India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு உதவ TN அரசு கட்டணமில்லா உதவி எண்களை அறிவித்துள்ளது. 18002021989, 14566 ஆகிய 2 எண்களில், ஏதாவது ஒன்றில் தொடர்பு கொண்டு, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் வழக்குப்பதிவு செய்தல் மற்றும் புகார் தொடர்பான முறையீடுகள் குறித்து கேட்டு பயன் பெறலாம் என்று TN அரசு கூறியுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிரலாமே.
மேம்பட்ட அம்சங்களுடன் Pulsar N125 என்ற புதிய மாடல் பைக் வரும் 16ஆம் தேதி அறிமுகமாகும் என பஜாஜ் அறிவித்துள்ளது. 125 சிசி, சிங்கிள் சிலிண்டர் மோட்டார் கொண்ட இந்த பைக்கின் விலை ₹95,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் TVS Raider 125 மற்றும் Hero Xtreme 125R ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்சருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அக்.13இல் No Bra Day கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் 14 விநாடிக்கும், இந்தியாவில் 4 நிமிடங்களுக்கும் பெண் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. ஒரு நாள் ப்ரா இல்லாமல் செல்வது ஆறுதலை அளிக்கும் என்று பெண் உணர்கிறார்கள். பல தனிநபர்கள் உள்ளாடைகளின் இறுக்கத்திலிருந்து உடலுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகின்றனர்.
1) இந்தியாவில் வெளியான முதல் செய்தித்தாளின் பெயர் என்ன? 2) EPF என்பதன் விரிவாக்கம் என்ன? 3) ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவர் யார்? 4) வள்ளலார் பாட்டை ‘மருட்பா’ என்று கூறியது யார்? 5) நீந்தத் தெரியாத விலங்கு எது? 6) டென்மார்க் நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன? 7) ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இரு வேறு காட்சிகளை காணும் பறவை எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
கலைஞர் பூங்கா ஜிப்லைன் பழுது என தவறான தகவல் பரப்புவதா? என EPSக்கு அமைச்சர் M.R.K. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தனக்கு வேண்டப்பட்டவர் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலத்தை மீட்டு பூங்காவாக மாற்றியதால் ஈபிஎஸ்க்கு கோபம் என விமர்சித்த அவர், ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது, பழுதடைவதற்கு இதில் ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.
விஜய், ரஜினி ரசிகர்கள் இடையேயான சண்டை இணையத்தில் வலுத்துள்ளது. சமீபத்தில் வெளியான ‘வேட்டையன்’ திரைப்படத்தை கடுமையாக ட்ரோல் செய்து, விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பதிலடியாக களம் இறங்கியுள்ள ரஜினி ரசிகர்கள், விஜய்யின் முந்தைய படங்களையும், அவரது அரசியல் கட்சியையும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தனிமனித தாக்குதலுடன் கூடிய சில மீம்கள் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளன.
சிக்கனை நன்கு கழுவி தனியாக வைக்கவும். பின், வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டைச் சேர்த்து, பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். பின் சிக்கனை சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைக்கவும். பின், மஞ்சள், மிளகாய், கறி மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு, 1/4 டம்ளர் நீரை தெளித்து மூடி வைத்து, மிதமான தீயில் 7-8 நிமிடம் வேக வைத்தால், சுவையான சிக்கன் கிரேவி ரெடி.
உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 105ஆவது இடத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதீத பட்டினி நிலவும் 42 நாடுகளில் இந்தியா, பாக்., ஆப்கன், வங்கதேசம், நேபாள், இலங்கை ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன. இந்தியாவில் 5 வயதுக்கு முன் 2.9% குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், 13.7% பேர் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பதாகவும் தரவுகள் காட்டுகின்றன.
*நீருக்குப் பதிலாக பால் கலந்து செய்தால், கேசரி நல்ல மணத்துடன் இருக்கும். *நெய் கெட்டியாகிவிட்டால் ஸ்பூனை சூடாக்கி வைத்து எடுத்தல் சுலபமாக வரும். *கட்லெட் செய்யும்போது பிரட் தூள் இல்லையெனில் ரவையை மிக்ஸியில் அரைத்து பயன்படுத்தலாம். *சப்பாத்தி மாவுடன் சோயா மாவைச் சேர்த்து பிசைந்து செய்தால் சப்பாத்தி சாஃப்ட்டாக வரும். *பாலை லேசாக சூடுபடுத்தி சர்க்கரை கரைத்து உறை ஊற்றினால் தயிர் கெட்டியாக கிடைக்கும்.
‘முகமூடி’ திரைப்படம் தனக்கு லாபம் அளித்ததாக தயாரிப்பாளர் தனஞ்செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இப்படத்தை விருப்பமே இல்லாமல் வெளியிட்டதாகக் கூறினார். படம் பிடிக்கவில்லை எனக் கூறியதால், மிஷ்கின் ப்ரொமோஷனுக்கே வராத சூழலில், தானும், ஜீவாவும் மட்டுமே ப்ரொமோஷன் செய்ததாகவும் தெரிவித்தார். தனக்கு இப்படம் லாபம் தந்தாலும், தியேட்டர் ஓனர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் நஷ்டம்தான் என்றார்.
Sorry, no posts matched your criteria.