India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை எதிரணியினரை ஒயிட் வாஷ் செய்த அணி என்ற வரலாற்று சாதனையை இந்திய அணி புரிந்துள்ளது. இதுவரை இந்திய அணி 34 தொடர்களில் விளையாடியுள்ளது. இதில் எதிர் அணிகளை இந்திய அணி 10 முறை ஒயிட் வாஷ் செய்துள்ளது. அவற்றில் நேற்றுடன் முடிந்த வங்கதேச தொடரும் அடங்கும். இந்தியாவுக்கு அடுத்து பாக். (8), ஆப்கன் (6), ஆஸி (5), இங்கி. (4) அதிகமுறை எதிர் அணிகளை ஒயிட் வாஷ் செய்துள்ளன.
50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல்முறையாக சஹாரா பாலைவனத்தில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மொரோக்காவின் தென்கிழக்கு பகுதியில் வழக்கத்திற்கு மாறாக 2 நாள்களாக திடீர் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, அங்குள்ள இரிகி ஏரி நிரம்பியது. இந்த திடீர் மழைக்கு 20 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
டீ குடிக்கையில் சிகரெட்டையும் சேர்த்து புகைப்பதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள், இது தீவிர உடல்பிரச்னையை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர். இதனால்,
புற்றுநோய், ஆண்மை யின்மை, பக்கவாதம், மாரடைப்பு, அஜீரணம், மலச்சிக்கல், அல்சர் ஆகியவை ஏற்படக்கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பழக்கத்தை கைவிட முடியவில்லையேல், மருத்துவரை உடனடியாக அணுகவும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
டி20 கிரிக்கெட்டில் கோலியின் சாதனையை 3 இன்னிங்ஸ்களில் சூரியகுமார் யாதவ் தவறவிட்டுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் அவர் 75 ரன் குவித்தார். இதன்மூலம் டி20இல் அதிவேகமாக 2,500 ரன்களை கடந்த 2ஆவது இந்திய வீரர் ஆனார். இதில் முதல் நபராக கோலி உள்ளார். கோலி 68 இன்னிங்ஸ்களில் 2,500 ரன்களை கடந்துள்ளார். ஆனால், சூரியகுமார் யாதவ் 71 இன்னிங்ஸ்களை எடுத்துள்ளார்.
சென்னையில் கலைஞர் பூங்கா திறந்த 5 நாளில் ஜிப்லைன் பழுதடைந்து விட்டதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் பக்க பதிவில், ஜிப்லைன் பழுதடைந்து, 2 பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி கயிறு மூலம் கீழிறக்கப்பட்டதாக கூறியுள்ளார். நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் கொள்கை கொண்ட திமுக அரசு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1956: மெட்ராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் வைக்கக்கோரி 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் உயிரிழந்தார். 1679: மசூலிபட்டினத்தை புயல் தாக்கியதில் 20,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 1987: பிரபல பாலிவுட் நடிகர் கிசோர் குமார் காலமானார் .1990: பீஸ்ட், மாயாவி படங்களின் நாயகி பூஜா ஹெக்டே பிறந்தார்
1993: இந்திய கிரிக்கெட் அணி வீரர் அனுமா விஹாரா பிறந்தநாள்
டாடா மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில், இந்தியாவின் பெருமைக்குரிய மகனும், இஸ்ரேல்-இந்தியா நட்புறவின் சாம்பியனுமாகிய டாடா மறைவுக்கு தாமும், இஸ்ரேலில் உள்ள பலரும் துக்கம் அனுஷ்டிப்பதாக தெரிவித்துள்ளார். தனது இரங்கலை டாடா குடும்பத்திற்கு தெரிவிக்கும்படியும் PM மாேடியை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
2013ஆம் ஆண்டில் ஷாருக், சல்மான் இடையே மறைமுக மோதல் இருந்த நிலையில், ஈது நிகழ்ச்சிக்கு 2 பேரையும் சித்திகி அழைத்தார். இதில் பங்கேற்ற சல்மான் கான் தந்தையின் இருக்கை அருகே ஷாருக்கிற்கு இருக்கை இருக்க, 2 பேரும் பேசினர். அப்போது வந்த சல்மான் கான், ஷாருக்கை கட்டியணைக்க மோதல் முடிவுக்கு வந்தது. திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க இதை சித்திகி செய்ததாக கூறப்படுவதுண்டு.
மன அழுத்தத்தை குறைக்க மனநல ஆலோசகர்கள் சில பரிந்துரை செய்கின்றனர். 1) உடற்பயிற்சி: காலையில் உடற்பயிற்சி செய்கையில் உடலில் இருந்து வெளிப்படும் என்டோமோர்பின், கவலை, வருத்தத்தை நீக்கும் 2) சத்தான உணவு: சத்தான உணவை காலையில் உட்காெண்டால், மூளை வலிமை அதிகரிக்கும். உற்சாகத்தை தரும் 3) சூரிய ஒளி: சூரிய ஒளி புது தெம்பு தரும் 4) மெடிடேசன்: அமைதியை தந்து, மனதை தெளிவாக்கும். மன அழுத்தம் போக்கும்.
இஸ்ரேலுக்கு உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வளைகுடா நாடுகளுக்கு ஈரான் மிரட்டல் விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் எந்நேரமும் பதிலடி கொடுக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு சவூதி, ஜோர்டான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் தங்களது வான்பகுதியை அனுமதித்தால் அந்நாடுகள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் மிரட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.