி தள்ளும் சூழலில் இருந்து மீள ரயில்வே என்ன செய்யப்போகிறது என விமர்சித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?

News October 12, 2024

ரயில் விபத்தில் சதி? NIA ஷாக் தகவல்!

image

கவரப்பேட்டையில் சரக்கு ரயில் மீது மைசூர் – தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இந்த விபத்து குறித்து NIA அதிகாரிகள் நடத்திய ஆய்வில், இது சதிவேலை என்பது தெரியவந்துள்ளது. விபத்து நிகழ்ந்த தண்டவாளத்தில் பல போல்ட்டுகள் கழட்டப்பட்டுள்ளதை NIA அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த சதிச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

error: Content is protected !!