India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶அக். 13 (புரட்டாசி 27) ▶ஞாயிறு ▶நல்ல நேரம்: 10:45 – 11:45 AM – 3:15 – 4:15 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶ திதி: ஏகாதசி ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: மேற்கு ▶ பரிகாரம்: வெல்லம் ▶ நட்சத்திரம்: அவிட்டம் அ.கா 2.44 ▶யோகம்: சித்த யோகம். இந்தத் தகவலை பகிருங்கள்.
பிரபல தமிழ் நடிகை ஒருவர் ஆண் நண்பருடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ இணையதளங்களில் வைரலாகிறது. அந்த வீடியோவில் இருப்பது உண்மையில் அந்த நடிகை தானா அல்லது அவரை போன்று சித்தரித்து எடுக்கப்பட்ட வீடியோவா என்பது உறுதியாக தெரியவில்லை. இதை இணையதளங்களில் பலரும் வைரலாக்கி வருகின்றனர். இந்த வீடியோ குறித்து அந்த நடிகையும் இதுவரை மறுப்பு வெளியிடவில்லை.
BSF, CISF, CRPF உள்ளிட்ட மத்திய பாதுகாப்பு படைகளில் காலியாக உள்ள 39,481 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே (அக்.14) கடைசி நாளாகும். SCC மூலம் 2025 ஜனவரி- பிப்ரவரியில் இந்த வேலைகளுக்கு தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் பணி கடந்த மாதம் 5ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. நாளை இரவு 11 மணியுடன் இந்த அவகாசம் முடிகிறது. இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
அண்ணாமலை பல்கலை.யால் வழங்கப்படும் பி.லிட்டிற்கு தமிழக அரசு அங்கீகாரம் அளித்திருப்பதை டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். அண்ணாமலை பல்கலையின் பி.லிட் பட்டம் அரசு வேலை வாய்ப்புகளில் பி.ஏ. தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு சமமானது என்று உயர்கல்வித்துறை அறிவித்திருப்பதாகவும், இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்றும், இது பாமகவின் குரலுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தபால் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறது. அந்தத் திட்டங்களில் 5 ஆண்டு கால வரம்பை கொண்ட எப்.டி. திட்டமும் ஒன்றாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் ₹5 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்கு பிறகு ₹7.24 லட்சம் கிடைக்கும். அதாவது, 5 ஆண்டுகளுக்கு வட்டியாக ₹2.24 லட்சம் கிடைக்கும். இது 7.5% வட்டியாகும். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நாளை முதல் 3 நாள்களுக்கு RMC மிகக் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று திருப்பூர், கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. நாளை விழுப்புரம், கடலூரிலும், 15ஆம் தேதி செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரத்திலும், 16ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூரிலும் மிக கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. SHARE IT
அணியை விட யாரும் பெரியவர்கள் கிடையாது என்று இந்திய டி20 அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது குறித்து பேட்டியளித்த அவர், ஒரு அணியாக அனைவரும் பல சாதனைகளை படைத்திருப்பதாக கூறினார். சுயநலமில்லாத வீரர்கள் அணியில் இருக்க வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். சூரியகுமார் கூறுவது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஓடிடியை காணும் சிறார்கள், இளைஞர்கள் எதிர்மறை எண்ணங்களால் பாதிக்கப்படுவதாக RSS தலைவர் மோகன் பாகவத் கவலை தெரிவித்துள்ளார். ஓடிடியில் உள்ள பல நிகழ்ச்சிகள் அறுவெறுப்பை தருவதாகவும் அவர் கூறியுள்ளார். இக்காட்சிகளை குழந்தைகள் காண்பதை தடுக்க உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்க.
இன்று (அக். 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பாஜக ஒரு தீவிரவாத கட்சி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை நகர்ப்புற நக்சல்கள் கட்டுக்குள் வைத்திருப்பதாக PM மோடி குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள கார்கே, பழங்குடியினர், எஸ்சி பிரிவினருக்கு எதிராக இழைக்கப்படும் தாக்குதல், குற்றங்களுக்கு பொறுப்பு என்ற வகையில் பாஜக ஒரு தீவிரவாத கட்சி என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.