news

News October 13, 2024

ரயில் விபத்தில் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது எப்படி?

image

கவரப்பேட்டை ரயில் விபத்தில் உயிரிழப்பு ஏற்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பெட்டிகள் கோரமாக சிதறி கிடந்தாலும் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர். விரைவு ரயில் மோதிய சரக்கு ரயில் காலியாக இருந்ததால், அதன் அதிர்வுகளை சரக்கு ரயில் பெற்றுக்கொண்டுள்ளது. ஒருவேளை சரக்கு ரயிலில் காலியாக இல்லாமல் இருந்தால், மிகப்பெரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்க கூடும்.

News October 13, 2024

நாங்க ரெடியாதான் இருக்கிறோம்: துணை முதல்வர்

image

பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். மழை பாதிப்புகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் TN ALERT என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை அறிமுகம் செய்த உதயநிதி, அடுத்த சில நாள்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிமாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

News October 13, 2024

₹200 நோட்டுகளை திரும்ப பெற்ற RBI : காரணம் என்ன?

image

₹2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட நிலையில், தற்போது ₹137 கோடி மதிப்புள்ள ₹200 நோட்டுக்களை RBI திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்தமாக ₹200 நோட்டுகள் திரும்பப் பெறப்படுமா அல்லது செல்லாதவை என அறிவிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், ₹200 நோட்டுக்கள் அதிக தேய்மானம் அடைந்ததுடன் கிழிந்ததால் அவை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News October 13, 2024

தியாகி சங்கரலிங்கனாரை நினைவில் ஏந்துவோம்!

image

தமிழர்களின் நிலப்பரப்பான மெட்ராஸ் மாகாணம், ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் அடைய முக்கிய காரணமாக இருந்தவர் தியாகி சங்கரலிங்கனார். மொழிவாரி மாநில உருவாக்கம், பூரண மது ஒழிப்பு உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி 27.7.1956 அன்று உண்ணாவிரத அறப்போராட்டத்தை தொடங்கினார். கொள்கைக்காக உலகத்திலேயே அதிக நாட்கள் (76) உண்ணாது போராடி (13.10.1956) உயிர் நீத்த அந்த மாமனிதரை நினைவிலேந்தி வீரவணக்கம் செலுத்துவோம்.

News October 13, 2024

குறைந்தது காய்கறி விலை

image

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை முடிந்த நிலையில், காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில், 2 நாளுக்கு முன் ₹100க்கு விற்பனையான தக்காளி இன்று ₹40 – ₹60 வரை விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு ₹30 – ₹45 வரையும், சின்ன வெங்காயம் ₹40 – ₹80 வரையும், கத்திரிக்காய் ₹10 – ₹30 வரையும், முட்டைகோஸ் ₹10 – ₹15 வரையும், அவரைக்காய் ₹25 – ₹40, கேரட் ₹20 – ₹30 வரையும் விற்பனையாகிறது.

News October 13, 2024

Space Science: செவ்வாய் கிரகத்தில் மனித முகம்?

image

செவ்வாய் கோளின் தரைப்பகுதியில் நாசாவின் ‘பெர்சிவிரன்ஸ் ரோவர்’ 2021 பிப்.18இல் இருந்து ஆய்வில் ஈடுபட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, செவ்வாயின் Jezero Craterஇல் பாறை கற்களை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இதில் ஒன்று, செங்குத்தாக பார்ப்பதற்கு மனித முகத்தின் வடிவம் போல உள்ளது. 45 km அகலமுள்ள இப்பகுதி 370 கோடி ஆண்டுகளுக்கு முன் நீர் வெள்ளம் சூழ்ந்ததாக இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

News October 13, 2024

நூல்களை அச்சிட TN அரசின் ₹10 லட்சம் உதவி வேண்டுமா?

image

தமிழில் அரிய கலை நூல்களை அச்சிட 5 நூல்கள் வரை நூலாசிரியர்களுக்கு ₹2 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை TN அரசு உதவி செய்கிறது. இந்த உதவித் தொகையை பெற விரும்பும் நூலாசிரியர்கள், “தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28” என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு வருகிற 25ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News October 13, 2024

கனவு படம் குறித்து மனம் திறந்த லோகேஷ்

image

தனது கனவு திரைப்படமான ‘இரும்பு கை மாயாவி’ மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த அவர், கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு 5ஆண்டுகளுக்கு பின் இப்படத்தை தொடங்கவுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், தனது முந்தைய பட ஜானர் போல துப்பாக்கி இல்லாமல், லவ், காமிக்ஸ் கலந்த ஃபேன்டசி படமாக அப்படம் இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

News October 13, 2024

Recipe: வல்லாரை கீரை பாயாசம் செய்வது எப்படி?

image

வல்லாரை கீரை (100g), தேங்காய் துருவலை அரைத்து, வடிகட்டி சாறை எடுத்து கொள்ளவும். 2 மணிநேரம் நீரில் ஊற வைத்த பச்சரிசி (1 கரண்டி), பாதாம், முந்திரி ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். பின் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் & பாலை ஊற்றி கொதிக்க விடவும். அத்துடன் ஏலக்காய் தூள், வடிகட்டிய வல்லாரைப் பால், பச்சரிசி கலவை, வெல்லப் பாகைச் சேர்த்து வேகவைத்து இறக்கினால் சுவையான வல்லாரை பாயாசம் ரெடி.

News October 13, 2024

பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்தி

image

மழைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மின் விபத்துக்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒரே நாளில் அறுந்து கிடந்த மின் கம்பியை அகற்ற முயன்றபோதும், அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தும் 3 பேர் உயிரிழந்தனர். எனவே, மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகில் செல்ல வேண்டாம். மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி போன்றவற்றைக் கட்டக்கூடாது. வீட்டில் மின்கசிவு இருந்தால் உடனே மின்வாரியத்தை அணுகவும்.

error: Content is protected !!