India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤முத்தரப்பு கால்பந்து தொடர்: இந்தியா, வியட்நாம் அணிகள் மோதிய நட்பு கால்பந்து போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது. ➤ஏசியான் டேபிள் டென்னிஸ்: மகளிர் இரட்டையர் பிரிவின் அரையிறுதிக்கு இந்தியாவின் ஆயிஹா – சுதிர்தா ஜோடி முன்னேறியது. ➤குளோபல் செஸ் லீக்: அலாஸ்கன் நைட்ஸ் (24 புள்ளி), திரிவேணி (18) அணிகள் பைனலுக்கு முன்னேறின. ➤ஹாங்காங் சிக்சஸ் தொடருக்கான இந்திய அணி ராபின் உத்தப்பா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
➤இஸ்ரேலுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதாக நிகரகுவாவின் துணை ஜனாதிபதி முரில்லோ அறிவித்துள்ளார் ➤இஸ்ரேலுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவி செய்ய வேண்டாம் என அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ➤வங்கதேசத்தில் துர்க்கை பூஜை மண்டபம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ➤இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானைச் சேர்ந்த 6 எரிவாயு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
‘கூலி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் 16ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பை பல்வேறு கட்டங்களாக படக்குழு நடத்தி வருகிறது. முன்னதாக, இப்படம் LCUஇல் இல்லாமல், தனி ஜானரில் உருவாக்கவுள்ளதாக லோகேஷ் தெரிவித்திருந்தார்.
22 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தி.மலை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோயிலில் மகரவிளக்கு சீசனில் தரிசன நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மகரவிளக்கு சீசனையொட்டி அக்கோயில் நடை, நவ.15ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த ஆண்டு சீசன் முதலே தரிசன நேரத்தை 18 மணி நேரமாக அதிகரிப்பதென முடிவு செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.
மழைக்காலத்தில் ஏற்படும் சைனஸ், இருமல், மூக்கடைப்பு, ஜலதோஷம், தலைவலி, உடல்வலி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் நொச்சி தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைப்பிடி நொச்சி இலை, சுக்கு, மிளகு, துளசி, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான நொச்சி தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.
காவிரி பாயும் பெருமை வாய்ந்த சோழ மண்டலத்தின் திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ளது ஒப்பிலியப்பன் திருக்கோயில். 108 திவ்ய தேசங்களில் மார்க்கண்டேயத் தலமென்ற பெருமை பெற்ற இந்த திருத்தலத்தில் மார்க்கண்டேய முனிவருக்கு திருமால் காட்சி தந்து, மோட்ஷம் அளித்ததாக புராணம் கூறுகிறது. இங்கு சென்று பூமாதேவி – ஒப்பிலியப்பன்னுக்கு துளசி மாலை சாற்றி, நெய் தீபமேற்றி வழிபட்டால், திருமணம் வரம் கிட்டும் என்பது ஐதீகம்.
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, டி20 வடிவ கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன், இசான் கிஷன் ஆகிய 4 பேர் இடையே போட்டி காணப்படுகிறது. இவர்களில், வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் சாம்சன் அதிரடியாக சதமடித்து கலக்கினார். இந்த 4 பேரில் யாருக்கு உங்கள் ஓட்டு? கமெண்ட்டை கீழே பதிவு பண்ணுங்க.
மனித உரிமை போராளி பேராசிரியர் G.N.சாய்பாபா காலமானார். தண்டுவட பாதிப்பால் உடலின் பல பாகங்கள் செயல் இழந்தபோதும் மனித உரிமை, ஜனநாயக செயல்பாடுகளில் அவர் தொடர்ச்சியாக ஈடுபட்டார். 2014ல் தன் மீது சுமத்தப்பட்ட UAPA வழக்கை பொய் என நிரூபித்து 2024இல் விடுதலையானார். தீவிர உடலியல் பிரச்னைகளால் ஹைதராபாத் NIMS மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்றிரவு பூவுலகை விட்டு மறைந்தார்.
* மண்டியிட்டு வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.
* விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையேல் உரம்.
* புரட்சி, மரத்திலிருந்து தானாக விழும் ஆப்பிள் அல்ல, நாம்தான் விழச் செய்ய வேண்டும்.
* உலகின் எங்கோ நடக்கும் முறையின்மைக்காக உன் மனம் கொதித்தால், நீயும் எனது தோழனே.
* எங்கெல்லாம் அடக்கப்பட்டோரின் இதயத் துடிப்பு கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.
Sorry, no posts matched your criteria.