India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறையில் இன்று தசரா நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக நடந்த ராம்லீலா நாடகத்தில் சீதையை தேடும் படலம் வந்தது. அப்போது சீதையை தேடுவதற்காக, வானர சேனை வேடமிட்ட 2 கைதிகள் ஓடினர். ஆனால், அவர்கள் திரும்பவில்லை. இதையடுத்து, போலீசார் தேடிச் சென்ற போது, அவர்கள் சிறை சுவரை ஏறி குதித்து தப்பியது தெரியவந்தது.
மத்திய அரசின் நிர்வாக திறமையின்மையால் அடிக்கடி ரயில் விபத்துகள் நிகழ்வதாக CPM பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். 6 நாள்களுக்கு ஒரு விபத்து என்ற விகிதத்தில் ரயில்வே துறை இருப்பது மிகவும் ஆபத்தானது என எச்சரித்த அவர், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில் நேற்று சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் பெரும்பாலும் அணியும் V Shape உள்ளாடை, விதைப்பையில் அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு காற்றோட்டத்தையும் குறைக்கும். ஆனால், Boxer Type உள்ளாடையில் காற்றோட்டம் நன்றாக இருக்கும். எனினும், எந்த உள்ளாடையும் பாலிஸ்டர் கலந்த துணியில் இருக்கவே கூடாதாம். அதிலுள்ள Electrostatic, விந்தணு உற்பத்தியை வெகுவாக பாதிக்குமாம். இப்போது கோமணம் டைப்பில் வரும் காட்டன் உள்ளாடைகள் ரொம்பவே பெஸ்ட் என்கின்றனர் டாக்டர்கள்.
திருப்பதி கோயிலின் லட்டு பிரசாதம் அமோகமாக விற்பனையாகி வருகிறது. திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக அண்மையில் எழுந்த சர்ச்சை பெரும் பூதாகரமானது. இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருப்பதியில் பிரம்மோற்சவத்தை ஒட்டி, கடந்த 4 முதல் 11-ம் தேதி வரை 8 நாட்களில் 30 லட்சம் லட்டுகள் விற்பனை ஆகியுள்ளன. ரூ.26 கோடி காணிக்கை பெறப்பட்டுள்ளது.
3ஆவது T20 ஆட்டத்தில் வ.தேச அணிக்கு 298 என்ற இமாலய ஸ்கோரை இலக்காக வைத்துள்ளது இந்திய அணி. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி இந்திய பேட்ஸ்மென்கள், வங்கதேச பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 297/6 ரன் குவித்தனர். சஞ்சு சாம்சன் -111, SKY -75, ரியான் பராக் -34, பாண்ட்யா -47, ரன்கள் குவித்தனர். இவ்வளவு பெரிய ஸ்கோரை வ.தேசம் நெருங்குமா?
மனிதன் சொல்ல இறைவன் கேட்பது ‘திருவாசகம்’
இறைவன் சொல்ல மனிதன் கேட்பது ‘கீதை’
மனிதன் சொல்ல மனிதன் கேட்பது ‘குறள்’
அருளாளன் சொல்ல ஞானிகள் கேட்பது
‘திருவருட்பா’
ஞானிகள் சொல்ல ஞானிகள் கேட்பது ‘திருமந்திரம்’
மகன் சொல்ல மகேசன் கேட்பது ‘பிரணவம்’
மனைவி சொல்ல கணவன் கேட்பது ‘வாழ்க்கை’
உங்கள் மனைவி சொல்வதை நீங்கள் கேட்பீர்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
இயற்கையின் அழகிய வெளிப்பாடுகளில் ஒன்றான அரோரா (aurora) எனப்படும் துருவ விண்ணொளி மாயாஜாலம் காட்ட தொடங்கியுள்ளது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இரவில் இந்த அரோராக்கள் காட்டும் வர்ணஜாலத்தின் photos வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சூரியப் புயல் ஏற்படுத்தும் புவிகாந்தப் புயலால் வானத்தில் பர்ப்பிள், பிங்க், இண்டிகோ என பல வண்ணங்கள் வானை வண்ணமயமாக்கிக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவதை போல, வட மாநிலங்களில் துர்கா பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தீபாவளியை போல களைக்கட்டும். இந்நிலையில், அம்மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற துர்கா பூஜை நிகழ்ச்சியில் மாடலிங் பெண்கள் சிலர் அரைகுறை ஆபாச உடையுடன் மேடை ஏறியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
சிலருக்கு சாப்பிட்டதுமே வயிறு உப்புசம் ஆகி நெளிய ஆரம்பித்து விடுவார்கள். ஏப்பமும் வந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் அஜீரணம்தான். சாப்பிட்டதும் உடனே உட்காருவோருக்கும், படுப்பவர்களுக்குமே இந்த பிரச்னை ஏற்படுகிறது. சாப்பிட்டு முடித்ததும் அரை டம்ளர் சோம்பு கலந்த வெந்நீரை மிதமான சூட்டில் குடித்துவிட்டு, 10 முதல் 12 நிமிடம் மெதுவாக ஒரு குறுநடை போட்டாலே ஏப்பம், அஜீரணம் எல்லாம் ஓடிவிடும். Share It
கொடை வள்ளல் பட்டியலில் உலகின் எந்த பெரிய கோடீஸ்வரரும் இந்திய தொழில்துறையின் தந்தையான ஜாம்ஷெட்ஜி டாடாவை மிஞ்ச முடியாது. ஆம், இன்றைய பணமதிப்பில், ₹8.6 லட்சம் கோடி ($102.4 பில்லியன்) அளவுக்கு அவர் நன்கொடை வழங்கியுள்ளார். 2-ம் இடத்தில் பில்கேட்ஸ் – மெலிண்டா இணை ($74.6 பில்லியன்) உள்ளனர். கல்வி, மருத்துவ சேவைகளுக்கு இவ்வளவு சொத்துகள் அளித்த இவர், அண்மையில் மறைந்த ரத்தன் டாடாவின் கொள்ளு தாத்தா ஆவார்.
Sorry, no posts matched your criteria.